ஐரோப்பா

நாட்டின் பாதுகாப்பு செலவீனங்களை அதிகரிக்கும் சுவிட்சர்லாந்து அரசாங்கம்!

சுவிட்சர்லாந்து அராசாங்கம் நாட்டின் பாதுகாப்பு செலவீனங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளது.

இதன்படி அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான பாதுகாப்பு செலவீனங்கள் 19 சதவீதத்தால் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள போர்கள் உட்பட உலகளாவிய உறுதியற்ற தன்மையின் அதிகரிப்புகளை கருத்தில் கொண்டு மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ செலவினங்களுக்கான நடுத்தர மற்றும் நீண்ட தூர கணிப்புகளை வகுத்த பாதுகாப்பு அமைச்சர் வயோலா அம்ஹெர்ட், கடந்த 30 ஆண்டுகளில் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் விளைவாக, “இராணுவம் பலவீனமடைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

“அடுத்த 12 ஆண்டுகளில் இராணுவம் எவ்வாறு உருவாக வேண்டும் என்பதை நாங்கள் முதன்முறையாக சுட்டிக்காட்டுகிறோம்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்