செய்தி

பிரான்ஸில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இருவரின் சடலம்!

  • February 26, 2024
  • 0 Comments

பிரான்ஸில் இருவரின் உடலங்களை துறைமுகப்பகுதியில் நீரிற்குள் இருந்து, பொலிஸார் மீட்டுள்ளனர். இவர்களின் மரணத்திற்கு காரணங்கள் எதுவும் இன்னமும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 47 வயதுடையவரின் உடலம், நேற்றுப் பகல் இந்தப் பகுதியில் உள்ள நீச்சல் நிலையப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், இவர் பிரெஸ்ட் நகரத்தில் வசிப்பவர் எனக் கண்டறியப்பட்டுள்ளது பின்னர் 52 வயதுடைய இரண்டாவது நபரின் உடலம் நீரில் மிதக்கத் தொடங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இவரின் உடலில் எந்தவிதக் காயங்களோ, சந்தேகத்திற்கிடமான அடையாங்களோ இருக்கவில்லை […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் பல் சிகிச்சைக்காக செல்லும் மக்களுக்கு முக்கிய தகவல்

  • February 26, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் பல் வைத்தியர்கள் பாவித்து வருகின்ற இரசாயன பொருளை பாவிக்க கூடாது என ஐரோப்பிய ஒன்றியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது பற்களில் துளை ஏற்பட்டு இருந்தால் அதை மூடுவதற்கு அமல்கம் என்று சொல்லப்படுகின்ற ஒரு ரசாயன பொருளை பல் வைத்தியர் பயன்படுத்துகின்றார்கள். இந்நிலையில் தற்பொழுது ஐரோப்பிய ஒன்றியமானது இந்த அமல்கம் என்ற சொல்லப்படுகின்ற இரசாயன பொருட்களை பற்களில் துளை ஏற்படும் பொழுது அதனை அடைப்பதற்கு பயன்படுத்த வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இவ்வகையான […]

இலங்கை செய்தி

இலங்கை ஜனாதிபதியின் விசேட உத்தரவு

  • February 26, 2024
  • 0 Comments

இலங்கையில் தங்கியிருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமைச்சரவையின் அனுமதியின்றி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது. ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட வீசா நீடிப்புகளை இரத்து செய்வதற்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கவில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பா

ஆயுத உற்பத்தியை மூன்று மடங்காக உயர்த்தியுள்ள உக்ரைன்

கடந்த ஆண்டு உக்ரைன் தனது ஆயுத உற்பத்தியை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது மற்றும் 500 நிறுவனங்கள் இப்போது நாட்டின் பாதுகாப்புத் துறையில் வேலை செய்கின்றன என்று கிய்வின் மூலோபாய தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் இந்த ஆண்டு “வெடிமருந்து உற்பத்தியை கணிசமாக அதிகரிக்க” திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ரஷ்ய படைகளுக்கு எதிரான போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன்களில் 90% உக்ரைனில் தயாரிக்கப்பட்டதாகக் கூறினார்.

இலங்கை

ஆற்றில் நீராடச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த கதி

லிந்துலை – நாகசேனை பகுதியில் ஆற்றில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் இச்சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தலவாக்கலை பிரதேசத்தில் இருந்து இளைஞர்கள் சிலர் லிந்துலை – நாகசேனை பகுதிக்கு சென்று ஆற்றில் நீராடியுள்ளனர். அதன்போது, அவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில், பிரதேசவாசிகளால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் குறித்த இளைஞர் சடலமாக […]

பொழுதுபோக்கு

GOAT ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப வரும்? ரசிகர்களுக்கு வெங்கட் பிரபு கொடுத்த ஷாக்

  • February 25, 2024
  • 0 Comments

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வருகிற கோட் படத்தில் மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன், சினேகா, லைலா போன்ற பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதை தொடர்ந்து ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளில் கோட் படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த போஸ்டர்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். அதற்கு இப்போது […]

ஆசியா

போலந்தில் ரஷ்ய தூதுவரின் வீட்டில் சாணத்தை கொட்டி போராட்டம்

  உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பின் இரண்டாம் ஆண்டு நிறைவு எதிர்ப்பாளர்கள் போலந்திற்கான மாஸ்கோவின் தூதரின் வீட்டிற்கு வெளியே சாணக் குவியல் கொட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வார்சாவில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் உரக் குவியலின் மீது “Z” என்ற எழுத்தில் இரத்தம் தோய்ந்த ரஷ்யக் கொடியை வைத்து அதில் “ரஷ்யா = மலம்! நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் எங்களுக்கு வேண்டாம்! வெளியேறு!” என்று ஒரு அடையாளத்தை […]

இலங்கை

”ஜனாதிபதி கல்வி புலமைப்பரிசில் திட்டம் 2024/2025” அறிமுகம் : வெளியான முக்கிய அறிவிப்பு

இலங்கையின் மாணவர்களின் கல்விக்கு ஆதரவளிக்கும் முயற்சியில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க “ஜனாதிபதி கல்வி புலமைப்பரிசில் திட்டம் 2024/2025” அறிமுகப்படுத்தினார். ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்ட இந்த விசேட புலமைப்பரிசில் முயற்சியானது, நாட்டிலுள்ள அனைத்து 10,126 பாடசாலைகளிலும் தரம் 01 முதல் தரம் 11 வரையான 100,000 மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கையிலுள்ள அனைத்து 10,126 பாடசாலைகளையும் உள்ளடக்கிய தரம் 01 முதல் தரம் 11 வரையிலான ஒரு இலட்சம் (100,000) மாணவர்களுக்கு வருடாந்தம் […]

பொழுதுபோக்கு

முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து அடுத்த ரவுண்டுக்குத் தயாராகி வரும் த்ரிஷா!

  • February 25, 2024
  • 0 Comments

சினிமாவில் இப்போது முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து அடுத்த ரவுண்டுக்குத் தயாராகி வருகிறார் நடிகை த்ரிஷா. தென்னிந்திய திரையுலகில் இருபது வருடங்களுக்கும் மேலாக ரசிகர்களுக்குப் பிடித்த நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. நாற்பது வயதை நெருங்கி விட்டாலும் இப்போதும் அவருக்கு மார்கெட் குறையவில்லை. ‘96’ படம் மூலம் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கினார் த்ரிஷா. இது ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவை கதாபாத்திரம் மூலம் உச்சம் பெற்றது என்றே சொல்லலாம். அதற்கடுத்து நடிகர் விஜயுடன் அவர் ஜோடி போட்ட […]

வட அமெரிக்கா

கனடா- அடைக்கலம் கோரி குளிரில் காத்திருந்த ஏதிலிப் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை!

  • February 25, 2024
  • 0 Comments

கனடாவில் கடும் குளிரில் காத்திருந்த பெண் ஏதிலிக் கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏதிலி முகாமொன்றில் தங்கியிருப்பதற்காக காத்திருந்த நிலையில் குறித்த பெண் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.கென்யாவைச் சேர்ந்த 46 வயதான நான்கு பிள்ளைகளின் தாயான டெல்பினா நிகி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மிஸ்ஸிசாகாவில் ஏதிலி முகாமொன்றில் அடைக்கலம் பெற்றுக் கொள்வதற்காக குளிரில் வெளியே காத்திருந்த நிலையில் இவ்வாறு பெண் உயிரிழந்துள்ளார். ஏதிலிக் கோரிக்கையாளர்கள் நீண்ட நேரம் குளிர்ந்த காலநிலையில் வெளியே காத்திருக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நீண்ட நேரம் […]