ஐரோப்பா

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் உள்ள கட்டிடத்தை குறிவைத்து தாக்குதல்!

  • March 2, 2024
  • 0 Comments

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தை ஆளில்லா விமானம் தாக்கி சேதப்படுத்தியதாக ரஷ்ய அரசு செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்ததாகவும், அவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனிய ஆளில்லா விமானத்தால் அடுக்குமாடி கட்டிடம் தாக்கப்பட்டதாக Mash செய்தி தளம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

உலகம்

எதிர்பாராத அளவில் வளர்ச்சிக் கண்ட பிரேசிலின் பொருளாதாரம்!

  • March 2, 2024
  • 0 Comments

பிரேசிலின் பொருளாதாரம் 2023 இல் 2.9% வளர்ச்சியடைந்ததுள்ளதாக புள்ளியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் நிர்வாகத்தின் முதல் ஆண்டில் எதிர்பார்ப்புகளை முறியடித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. IBGE ஆல் அறிவிக்கப்பட்ட எண்ணிக்கை பல பொருளாதார வல்லுனர்களைக் கவர்ந்தது, கடந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர்களின் ஒட்டுமொத்த கணிப்பு 2023 இல் 0.8% வளர்ச்சி மட்டுமே இருக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டில் பொருளாதாரமான எதிர்பாராத விதமாக 3 வீதம் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட […]

இலங்கை

இலங்கை : நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என கெஹலிய அறிவிப்பு!

  • March 2, 2024
  • 0 Comments

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்ல, நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு தனது பிரத்தியேக செயலாளர் ஊடாக கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார். சுகயீனம் காரணமாக நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை

போதிய விமானங்கள் இல்லாமல் திண்டாடும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம்!

  • March 2, 2024
  • 0 Comments

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அடிக்கடி தாமதம் மற்றும் ரத்துச் சம்பவங்களுக்கு போதுமான விமான இருப்பு இல்லாததே காரணம் என தெரியவந்துள்ளது. தற்போது சேவைக்கு சொந்தமான பத்து விமானங்களின் குத்தகை காலம் விரைவில் முடிவடையும் என்றும், எனவே மேலும் பத்து விமானங்களை உடனடியாக கையகப்படுத்தாவிட்டால், நிலைமை மேலும் மோசமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​இலங்கையில் இருபத்தி இரண்டு விமானங்கள் உள்ளன, ஆனால் அவற்றில் பதினெட்டு விமானங்கள் மட்டுமே விமானங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. எஞ்சிய விமானங்கள் தொழில்நுட்ப கோளாறு மற்றும் புதுப்பிக்க தேவையான […]

ஆசியா

மும்பை தாக்குதல்: முக்கிய குற்றவாளியான அசிம் சீமா பாகிஸ்தானில் மர்மமான முறையில் உயிரிழப்பு!

  • March 2, 2024
  • 0 Comments

இந்தியாவின் மராட்டிய மாநிலம் மும்பையில் 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் திகதி அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றன. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயது என்ற பயங்கரவாதி மூளையாக செயல்பட்டுள்ளான். ஹபீஸ் சயது தற்போது பாகிஸ்தானில் […]

இலங்கை

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை அமுல்படுத்த திட்டம்!

  • March 2, 2024
  • 0 Comments

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை மீண்டும் அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு சில முட்டை உற்பத்தியாளர்கள் செயற்கையாக முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுத்த முயற்சிப்பதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிலைமையை சமாளிக்கும் வகையில், […]

வட அமெரிக்கா

காசாவில் விமானம் மூலம் நிவாரண பொருட்களை வீச அமெரிக்கா திட்டம்

  • March 2, 2024
  • 0 Comments

இஸ்ரேல் மீது காசாவில் செயல்பட்டுவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலியர்கள் 253 பேரை காசாமுனைக்கு பணய கைதிகளாக கடத்தி சென்றனர். இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இதனிடையே, காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் […]

இலங்கை

இலங்கை : சமன் ரத்நாயக்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்!

  • March 2, 2024
  • 0 Comments

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (01.03) கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர்  சமன் ரத்நாயக்க மாளிகாகந்த நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். சமன் ரத்நாயக்க நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு 9 மணித்தியால விசாரணைகளின் பின்னர்  கைது செய்யப்பட்டார். சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் போதைப்பொருள் வழக்கில் சமன் ரத்நாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை

யாழில் விபத்தில் சிக்கி 19 வயது இளைஞன் பலி!

  • March 2, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பஸ் ஒன்றும் அதே திசையில் பயணித்த சைக்கிளுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். மிசாலை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதியை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொழுதுபோக்கு

12 ஏக்கரில் பிரம்மாண்ட மருத்துவமனை கட்டும் ரஜினிகாந்த்? யாருக்கு தெரியுமா?

  • March 2, 2024
  • 0 Comments

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் 12 ஏக்கரில் மருத்துவமனை ஒன்றை கட்டி அதில் ஏழை எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை திருப்போரூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அங்கு அவர் புதிதாக […]