இலங்கை

கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு ஜனாதிபதி ரணில் அழைப்பு!

  • March 9, 2024
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதன் உயர்மட்டக் குழுவுடன் கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர்களின் கூட்டத்தை வரும் (11.03)கூட்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளை அதன் உயர்மட்டக் குழுவுடன் விவாதிப்பதற்கு பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இக்கூட்டம் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் […]

ஐரோப்பா

ஐரோப்பாவில் போர் வெடிக்காமல் இருக்க : மேற்கத்திய நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு அனைத்து வகையான ஆயுதங்களையும் தடையின்றி வழங்குவதற்கான அவசர வேண்டுகோளை உக்ரைனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா விடுத்துள்ளார். லிதுவேனியாவில் உள்ள வில்னியஸில் பிரான்ஸ் மற்றும் பால்டிக் குடியரசுகளின் வெளியுறவு மந்திரிகளுடனான சந்திப்பைத் தொடர்ந்து அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். “உக்ரைன் ரஷ்யாவை தோற்கடிப்பதற்கும், ஐரோப்பாவில் போர் வெடிக்காமல் இருப்பதற்கும் அனைத்து வகையான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளின் தடையற்ற மற்றும் சரியான நேரத்தில் வழங்க வேண்டியது அவசியம்” என்று அவர் கூறியுள்ளார்.

ஆசியா

பாகிஸ்தானின் 14 ஆவது அதிபராக ஆசிப் அலி சர்தாரி தெரிவு!

  • March 9, 2024
  • 0 Comments

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆசிப் அலி சர்தாரி பாகிஸ்தானின் 14வது அதிபராக இன்று (09.03) இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 68 வயதான சர்தாரி, பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PML-N) ஆகியவற்றின் கூட்டு வேட்பாளராக தேர்தலில் களமிறங்கினார். இந்த தேர்தலில் மொத்தமாக 255 வாக்குகளை அவர் பெற்றுக்கொண்டார். அரசியலமைப்பின் விதிகளின்படி, தேசிய சட்டமன்றம் மற்றும் நான்கு மாகாண சபைகளின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் தேர்தல் கல்லூரியால் புதிய ஜனாதிபதி […]

ஐரோப்பா

உக்ரேனிய மண்ணில் இராணுவ உபகரணங்களை தயாரிக்க பிரான்ஸ் திட்டம்

ரஷ்யாவிற்கு எதிரான போரில் நாட்டுக்கு உதவ பிரான்ஸ் தனது ஆயுத உற்பத்தியாளர்கள் சிலருக்கு தேவையான இராணுவ உபகரணங்களை நேரடியாக உக்ரைன் மண்ணில் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்டின் லெகோர்னு தெரிவித்துள்ளார். “மூன்று பிரெஞ்சு நிறுவனங்கள் உக்ரேனிய நிறுவனங்களுடன், குறிப்பாக ஆளில்லா விமானம் மற்றும் தரை உபகரணத் துறைகளில், உக்ரேனிய மண்ணில் உதிரி பாகங்களை உற்பத்தி செய்வதற்கும், எதிர்காலத்தில் வெடிமருந்துகள் தயாரிப்பதற்கும் கூட்டாண்மை அமைக்கும்” என்று அவர் கூறியுள்ளார். “இந்த கோடையில் முதல் தயாரிப்பு அலகுகள் இயங்கும் […]

இலங்கை

வேட்பாளர் தொடர்பில் தனிப்பட்ட கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் – மஹிந்த!

  • March 9, 2024
  • 0 Comments

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் தனிப்பட்ட கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தமது கட்சி இன்னும் முடிவெடுக்காத நிலையில், அது தொடர்பில் தனிப்பட்ட கருத்துக்களை முன்வைப்பதன் மூலம் கட்சியின் பொறிமுறைக்கு சேதம் ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் தலைவர்கள் தமது தனிப்பட்ட கருத்துக்களுடன் செல்லாமல் பொது அரசியல் கருத்துடன் மக்களை ஒன்றிணைக்க வேண்டும் எனவும் […]

ஐரோப்பா

ஜேர்மன் பள்ளிக்குள் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்!

  • March 9, 2024
  • 0 Comments

ஜேர்மன் நகரமொன்றில், பள்ளி ஒன்றிற்குள் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்த நிலையில், அவரிடம் ஆயுதங்கள் இருப்பதும் தெரியவந்ததைத் தொடர்ந்து பொலிஸார் அங்கு குவிந்தனர். நேற்று காலை உள்ளூர் நேரப்படி 7.15 மணியளவில், ஜேர்மன் தலைநகர் பெர்லினுக்கருகிலுள்ள Brandenburg என்னுமிடத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றிற்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்த நிலையில், அவரிடம் கத்தி ஒன்றும், துப்பாக்கி ஒன்றும் இருந்ததைக் கவனித்தவர்கள் பொலிஸாருக்கு தகவலளித்தனர். உடனடியாக பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டனர். பொலிஸார் அவரை சூழ்ந்துகொண்டு மடக்கிப் பிடித்த […]

இலங்கை

அனுராதபுரம் விபத்து தொடர்பில் சாரதி கைது!

  • March 9, 2024
  • 0 Comments

அனுராதபுரம் ரம்பேவ பிரதேசத்தில் விபத்துக்குள்ளான கெப் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த விபத்தில்  மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இரண்டு பெண்கள் காயமடைந்தனர். சம்பவத்தைத் தொடர்ந்து, வண்டியின் சாரதி அங்கிருந்து தப்பியோடினார், ஆனால் பின்னர் இரண்டு பயணிகளுடன் அனுராதபுரம்-யாழ்ப்பாணம் சந்திப்பில் கைது செய்யப்பட்டார். வாகனம் பழுதுபார்க்கும் கடையொன்றின் ஊழியர்கள் என அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்கள், இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 18 வயது நிரம்பிய ஓட்டுநருக்கு சரியான […]

இலங்கை

கனடாவில் இலங்கையர்கள் அறுவர் கொடூரமாக கொலை: ஒட்டாவா நகர முதல்வர் வெளியிட்ட தகவல்

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் கொல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளடங்களாக 6 இலங்கையர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அந்த நாட்டு நேரப்படி இன்று முற்பகல் 11 மணியளவில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டாவா நகர முதல்வரினால் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் அந்த நாட்டு அரசியல் தரப்பினர் மற்றும் கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹர்ஷ குமார நவரட்ன வேறதுவ உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் சம்பவத்தில் உயிரிழந்த குறித்த 6 இலங்கையர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதற்காக கனடாவின் பால்மேடியா […]

இலங்கை

மகளிர் தினத்தில் போதைப்பொருள் பார்ட்டி : 5 மாணவிகள் உட்பட 27 பேர் கைது

  • March 9, 2024
  • 0 Comments

மகளிர் தினமான வெள்ளிக்கிழமை (08) இரவு பல்கலைக்கழக மாணவி ஒருவரின் பிறந்தநாள் விழாவிற்கு பேஸ்புக் ஊடாக அழைக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவிகள் ஐவர் உட்பட இருபத்தேழு பேரை கஹதுடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.அவர்களில், தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் ஐந்து மாணவிகள் மற்றும் 12 ஆண் மாணவர்கள் உட்பட இருபத்தேழு பேர் இங்கு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மூன்று விபச்சாரிகளும் உள்ளடங்குவதுடன், காலி […]

உலகம்

தான்சானியாவில் கடல் ஆமை கறியை சாப்பிட்ட 8 குழந்தைகள் பரிதாமாக உயிரிழப்பு!

  • March 9, 2024
  • 0 Comments

தான்சானியா நாட்டின் ஜன்ஜிபார் பகுதிக்கு உட்பட்ட பெம்பா தீவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என சிலர் ஆமை கறியை வாங்கி சாப்பிட்டு உள்ளனர். இதில்,8 குழந்தைகள் உயிரிழந்தனர். இதுபற்றி மாவட்ட மருத்துவ அதிகாரி ஹாஜி பகாரி ஹாஜி கூறும்போது, உயிரிழந்தவர்கள் அனைவரும் கடல் ஆமை கறியை வாங்கி சாப்பிட்டு உள்ளனர் என மருத்துவ ஆய்வக பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. கடந்த செவ்வாய் கிழமை இந்த சம்பவம் நடந்தபோதும், திட்டு விழும் என்ற பயத்தில் இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படவில்லை. […]