ஆசியா செய்தி

சூடானில் 5 மில்லியன் பேர் பட்டினியால் வாடும் அபாயம் – ஐ.நா

  • March 16, 2024
  • 0 Comments

“பேரழிவு” பசியைத் தடுக்க மனிதாபிமான நிவாரணங்களை வழங்க அனுமதிக்குமாறு சூடானின் போராடும் பிரிவுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்தது. ஐநா ஆவணத்தின்படி, போட்டி ஜெனரல்களுக்கு இடையிலான கிட்டத்தட்ட ஆண்டுகால யுத்தம் நாட்டைத் ஆள்வதால் தொடர்வதால், வரும் மாதங்களில் சுமார் ஐந்து மில்லியன் சூடானியர்கள் ஆபத்தான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளக்கூடும். இராணுவத் தளபதி அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹானுக்கும் அவரது முன்னாள் துணைத் தலைவர் மொஹமட் ஹம்தான் டாக்லோவுக்கும் இடையிலான போர் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் பல்லாயிரக்கணக்கானவர்களைக் […]

விளையாட்டு

IPL Update – பஞ்சாப் அணியின் புதிய ஜெர்ஸி அறிமுகம்

  • March 16, 2024
  • 0 Comments

இந்தியாவில் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு ஆண்டுக்கான முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டியானது சென்னையில் இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடருக்கான புதிய ஜெர்ஸியை பஞ்சாப் கிங்ஸ் அணி அறிமுகம் செய்தது. இதற்கு முன்னதாக, மும்பை, ஹைதராபாத் அணிகள் தங்களது […]

இலங்கை

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – மஹிந்த ராஜபக்ஷ!

  • March 16, 2024
  • 0 Comments

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும் இது தனது தனிப்பட்ட கருத்து எனவும் கட்சியின் கருத்து பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் எவ்வித சட்டச் சிக்கலும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இறுதியில் கட்சியின் இறுதிக் கருத்துக்கே அனைவரும் மதிப்பளிப்பார்கள் என்றார். அடுத்த சில வாரங்களுக்குள் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனங்கள் மீதான தாக்குதல் குறித்து வெளியான தகவல்!

  • March 16, 2024
  • 0 Comments

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலின் பின்னணியில் உக்ரைன் இருப்பதற்கான ஆதாரம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரேனிய மூலத்தை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. “ரஷ்ய கூட்டமைப்பின் பொருளாதார ஆற்றலைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் உக்ரைனை SBU தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது, இது உக்ரேனில் போரை நடத்த அனுமதிப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இலங்கை

மரத்தை வெட்டியதால் ஏற்பட்ட தகராறு ;வெலிகம பிரதேசத்தில் ஒருவர் படுகொலை

  • March 16, 2024
  • 0 Comments

வெலிகம – உயன்கந்த பிரதேசத்தில் இன்று (16) காலை ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கூரிய ஆயுதத்தால் தாக்கி அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 38 வயதான மிரிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.உயிரிழந்தவர் மற்றும் சந்தேகநபர் இரண்டு சுற்றுலா விடுதிகளை நடத்தி வருகின்றனர். இன்று இரண்டு சுற்றுலா விடுதிகளுக்கு அண்டிய கடற்கரைக்கு அருகாமையில் உள்ள மரத்தை வெட்டியதில் ஏற்பட்ட தகராறு காரணமாக சந்தேகநபரின் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் உயிரிழந்த நபரை தாக்கியுள்ளனர்.அப்போது, ​​சந்தேக நபர் […]

உலகம்

CAA குறித்து ஐ.நா பொதுச்சபையில் கேள்வி எழுப்பிய பாகிஸ்தான்… இந்தியா கண்டனம்!

  • March 16, 2024
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தில் CAA சட்டம் மற்றும் அயோத்தி ராமர் கோயில் குறித்து கேள்வி எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மார்ச் 11 ஆம் திகதி அமலுக்கு வந்தது. அதன்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு கடந்த 2014 டிசம்பர் 31-ம் திகதிக்கு முன்பு இந்தியாவில் தஞ்சமடைந்த இந்து, சீக்கிய, சமண, புத்த, பார்சி, கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த சிறுபான்மையினருக்கு […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் ஆன்லைன் டெலிவரிகளை செய்வதில் சிக்கல்!

  • March 16, 2024
  • 0 Comments

Sainsbury’s இன் “பெரும்பாலான” ஆன்லைன் டெலிவரிகளை இன்று (16.03) சரிவர செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் Tesco சில ஆன்லைன் ஆர்டர்களையும் ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. குறித்த இரு பல்பொருள் அங்காடிகளும் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது. அதேபோல் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்வதிலும் சிக்கல் நிலை ஏற்பட்டதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஒரே இரவில் மென்பொருள் புதுப்பித்தலில் ஏற்பட்ட பிழை காரணமாக கட்டணங்களை மேற்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சிக்கலைச் […]

இந்தியா

சக ஊழியரின் 15 வயது மகள் பலாத்காரம்… இந்திய கடலோர காவல் படையினர் 2 பேர் கைது!

  • March 16, 2024
  • 0 Comments

மும்பையில் தங்கள் சக ஊழியரின் 15 வயது மகளைப் பலாத்காரம் செய்ததாக இந்திய கடலோர காவல்படையின் இரண்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், வடக்கு மும்பையின் புறநகர்ப் பகுதியில் கடலோர காவல்படையினர் குடும்பத்தினர் வசிக்கும் குடியிருப்பு உள்ளது. சக படைவீரர்கள் என்பதால் குடும்ப ரீதியாகவும் இவர்களிடையே இணக்கம் உள்ளது.இந்நிலையில் கடந்த அக்டோபர் 17ம் திகதி ஒருபடைவீரரின், 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மகள் வீட்டில் தனியாக இருந்தார். அவரது தந்தை இரவுப் பணிக்கு சென்றுவிட்டார். […]

இலங்கை

இலங்கையின் பொருளாதார நிலைமை 2027 இல் மீள் எழுச்சி பெறும் – ரணில்!

  • March 16, 2024
  • 0 Comments

2018 இல் இருந்த நாட்டின் பொருளாதார நிலைமை 2027 ஆம் ஆண்டில் மீளமைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (15.03) இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  இவ்வருடம் 2% பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். இந்த ஆண்டு 2% பொருளாதார வளர்ச்சியை எட்டினாலும், 2019 ஆம் ஆண்டு நிலையை அடைய சுமார் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகும். […]

உலகம்

டிக்டொக் தளத்தில் வைரலாகும் புதிய சேலஞ்ச் : வைத்திய நிபுணர் எச்சரிக்கை!

  • March 16, 2024
  • 0 Comments

தற்போது சமூகவலைத்தளமான டிக்டொக்கில் வெற்றுகால்களுடன் நடை பயணம் மேற்கொள்ளும் முறை ட்ரெண்டாகி வருகிறது. பார்பி” என்ற வெற்றிப் படத்திலிருந்து மார்கோட் ராபியின் சின்னமான கால் காட்சியினை பின்பற்றி அதனை ஒரு சேலஞ்ச் வீடியோவாக பயனர்கள் பதிவேற்றம் செய்து வருகின்றனர். மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் கால் நிபுணர் டாக்டர் சாரி பிரைசண்ட், இந்த நடைமுறைக்கு எதிராக எச்சரித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், கட்டாயம் காலணிகளை அணியுமாறு அறிவுறுத்தியுள்ளார். வெறுங்காலுடன் நடப்பது ஒரு தனித்துவமான இயற்கையான நிலை என்று […]