இலங்கையில் கோர விபத்தில் சிக்கிய பேருந்து – ஒருவர் பலி – 37 பேர் காயம்
நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்திற்கு வழிபாடு செய்ய வந்த 38 பக்தர்களுடன் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சாரதி உட்பட 37 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேராதனை யஹலதன்ன பிரதேசத்தில் கொப்பேகடுவ சந்தியில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பக்தர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து நெல்லிகலையில் இருந்து புடலுஓயா நோக்கி பயணித்த நிலையில் பேருந்தின் சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் சுமார் 15 மீற்றர் சாய்வில் சறுக்கி மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் […]













