இலங்கை

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த ஹரிகரன் தன்வந்தை கௌரவிக்கும் நிகழ்வு!

  • March 21, 2024
  • 0 Comments

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து உலக சாதனை படைத்த திருக்கோணமலை இந்துக் கல்லூரியில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் ஹரிகரன் தன்வந்தைக் கனடா திருக்கோணமலை நலன்புரிச் சங்கம் ஒரு இலட்சம்  ரூபாய் பரிசுத் தொகையும் வெற்றிக் கிண்ணமும் வழங்கிக் கௌரவித்துள்ளது. கனடா திருகோணமலை நலன்புரிச் சங்கத் தலைவர்  ரகுநாதன், அதன் காப்பாளரும் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தின் தலைவருமாகிய  சண்முகம் குகதாசன் ஆகியோர் இணைந்து இந்த பரிசில்களை வழங்கி வைத்துள்ளனர். திருக்கோணமலை இந்துக் கல்லூரியில் மாணவர் ஒன்றுகூடலின் பொழுது […]

இந்தியா

கடத்தல் நாடகம்: ஆண் நண்பருடன் வெளிநாடு செல்ல திட்டமிட்ட மாணவி!

  • March 21, 2024
  • 0 Comments

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தனது ஆண் நண்பருடன் வெளிநாடு செல்வதற்காக தந்தையிடம் கடத்தல் நாடகமாடிய இளம்பெண்ணை பிடிக்க, பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த காவ்யா (21) என்ற இளம்பெண்ணை, போட்டித் தேர்வுகளுக்காக, ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் அவரது பெற்றோர் சேர்த்துவிட்டிருந்தனர். அங்கு 3 நாட்கள் மட்டுமே இருந்த காவ்யா, விடுதியில் இருந்து வெளியேறி இந்தூருக்கு சென்று தனது இரு ஆண் நண்பர்களுடன் தங்கி வந்துள்ளார். இந்த விவகாரம் தனது […]

இலங்கை

இலங்கை சபாநாயகருக்கெதிரான அவநம்பிக்கை பிரேரணை தோல்வி

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 3 நாட்கள் விவாதத்தின் பின்னர் இன்று வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், சபாநாயகருக்கெதிரான அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும், எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன. நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, சபாநாயகர் மஹிந்த யாப்பா பாராளுமன்றத்தில் சபாநாயகர் ஆசனத்தை ஏற்று அறிக்கையொன்றை வழங்கினார். இணையவழி பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைக்கு […]

ஐரோப்பா

சுவிஸ் நேஷனல் வங்கி முக்கிய வட்டி விகிதத்தை குறைத்துள்ளது!

  • March 21, 2024
  • 0 Comments

சுவிஸ் நேஷனல் வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது. இதன்படி குறித்த வட்டி வீத குறைப்பானது நாளை முதல் அமுலுக்கு வருகிறது. குறித்த வட்டி விகிதமானது, 1.5% ஆக குறைக்கப்பட்டுள்ளாக தெரிவிக்கப்படுகிறது. “கடந்த இரண்டரை ஆண்டுகளில் பணவீக்கத்திற்கு எதிரான போராட்டம் பயனுள்ளதாக இருந்ததால் எங்கள் பணவியல் கொள்கையை தளர்த்துவது சாத்தியமானது” என்று SNB தலைவர் தாமஸ் ஜோர்டான் தெரிவித்துள்ளார். இதேவேளை ஜூன் மற்றும் செப்டம்பரில் கூடுதல் கட்டணக் குறைப்புகளை எதிர்பார்க்கிறோம் என்று ஐஎன்ஜி ஆய்வாளர்கள் […]

உலகம்

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தத்தில் சீனா

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தத்தில் சீனா இருப்பதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது. சில சீன வங்கிகள் ரஷ்யாவிடமிருந்து பணம் செலுத்த மறுத்ததைக் குறிப்பிடும் வகையில், மாஸ்கோ மீது கடுமையாக இருக்கும்படி சீனா முன்னோடியில்லாத வகையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அழுத்தத்தில் இருப்பதாக கிரெம்ளின் கூறுகிறது. துருக்கி மற்றும் சீனா போன்ற நாடுகளில் உள்ள வங்கிகளை ரஷ்யாவுடனான வர்த்தகத்தை எளிதாக்குவதற்காக இரண்டாம் நிலை பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளது.

பொழுதுபோக்கு

நம்ம சங்கர் படத்துக்கு இவ்வளோ மவுசா?? ஓடிடி உரிமை யாருக்கு தெரியுமா?

  • March 21, 2024
  • 0 Comments

திரைப்படங்களின் முக்கியமான வருவாயாக தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை இருந்து வந்த நிலையில், டிஜிட்டல், ஓடிடி உரிமைகள் என வந்த பிறகு தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையின் மதிப்பு மங்கத் தொடங்கியது. பிரபல ஓடிடி நிறுவனங்கள் முன்பு அனைத்துப் படங்களையும் போட்டிப் போட்டு வாங்கின. பெரிய படங்களை கோடிகள் கொட்டி வாங்குகிறவர்கள், சின்னப் படங்கள், அறிமுகமில்லாதவர்களின் படங்களை வாங்குவதில்லை. மாஸ் நடிகர்களின் படங்கள் என்றால், அவை வெளியாகும் முன்பே திரையரங்கு வெளியீட்டுக்குப் பின்பான ஓடிடி உரிமை வாங்கப்பட்டுவிடும். ஷங்கர் இயக்கத்தில் […]

இலங்கை

தென் மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு ஆட்சி செய்யும் சகாப்தம் உருவாக்கப்படும் – மகேஷ் சேனாரத்ன!

  • March 21, 2024
  • 0 Comments

தென் மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு ஆட்சி செய்யும் சகாப்தம் உருவாக்கப்படும் என மாகாணத்திற்குப் பொறுப்பான புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  மகேஷ் சேனாரத்ன தெரிவித்துள்ளார். சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்னவின் பதவியேற்பு நிகழ்வு இன்று (21.03) இடம்பெற்ற நிலையில், இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  தென் மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு ஆட்சி செய்யும் யுகத்தை உருவாக்க விரும்புகிறோம். மக்கள் […]

ஆசியா

காசா பகுதியில் பேரழிவு பஞ்சம் ஏற்படும் அபாயம் : உலக வங்கி எச்சரிக்கை

காசா பகுதியில் பேரழிவு பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாக உலக வங்கி எச்சரித்துள்ளது. உதவி நிவாரணத்திற்காக காசாவிற்கு நிபந்தனையற்ற அணுகலை வழங்குமாறு ஐ.நா பொதுச்செயலாளர் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் உலக வங்கி தெரிவித்துள்ளது. உணவுப் பற்றாக்குறை ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு பேரழிவு நிலையை நெருங்கி வருவதால், காசா பகுதியின் பாதி மக்கள் பஞ்சத்தின் உடனடி ஆபத்தில் உள்ளனர் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் தொடங்கி கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் […]

இலங்கை

பசிலை சந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

  • March 21, 2024
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (21.03) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் உள்ளிட்ட அரசியல் விவகாரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,  பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்றும் அண்மையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் இந்திய மாணவர் கடத்தல்; தந்தைக்கு வந்த மிரட்டல் அழைப்பு

  • March 21, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் மாயமான ஹைதராபாத் மாணவரை விடுவிக்க பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு இந்திய மாணவர்கள் மீதான தொடரும் வன்முறைகள், இந்திய சமூகத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் நாச்சாரத்தை சேர்ந்தவர் முகமது அப்துல் அர்பத். இவர், அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெறுவதற்காக, கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்கா சென்றார்.இந்நிலையில் கடந்த மார்ச் 7ம் திகதிக்குப் பின்னர் முகமது அர்பத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது […]