ஆசியா

சிங்கப்பூருக்கு இந்த ஆண்டு காத்திருக்கும் நெருக்கடி

  • March 24, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் இந்த ஆண்டு வெப்பநிலை மேலும் மோசமாகலாம் என வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது. வருடாந்திரப் பருவநிலை மாற்ற மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்ட ஆய்வகம் இதனை குறிப்பிட்டுள்ளது. சென்ற ஆண்டு நான்காவது முறையாகச் சிங்கப்பூரில் மிகக் கடுமையான வெப்பம் பதிவானது. 1997ஆம் ஆண்டுடிலும் 2015ஆம் ஆண்டிலும் அதே அளவு வெப்பம் பதிவானது. ஆண்டு முழுதும் சராசரி வெப்பம் 28.2 டிகிரி செல்சியஸைத் தொட்டது. சென்ற ஆண்டு எல் நினோ பருவநிலை மாற்றம் ஏற்பட்டது. அத்தகைய சூழலில் வருடாந்திர வெப்பம் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் சனத்தொகை அதிகரிப்பிற்கு காரணமாகியுள்ள புலம்பெயர்ந்தோர்

  • March 24, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவிற்கு வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பே ஆஸ்திரேலியாவின் சனத்தொகை அதிகரிப்புக்கு பெருமளவில் காரணமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, செப்டம்பர் 2023க்குள் நாட்டின் மக்கள் தொகை 659,800 மக்களால் 26.8 மில்லியனாக அதிகரித்துள்ளது. வேகமாக வளர்ந்து வரும் மக்கள்தொகை மேற்கு ஆஸ்திரேலியாவில் 3.3 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. விக்டோரியாவில் 2.9 சதவீதமும் குயின்ஸ்லாந்தில் 2.7 சதவீதமும் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. நியூ சவுத் வேல்ஸின் மக்கள் தொகை 2.3 சதவீதமும், ஆஸ்திரேலிய தலைநகர் […]

ஐரோப்பா

தொழிலாளர் பற்றாக்குறையுடன் சிக்கி தவிக்கும் ஜெர்மனி எடுத்துள்ள நடவடிக்கை

  • March 24, 2024
  • 0 Comments

ஐரோப்பாவின் முக்கிய நாடான ஜெர்மனி கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையுடன் போராடி வருகிறது. சில மதிப்பீடுகளின்படி, பொருளாதாரம் முழுவதும் இரண்டு மில்லியன் வேலைகள் காலியாக உள்ளன, மேலும் நாட்டின் பாதி நிறுவனங்களால் போதுமான தொழிலாளர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் போது, டஜன் கணக்கான நிறுவனங்கள் ஒரு மூலோபாயத்தை சோதித்து வருகின்றன, இது மேற்பரப்பில், குறைந்தபட்சம், எதிர்மறையாகத் தோன்றலாம்: தொழிலாளர்களை குறைந்த நாட்கள் வேலை செய்ய வைப்பது. பிப்ரவரி தொடக்கத்தில், ஜெர்மனியில் 31 நிறுவனங்கள் “நான்கு நாள்” […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் அதிர்ச்சி – மீண்டும் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்

  • March 24, 2024
  • 0 Comments

பிரான்ஸில் பகுதி எரிந்த நிலையில் ஒரு ஆணின் உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கோர்ஸ் தீவின் பஸ்தியா நகரில் நேற்று முன்தினம் மாலை இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளத. இங்குள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்து, இந்த உடலம் ஜோந்தார்மினரால் மீட்கப்பட்டுள்ளது என, கோர்சின் சட்டவியல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் இன்னமும் சாவிற்கான காரணமோ, குற்றச் செயலிற்கான தகவல்களோ பெறப்படவில்லை. உடற்கூற்றுப் பரிசோதனை மற்றும் விசாணைகளின் பின்னரே மேலதிகத் தகவல்களை வழங்க முடியும் எனவும், ஜோந்தார்மினரின் முதற்கட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

செய்தி

இலங்கை கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

  • March 24, 2024
  • 0 Comments

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 17 இலட்சம் மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கண்டி வித்யார்த்த வித்தியாலயத்தின் புதிய கிரிக்கட் மைதானத்தை நேற்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்தார். சிலர் கூறுவது போன்று கல்வியை தனியார் மயமாக்குவதற்கு தமது அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது எனவும், கல்வி சீர்திருத்தங்களை ஒரேயடியாக மேற்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என […]

அறிவியல் & தொழில்நுட்பம்

புதிய AI அம்சங்களுடன் அறிமுகமான Samsung Galaxy Book 4!

  • March 24, 2024
  • 0 Comments

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி புக் 4 என்ற அசத்தலான லேப்டாப்பை அறிமுகம் செய்தது. இது கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி புக் 4 ப்ரோ, கேலக்ஸி புக் 4 360 மற்றும் கேலக்ஸி புக் 4 ப்ரோ 360 ஆகிய லேப்டாப்பின் வரிசையில் தற்போது சாம்சங் கேலக்ஸி புக் 4 அறிமுகமானது. இருப்பினும், இந்த புதிய மாடல் லேப்டாப் அதற்கு முந்தைய தலைமுறைகளை போல் இல்லாமல் உருவாகியுள்ளது. அதாவது, இந்த புதிய லேப்டாப்பில் இன்டெல் […]

ஆசியா

வியட்நாமில் நபரின் வயிற்றுக்குள் உயிருடன் விலாங்கு மீன் – அதிர்ச்சியில் மருத்துவர்கள்

  • March 24, 2024
  • 0 Comments

வியட்நாமில் நபர் ஒருவரின் அடிவயிற்றில் இருந்து 30 சென்டிமீட்டர் நீளமுள்ள விலாங்கு மீன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்றியுள்ளனர். நோயாளி வயிற்றில் இருந்து அகற்றிய விலாங்கு மீன் உயிருடன் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு குவாங் நின் மாகாணத்தை சேர்ந்த 34 வயது நபருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து மருத்துவமனையில் அவருக்கு எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில், நோயாளி வயிற்றில் வித்தியாசமான பொருள் […]

வட அமெரிக்கா

கனடாவில் இருந்து 28,000க்கும் அதிகமான புலம்யெர்ந்தோர் நாடு கடத்தப்படும் அபாயம்

  • March 24, 2024
  • 0 Comments

கனடாவில் இருந்து 28,000க்கும் அதிகமான புலம்யெர்ந்தோரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கனடாவின் இரண்டு பெரிய விமான நிலையங்களில் அகதி கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அண்மைய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. 2019 முதல் 2023ஆம் ஆண்டு வரை விமான நிலையங்களில் சுமார் 72,000 பேர் அகதிகள் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இது இந்த ஐந்தாண்டு காலத்தில் கனடாவில் பதிவான அகதிகள் கோரிக்கைகளில் 18 சதவீதத்தை குறிக்கிறது. அகதி கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டாலும், பல கோரிக்கையாளர்கள் கனடாவை விட்டு வெளியேறவில்லை. கனடா எல்லை […]

ஐரோப்பா

மொஸ்கோவை உலுக்கிய தாக்குதல் – உயிரும் பலி எண்ணிக்கை – இணையத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ

  • March 24, 2024
  • 0 Comments

மொஸ்கோ இசை நிகழ்ச்சியில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்பாக பதிவான வீடியோக்கள் இணையத்தை கலங்கடித்து வருகின்றன. ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில், அரங்கினுள் புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 143 பேர் இறந்துள்ளனர். பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வீச்சு தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே பயங்கரவாதிகள் […]

ஐரோப்பா

மருமகளை நினைத்து பெருமைப்படும் மன்னர் சார்ல்ஸ்

  • March 24, 2024
  • 0 Comments

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தமது மருமகளின் தைரியத்தை நினைக்கும்போது தமக்குப் பெருமையாய் இருப்பதாகப் பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் குறிப்பிட்டார். பிரித்தானிய இளவரசி கேட் மிடல்டன் (Kate Middleton), ஆரம்பக்கட்ட புற்றுநோய்க்கான சிகிச்சையைப் பெறுவதாக அறிவித்தார். அதைப் பற்றி இளவரசி தைரியமாகப் பொதுமக்களிடம் பேசியது பெருமையாக இருக்கிறது என்று மன்னர் சார்ல்ஸ் குறிப்பிட்டுள்ளார். இளவரசி பேசிய காணொளிக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 6 வாரங்களுக்குமுன் மன்னர் சார்ல்ஸுக்குப் புற்றுநோய் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.