இலங்கை செய்தி

வட மாகாண ஆளுநர் குறித்து ஆசிரியர் தலையங்கம் எழுதிய பத்திரிகை ஆசிரியரிடம் பொலிஸார் விசாரணை

  • April 23, 2024
  • 0 Comments

வடக்கில் ஜனாதிபதியின் பிரதிநிதியின் செயற்பாடுகள் தொடர்பில் அவர் வெளியிட்ட ஆசிரியர் தலையங்கம் காரணமாக அப்பகுதியிலுள்ள முன்னணி தமிழ்ப் பத்திரிகை ஒன்றின் பிரதம ஆசிரியர் பொலிஸாருக்கு இரண்டரை மணித்தியாலங்கள் பதிலளிக்க வேண்டியிருந்தது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஏப்ரல் 22ஆம் திகதி வாக்குமூலம் வழங்கிய வடக்கில் வெளிவரும் நாளிதழான வலம்புரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் நல்லையா விஜயசுந்தரம் தம்மை இவ்வாறு கேள்வி கேட்பது கருத்துச் சுதந்திரத்தை மீறும் செயலாகும் என சுட்டிக்காட்டியுள்ளார். “வடமாகாண ஆளுநருக்கு ஒரு அவசர கடிதம்” என்ற […]

இலங்கை செய்தி

யாழில் 16 இலட்சத்திற்கு ஏலமிடப்பட்ட அம்மனின் சேலை

  • April 23, 2024
  • 0 Comments

வரலாற்றுச் சிறப்புமிக்க புங்குடுதீவு கண்ணகியம்மன் தேர்த் திருவிழாவில் அம்மனுக்கு சாத்தப்பட்ட சேலை 16 இலட்சம் ரூபாய்க்கு ஏலமிடப்பட்டுள்ளது. நேற்றையதினம் புங்குடுதீவு கண்ணகியம்மன் தேவஸ்தானத்தின் முத்தேர் இரதோற்சவம் இடம்பெற்றது. அதில் கண்ணகியம்மன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விஷேட அபிஷேகத்தினை தொடர்ந்து, வசந்த மண்டபத்தில் இருந்து எழுந்தருளிய அம்பாள், உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் பீடத்தில் வீற்றிருந்து முத்தேரேறி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் பல பகாங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். அந்தவகையில் […]

செய்தி விளையாட்டு

தரவரிசையில் முதலிடம் பிடித்தார் சமரி அத்தபத்து

  • April 23, 2024
  • 0 Comments

சர்வதேச கிரிக்கட் பேரவையின் சமீபத்திய தரவரிசையின்படி,  ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்ட வரிசையில்  இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து முதலிடத்தைப் பெற்றுள்ளார். 773 போனஸ் புள்ளிகளைப் பெற்று அவர் முதலிடம் பிடித்துள்ளார். தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தின் போது துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட சமரி அத்தபத்து, போட்டியின் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 195 ஓட்டங்களைப் பெற்றார். சமரி அத்தபத்து இதற்கு முன்னர் ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசையில் 02ஆவது […]

செய்தி விளையாட்டு

IPL Match 39 – லக்னோ அணிக்கு 211 ஓட்டங்கள் இலக்கு

  • April 23, 2024
  • 0 Comments

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 39 ஆவது போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை துவங்கிய சென்னை அணிக்கு அஜிங்க்யா ரஹானே 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவருடன் களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி 108 ரன்களை குவித்தார். அடுத்து வந்த டேரில் […]

உலகம் செய்தி

சீனாவுக்கு பேரிடி!!! பிலிப்பைன்ஸுக்கு ஏவுகணைகளை வழங்கியது இந்தியா

  • April 23, 2024
  • 0 Comments

375 மில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தத்தின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் இருந்து பிலிப்பைன்ஸுக்கு பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகள் வழங்குவது தொடரும் என்று இரு நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர். அதன்படி, ஏவுகணை அமைப்பு விநியோகம் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் இருந்து மணிலாவில் உள்ள விமான தளத்தை இலியுஷின்-76 போக்குவரத்து விமானம் மூலம் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முதல் பகுதியாக நேற்று பிலிப்பைன்ஸ் ஏவுகணைகளை பெற்றுக்கொண்டது. 2022 இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் […]

இந்தியா

‘முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு: மோடி மீது குற்றச்சாட்டு

இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் பிரதமர் . நரேந்திர மோடி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தை திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி முஸ்லிம்களை “ஊடுருவல்காரர்கள்” என்று அழைத்த பிறகு வெறுப்பூட்டும் பேச்சைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார் – “ காங்கிரஸ் கட்சி பொதுமக்களிடம் உள்ள தங்கம் வெள்ளி முதலான சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவற்றை முஸ்லிம்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது” என அப்பட்டமான […]

ஆசியா செய்தி

பாகிஸ்தானில் மேலும் இரு சுங்க அதிகாரிகள் சுட்டுக் கொலை

  • April 23, 2024
  • 0 Comments

பாகிஸ்தானில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சுங்க அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இடம்பெற்று 03 நாட்களுக்குள் 07 சுங்க அதிகாரிகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில், சுங்கப் புலனாய்வுத் துறையின் ஐந்து அதிகாரிகளும், ஐந்து வயது சிறுமி உட்பட இரண்டு பொதுமக்களும் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொல்லப்பட்டனர். இனந்தெரியாத ஆயுததாரிகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர் […]

ஐரோப்பா

லண்டன் – அப்பாயின்மென்ட் தராத அழகுக்கலை நிபுணரின் காரை கொளுத்திய இளம்பெண்!

  • April 23, 2024
  • 0 Comments

தனக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுக்காமல் காலம் கடத்தி வந்த பியூட்டிஷியனின் காரை, இளம்பெண் ஒருவர் தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனை சேர்ந்தவர் பிரபல பியூட்டிஷியன் மார்ஷெல்லா. இவர் பெண்கள் அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவரிடம் தான் தன்னை அழகுப்படுத்திக் கொள்வேன் என்று பெண்கள் நாள் கணக்கில் காத்திருந்து அப்பாயின்மென்ட் வாங்கும் அளவுக்கு மார்ஷெல்லா பிஸி. இந்நிலையில், இவரிடம் இளம் பெண் ஒருவர், கண் பகுதியை அழகுப்படுத்துவதற்காக அப்பாயின்மென்ட் […]

ஐரோப்பா

உக்ரைன் தாக்குதல்களால் 120 பொதுமக்கள் பலி : ரஷ்யா தெரிவிப்பு

உக்ரைனின் எல்லையில் இருக்கும் ரஷ்யாவின் பெல்கொரோட் பகுதி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போர் தொடங்கியதில் இருந்து உக்ரேனிய தாக்குதல்களில் 120 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 651 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு உக்ரேனிய பீரங்கிகள், ட்ரோன்கள் மற்றும் பினாமிகளால் பெல்கொரோட் பலமுறை தாக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில் 11 குழந்தைகள் உள்ளதாகவும், 51 குழந்தைகள் காயமடைந்ததாகவும், அவர்களில் சிலர் உடல் துண்டிக்கப்பட்டதாகவும் ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார்.

இலங்கை

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட குழு அநுரவுடன் சந்திப்பு

  • April 23, 2024
  • 0 Comments

சர்வதேசத் திணைக்களத்தின் பிரதி அமைச்சர் சன் ஹையன் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு இன்று ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தது. தூதுக்குழுவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் துறைத் தலைவர் லியு ஜியான்சாவோ மற்றும் இலங்கையில் உள்ள சீனத் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் சென் சியாங் யுவான் ஆகியோர் அடங்குவர். நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பிலும் அவர்கள் சந்திப்பின் போது […]