இலங்கை

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட குழு அநுரவுடன் சந்திப்பு

சர்வதேசத் திணைக்களத்தின் பிரதி அமைச்சர் சன் ஹையன் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு இன்று ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தது.

தூதுக்குழுவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் துறைத் தலைவர் லியு ஜியான்சாவோ மற்றும் இலங்கையில் உள்ள சீனத் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் சென் சியாங் யுவான் ஆகியோர் அடங்குவர்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பிலும் அவர்கள் சந்திப்பின் போது கலந்துரையாடினர்.

NPPயின் பிரதிநிதிகள், தேர்தலுக்கான NPPயின் தயாரிப்பு மற்றும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கு அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து தூதுக்குழுவிற்கு விளக்கினர்.

இக்கலந்துரையாடலில் NPP பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், ஹரினி அமரசூரிய, NPP உறுப்பினர்களான சுனில் ஹதுன்னெத்தி மற்றும் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content