ஐரோப்பா

பிரித்தானியாவில் மே மாதத்தில் இடம்பெறவுள்ள முக்கிய மாற்றங்கள் : நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை!

  • May 1, 2024
  • 0 Comments

பிரித்தானியர்கள் இந்த மாதத்தில் (மே மாதத்தில்) எதிர்நோக்கவுள்ள பிரச்சினைகள், அல்லது முக்கிய மாற்றங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். 1 மே – மருந்து விலை மாற்றம் உங்கள் NHS மருந்துச் சீட்டுக்கான விலை இன்று 25p அதிகரிக்கிறது – £9.65 இலிருந்து £9.90 ஆக அதிகரிக்கும். மீண்டும் மீண்டும் பரிந்துரைக்கப்படும் வாடிக்கையாளர்கள் முன்பணம் செலுத்தும் சான்றிதழுக்கு (PPC) விண்ணப்பிக்கலாம்.  இது ஒரு குறிப்பிட்ட கால மருந்துச் சீட்டுகளுக்கு ஒரு நிலையான தொகையை வசூலிக்கிறது. 9 மே – வட்டி […]

தமிழ்நாடு

தமிழ் நாட்டில் தனக்குத்தானே பிரசவம் பார்த்த தாதியால் ஏற்பட்ட விபரீதம்!

  • May 1, 2024
  • 0 Comments

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் வினிஷா(24), சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில், ஒரு வருடமாக தாதியாக வேலை பார்த்து வருகிறார். வினிஷா, செல்வமணி என்பவரை காதலித்து வந்தார். செல்வமணி(29) மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர்.சென்னையில்தான் இவரும் வேலை பார்த்து வருகிறார்.கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வினிஷாவும், மதுரையை சேர்ந்த செல்வமணியும் சென்னையிலேயே வேலை பார்ப்பதால், இருவரும் திருமணம் செய்யாமல் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.. இதனால் கருத்தரித்த வினிஷா, ஏழு மாத கர்ப்பிணியாக தனியே தடுமாறி வந்துள்ளார். நேற்று திடீரென இவருக்கு பிரசவ […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் ஏழ்மையான பகுதிகளில் வசிப்பவர்களே இளமையாக இருக்கிறார்கள் – வெளியான ஆய்வறிக்கை!

  • May 1, 2024
  • 0 Comments

இங்கிலாந்தில் ஏழ்மையான சுற்றுப்புறங்களைச் சேர்ந்தவர்கள் பணக்காரப் பகுதிகளை விட இளமையாக இருப்பதாக அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. ஆராய்ச்சியின் படி, 2020-22 இல் ஆண்களின் ஆயுட் காலமானது 82.8 ஆகவும், பெண்களின் ஆயுட் காலமானது 78.8 ஆகவும் பதிவாகியுள்ளது. அதேநேரம் கொவிட் தொற்றுநோய் காலப்பகுதியை தொடர்ந்து பெண்களின் ஆரோக்கியம் சிறிது பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு தேசம் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதற்கு ஆரோக்கியம் ஒரு குறிகாட்டியாகும். துரதிர்ஷ்டவசமாக, பிரித்தானியா  மோசமாக செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.  

இலங்கை

சட்டவிரோத படகு பயணம் ;இலங்கை தம்பதி உட்பட 8 பேர் கைது

  • May 1, 2024
  • 0 Comments

தனுஷ்கோடி கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தம்பதி இருவர் மற்றும் இலங்கைக்கு தப்பிச் செல்ல உதவிய ஆறு பேர் என 8 பேரை கைது செய்த தங்கச்சிமடம் பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை பகுதியைச் சேர்ந்த சைபுல்லா நவீத், இம்ரான், நைனா முகமது, ரகுமான் உள்ளிட்ட நான்கு பேர் செவ்வாய்க்கிழமை (30) இரவு தங்கச்சி மடம் பேருந்து நிலையத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.அவர்கள் நால்வர் […]

இலங்கை

இலங்கை : பேலியகொடவில் 25 பெண்கள் அதிரடியாக கைது : தொடர்பில் இருந்தவர்களுக்கும் சிக்கல்!

  • May 1, 2024
  • 0 Comments

பேலியகொட பொலிஸ் பிரிவிற்குள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸாரால் 25 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண்கள் கோனோரியா, ஹெர்பெஸ் போன்ற சமூக நோய் தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வைத்திய பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதன்காரணமாக அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அவதானமாக இருக்குமாறும், மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். பேலியகொட மீன் சந்தை, பட்டிய சந்தி, வெதமுல்ல உள்ளிட்ட பகுதிகளில் வைத்து குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. போதைப்பொருள் பாவனைக்காக தவறான தொழிலில் ஈடுபடும் பெண்கள் தொடர்பில் […]

பொழுதுபோக்கு

தனது “கருமுட்டை”யை சேமித்து வைத்துள்ள பிரபல நடிகை.. காரணம் தெரியுமா?

  • May 1, 2024
  • 0 Comments

குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு வரப்பிரசாதமாக வந்துள்ளதுதான் கருமுட்டையை சேமித்து வைப்பது. இதை பிரபல நடிகை ஒருவர் தனது திருமணத்திற்கு முன்பே கருமுட்டையை சேமித்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் பிறந்தவர் தான் நடிகை மெஹ்ரீன் பிர்சாதா. இவரின் தந்தை விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர், அம்மா இல்லத்தரசியாக உள்ளார். மாடல் அழகியான இவர் விளம்பரம் மற்றும் மாடலிங்கில் நடித்துள்ளார். மெஹ்ரீன் பிர்சாதா 2016 ஆம் ஆண்டு தெலுங்கு படமான கிருஷ்ண காடி வீர […]

இலங்கை செய்தி

இலங்கையில் தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாளாந்த சம்பளம் அதிகரிப்பு!

  • May 1, 2024
  • 0 Comments

தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாளாந்த சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதற்கமைய, சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இன்று முற்பகல் கொட்டகலை பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு அறிவித்துள்ளார். அத்துடன் நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்தபோது பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய பங்காற்றியிருந்தனர் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மேலும். தொடர் […]

ஆசியா

பிரேசிலை உலுக்கிய மழை – 5 பேர் மரணம் – 18 பேர் மாயம்

  • May 1, 2024
  • 0 Comments

பிரேசிலின் தெற்கே ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் பெய்த கனத்த மழையில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 18 பேர் காணாமல் போயுள்ளனர். மாநிலத்தில் நிலவும் மோசமான வானிலையால் சுமார் 77 பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். பாதிக்கப்பட்டோருக்கு உதவி வழங்கும்படி மாநில ஆளுநரிடம் தாம் பேசியிருப்பதாக அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா கூறியிருக்கிறார். எதிர்வரும் நாள்களில் இன்னும் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்காணிக்கப்பட்டு வரும் […]

பொழுதுபோக்கு

என்னம்மா இப்படி பண்ணிட்டீங்க? ‘கூலி’ படத்துக்கே வேட்டு வைத்த இளையராஜா…

  • May 1, 2024
  • 0 Comments

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கூலி படத்தில் அறிமுக டீசரில் இசையமைப்பாளர் அனிருத் பயன்படுத்திய ‘டிஸ்கோ’ பாடலுக்கு எதிராக இளையராஜா தரப்பிலிருந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு தற்போது நோட்டீஸ் பறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் கூலி படத்தின் அறிமுக வீடியோ ஒன்று வெளியானது. அதில், இளையராஜா இசையமைப்பில் ரஜினிகாந்த் நடித்த தங்கமகன் படத்தில் இடம்பெற்ற பாடலை அனிருத் பயன்படுத்தியிருப்பார். இசையமைத்த தனக்குத்தான் தன்னுடைய பாடல்கள் முழுவதும் சொந்தம் என்றும் தனது பாடல்களை […]

ஐரோப்பா

அமெரிக்காவை விட அதிக நன்மைகள் – ஐரோப்பாவை நம்ப வைக்கும் பணியில் சீன ஜனாதிபதி

  • May 1, 2024
  • 0 Comments

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஐந்தாண்டுகளில் முதல் முறையாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒரு தெளிவான செய்தியுடன் பயணம் மேற்கொண்டுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்கா ஒப்புக்கொள்ள விரும்புவதை விட பெய்ஜிங் அதிக பொருளாதார வாய்ப்பை வழங்குகிறது. சீன ஜனாதிபதி தனது ஐந்து நாள் பயணத்தை பிரான்ஸ், செர்பியா மற்றும் ஹங்கேரிக்கு மே 5 ஆம் திகதி தொடங்குவார் என்று பெய்ஜிங்கில் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கின் தொழில்துறை கொள்கை மற்றும் அபாயங்கள் குறித்து அமெரிக்காவில் உள்ள அதிகாரிகளின் […]