இலங்கை செய்தி

இலங்கையில் அதிர்ச்சி – 2 பிள்ளைகளுக்கு தந்தை செய்த கொடூரம்

  • May 6, 2024
  • 0 Comments

ஹங்வெல்ல பிரதேசத்தில் தனது இரண்டு பிள்ளைகளை பணயக்கைதிகளாக வைத்திருந்த தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளார். ஹங்வெல்ல – ஜல்தர அரச ஊழியர் வீட்டுத் தொகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று தனது மனைவியைக் கொல்வதற்காக கைக்குண்டுடன் தனது வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. எனினும் அந்த நேரத்தில் குறித்த பெண் வீட்டை விட்டு ஓடியதையடுத்து குறித்த நபர் தனது இரண்டு பிள்ளைகளையும் வீட்டின் அறையொன்றில் பணயக்கைதிகளாக வைத்திருந்துள்ளார். 10 வயது […]

மத்திய கிழக்கு

இஸ்ரேலில் மூடப்படும் அல் ஜசீரா அலுவலகங்கள் – ஒருமனதாக வாக்களிப்பு

  • May 6, 2024
  • 0 Comments

இஸ்ரேலில் உள்ள அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் அலுவலகங்களை மூடப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. இஸ்ரேல் அமைச்சரவை ஒருமனதாக அதற்கு வாக்களித்ததாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். இதுதொடா்பாக தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில், “இஸ்ரேலுக்கு எதிராக செயல்படும் அல் ஜசீரா சேனலை இஸ்ரேலில் மூடுவதற்கு எனது தலைமையிலான அமைச்சரவை ஒருமனதாக வாக்களித்துள்ளது” என குறிப்பிட்டர். இது நிரந்தர முடிவா அல்லது இடைக்கால முடிவா என்பது குறித்தும் அரசின் இந்த அறிவிப்பு எப்போது நடைமுறைக்கு […]

விளையாட்டு

CSK கோப்பை வெல்வது கடினம் – காத்திருக்கும் நெருக்கடி

  • May 6, 2024
  • 0 Comments

இந்தியன் பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது 3வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி இதுவரை இந்த சீசனில் 11 போட்டிகளில் விளையாடி அதில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நன்றாக தொடங்கினாலும் மிடில் ஆர்டரில் சொதப்பியது. ரவீந்திர ஜடேஜா 43 ரன்களும், கேப்டன் ருதுராஜ் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் ஒன்லைனில் வேலை தேடியவர்களுக்கு அதிர்ச்சி

  • May 6, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் வேலை வழங்குவதாக கூறி ஏமாற்றும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. சமீபத்திய Scamwatch அறிக்கையின்படி, கடந்த நிதியாண்டில் போலி ஆன்லைன் வேலைகளால் ஆஸ்திரேலியர்கள் 24.7 மில்லியன் டொலர் இழந்துள்ளனர். வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கான வேலை வாய்ப்புகள் குறித்து ஆஸ்திரேலியர்கள் அதிக அக்கறை காட்டுவதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், வேலைகளைப் பெறுவதற்கு முன் அல்லது தொடர்புடைய நேர்காணல்களில் பங்கேற்பதற்கு முன்பு பணம் எதுவும் கொடுக்க வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது இதனால், வேலை வழங்குகிறோம் என்ற […]

ஆசியா

சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு எச்சரிக்கை

  • May 6, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பணியாளர்கள் சிலர் போலந்தில் வேலை கிடைக்கும் எனக் கண்மூடித்தனமாக நம்பி Global Recruiters அமைப்புக்குப் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் பணிப்பெண் ஒருவர் தமது அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2022ஆம் ஆண்டில் போலந்தில் குடியுரிமை பெறுவதற்கு அந்த அமைப்பு ஏற்பாடு செய்யும் எனும் நம்பிக்கையில் அவர் அதற்கு 2,500 வெள்ளி பணம் கொடுத்திருந்தார். Global Recruiters அமைப்பு போலந்தின் தூதரகத்துடன் இணைந்து அவருக்கு வேலை அனுமதி, விசா ஆகியவற்றுக்கு ஏற்பாடு […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsAppஇல் அறிமுகமாகிய மற்றுமொரு புதிய வசதி

  • May 6, 2024
  • 0 Comments

வகையில் தற்போது வாட்ஸ்அப்-ல் வரும் போட்டோ, வீடியோக்களுக்கு வேகமாக ரியாக்ட் செய்யும் வகையில் புது அம்சம் அறிமுகம் செய்யப்படுகிறது. தற்போது போட்டோ, வீடியோக்களுக்கு long press செய்து ரியாக்ட் செய்து வரும் நிலையில் இதை மேலும் எளிமையாக்க வாட்ஸ்அப் புது வசதியை அறிமுகம் செய்கிறது. புதிய அம்சத்தில், வாட்ஸ்அப்-ல் வரும் போட்டோ, வீடியோக்ககளை பார்க்கும் போது ரிப்ளை என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும், அதன் மூலம் நேரடியாக டெக்ஸ்ட் செய்யலாம். அதோடு அதன் அருகிலேயே உள்ள இமேஜிகளைப் பயன்படுத்தி […]

இலங்கை

அதிகாலையிலேயே கோர விபத்தில் சிக்கிய கொழும்பு நோக்கி சென்ற பேருந்து

  • May 6, 2024
  • 0 Comments

இலங்கை அரச பேருந்து ஒன்று செங்கலடி சந்தியில் வைக்கு விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து செங்கலடி சந்தியிலுள்ள ரான்ஸ்போமர் தூணை உடைத்து கடையொன்றினுள் புகுந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விபத்து தொடர்பிலான விசாரணைகளை […]

ஐரோப்பா செய்தி

ஆபிரிக்காவை உலுக்கிய ஆபத்து பிரான்ஸில் – தயார் நிலையில் சுகாதார பிரிவு

  • May 6, 2024
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் பிராந்தியத்தில் Lassa வைரஸ் தொற்றிய ஆண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரத்தக் கசிவுக் காய்ச்சலை ஏற்படுத்துகின்ற இந்த வைரஸ் மனிதர்களில் இருந்து மனிதர்களுக்குத் தொற்றக் கூடியது என்பதால் குறிப்பிட்ட நோயாளியுடன் மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்த ஏனையவர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகள் நடைபெற்றுவருகின்றன. மேற்கு ஆபிரிக்காவின் சில நாடுகளில் பரவிக் காணப்படுகின்ற இந்த வைரஸ் காய்ச்சல் வட அரைக் கோள நாடுகளில் குறிப்பாகப் பிரான்ஸில் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! திருமணங்கள் – குழந்தைகளை நிராகரிக்கும் மக்கள்

  • May 6, 2024
  • 0 Comments

ஜெர்மனி மக்கள் மத்தியில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு பிறப்புகள் மற்றும் திருமணங்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. டெஸ்டாடிஸ் எனப்படும் ஃபெடரல் புள்ளியியல் அலுவலகத்தால் வியாழன் வெளியிடப்பட்ட ஆரம்ப புள்ளிவிவரங்களின்படி, இந்த விடயம் தெரியவந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் சுமார் 693,000 குழந்தைகள் பிறந்தன, இது 2013 க்குப் பிறகு மிகக் குறைந்த அளவாகும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 738,819 பிறப்புகள் கணக்கிடப்பட்ட முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை […]

இலங்கை செய்தி

இலங்கையில் விரைவில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை

  • May 6, 2024
  • 0 Comments

இலங்கையில் வீட்டுக் காவலில் வைக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சிறு குற்றங்களில் ஈடுபடும் நபர்களை வீட்டுக் காவலில் வைக்க திட்மிட்டுள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தார். இது தொடர்பான சட்டமூலம் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். சிறு குற்றங்களுக்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்கள் மன ரீதியாக பாதிக்கப்படுவதுடன், அவர்கள் சமூகத்தில் பெரும் குற்றவாளிகளாகவே சித்தரிக்கப்படுகின்றனர். அவ்வாறான நிலைமையை மாற்றி, சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்படுபவர்களை சிறையில் அடைக்காமல் […]