அதிகாலையிலேயே கோர விபத்தில் சிக்கிய கொழும்பு நோக்கி சென்ற பேருந்து
இலங்கை அரச பேருந்து ஒன்று செங்கலடி சந்தியில் வைக்கு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து செங்கலடி சந்தியிலுள்ள ரான்ஸ்போமர் தூணை உடைத்து கடையொன்றினுள் புகுந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விபத்து தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 12 times, 1 visits today)