தென் கொரியாவில் உயர்நிலைப் பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் மூவர் படுகாயம்
தென்கொரிய உயர்நிலைப் பள்ளி ஒன்றில் திங்கட்கிழமை (ஏப்ரல் 28) காலை மாணவர் ஒருவர் மூவரைக் கத்தியால் குத்தியதாகவும் வேறு இருவரை அவர் காயப்படுத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் சியோங்ஜு நகரில் உள்ளூர் நேரப்படி காலை 8.36 மணியளவில் நிகழ்ந்ததாகக் காவல்துறை அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டது. அந்நகரம், தலைநகர் சோலுக்கு 110 கிலோமீட்டர் தொலைவில் தெற்கே உள்ளது. மாணவர், வகுப்பறையில் ஒருவரைக் கத்தியால் குத்தியதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது என்று சுங்புக் மாநில காவல்துறை அமைப்பு, செய்தியாளர்களுக்கு அறிக்கை அனுப்பி […]













