இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி தேர்தலில் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி

  • May 7, 2025
  • 0 Comments

2025 உள்ளூராட்சி தேர்தலில் பெருவாரியான இடங்களில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளார். உள்ளூராட்சி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதுவரை வெளியாகிய உத்தியோகபூர்வ முடிவுகளின்படி, 239 உள்ளூராட்சி மன்றங்களில் 200 மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ளது. 94 உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. மீதமுள்ள மன்றங்களில், பெரும்பான்மையைப் பெறுவதற்கு ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டிய நிலை […]

விளையாட்டு

கட்டாய வெற்றி நெருக்கடியில் களமிறங்கும் கொல்கத்தா

  • May 7, 2025
  • 0 Comments

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சிஎஸ்கேவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் கொல்கத்தா அணி களமிறங்குகிறது. அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லாத ஆட்டம் என 11 புள்ளிகளை பெற்று […]

இலங்கை

தேர்தலில் வாக்களிப்பதனை தவிர்த்த மைத்திரி, கோட்டாபய, மஹிந்த

  • May 7, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் நேற்று வாக்களிக்க வாக்குச் சாவடிகளுக்கு வரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வாக்களிக்க வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அவரது வலது முழங்காலுக்கும் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கோட்டாபய ராஜபக்சவும் மைத்ரிபால சிறிசேனவும் வேறு சில தனிப்பட்ட காரணங்களால் வாக்களிக்க வரவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், முன்னாள் ஜனாதிபதி […]

இந்தியா இன்றைய முக்கிய செய்திகள்

Operation Sindoor – பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை!

  • May 7, 2025
  • 0 Comments

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் எல்லைகளில் வான் பாதுகாப்பு அமைப்புகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தியா மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலையும் பிறப்பித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் தாக்குதல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தியா – பாகிஸ்தான் போர்ப் பதற்றம் விரைவில் தணியும் என்றார். இரு நாடுகளும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். மேலும், ராணுவ நடவடிக்கைகளில் இருந்தும் இரு நாடுகளும் பின்வாங்க வேண்டும் […]

இலங்கை

இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – கிளிநொச்சி மாவட்ட முடிவுகள்

  • May 7, 2025
  • 0 Comments

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை உள்ளிட்ட 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. கரைச்சி பிரதேச சபை (ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 20,962 வாக்குகள் – 20 உறுப்பினர்கள் (NPP) தேசிய மக்கள் சக்தி – 7,319 வாக்குகள் – 6 உறுப்பினர்கள் (DTNA) ஜனநாயக […]

இலங்கை

இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – முல்லைத்தீவு மாவட்ட முடிவுகள்

  • May 7, 2025
  • 0 Comments

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உள்ளிட்ட 4 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. மாந்தை கிழக்கு பிரதேச சபை (ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 1,364 வாக்குகள் – 4 உறுப்பினர்கள் (SJB) ஐக்கிய மக்கள் சக்தி – 990 வாக்குகள் […]

இந்தியா இன்றைய முக்கிய செய்திகள்

பாகிஸ்தானை உலுக்கிய இந்திய ஏவுகணைத் தாக்குதல் – ஏழு பேர் பலி

  • May 7, 2025
  • 0 Comments

இந்திய ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை பாகிஸ்தான் இராணுவம் உறுதி செய்துள்ளது. பாகிஸ்தானின் மூன்று இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தனது இராணுவம் ஐந்து இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், சில இந்திய வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

மன்னார் மாவட்டத்தை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி!

  • May 7, 2025
  • 0 Comments

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மன்னார் பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியும், மன்னார் நகர சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், நானாட்டான் பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும், முசலி பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியும், மாந்தை மேற்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் கைப்பற்றியுள்ளன. மன்னார் நகர சபை ITAK இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 2,255 வாக்குகள் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தொடர்ந்தும் தேசிய மக்கள் சக்தி முன்னிலையில்…

  • May 7, 2025
  • 0 Comments

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைய, இன்று அதிகாலை 5 மணி வரை வௌியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது. இதற்கமைய வௌியான 123 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ முடிவுகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி (NPP) – 1,329,158 வாக்குகள் – 1,238 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 630,774 வாக்குகள் – 527 உறுப்பினர்கள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 303,186 வாக்குகள் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – யாழ். மாவட்ட முடிவுகள்

  • May 7, 2025
  • 0 Comments

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் மாநகர சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 10,370 வாக்குகள் – 13 உறுப்பினர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 9,124 வாக்குகள் – 12 உறுப்பினர்கள் தேசிய மக்கள் […]