உலகம் செய்தி

அலி கமேனிக்கு 3 மாதங்களின் பின் இறுதிச் சடங்கு! தெஹ்ரானில் திரளும் 2 கோடி மக்கள்!!

  • June 3, 2026
  • 0 Comments

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்காக, மூன்று நாட்கள் பொது இறுதிச்சடங்கு நடத்தப்படவுள்ளது. ஈரான் அரச ஊடகங்கள் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. இறுதிச்சடங்கு நிகழ்வுகள் தலைநகர் தெஹ்ரான், கொம் மற்றும் மஷாத் ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் தெஹ்ரானில் 24 மணி நேர சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 2கோடி மக்கள் வரை கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மஷாத் நகரில் உள்ள புகழ்பெற்ற இமாம் […]

உலகம்

கலிபோர்னியாவில் மர்ம நபரின் சூழ்ச்சி : ஏராளமானோர் பணயக் கைதிகளாக பிடிப்பு!

  • June 3, 2026
  • 0 Comments

கலிபோர்னியாவின் பேக்கர்ஸ்ஃபீல்ட் (Bakersfield) நகரின் மையப்பகுதியில் உள்ள வங்கியொன்றில், நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து ஏராளமானோரை பணயக் கைதியாக பிடித்து வைத்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்தை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளதுடன், அவரை அணுகுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தற்போதுவரை ஒரு விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் நகர சபை மற்றும் காவல் தலைமையகம் உள்ளிட்ட அருகிலுள்ள கட்டிடங்கள் பூட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பேக்கர்ஸ்ஃபீல்ட் காவல் துறையின் நெருக்கடி பேச்சுவார்த்தைக் குழு சந்தேக […]

இலங்கை செய்தி

ஆஸ்திரேலிய, இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு!

  • June 3, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங்கை Penny Wong சந்தித்து பேச்சு நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இலங்கை, ஆஸ்திரேலியா இடையிலான மூலோபாய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, இந்தியப் பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பு, மற்றும் வர்த்தக-பொருளாதார கூட்டாண்மையை விரிவுபடுத்துவது குறித்தும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரால் நேற்று விருந்தோம்பலும் […]

இலங்கை செய்தி

உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயது இளைஞன் பலி: வவுனியாவில் சோகம்!

  • June 3, 2026
  • 0 Comments

வவுனியா, குறிசுட்டகுளம் – கனகராயன்குளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இக்கோரச் சம்பவத்தில் குறிசுட்டகுளம், கனகராயன்குளத்தைச் சேர்ந்த கணேசன் குகப்பிரியன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார். நேற்று செவ்வாய்க்கிழமை குறிசுட்டகுளம் பகுதியில் அமைந்துள்ள காளி கோயிலில் திருப்பணிகளை மேற்கொள்வதற்காக உழவு இயந்திரத்தை இயக்கிய போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது, எதிர்பாராதவிதமாக உழவு இயந்திரத்தின் இயந்திரப் பகுதிக்குள் தவறி விழுந்ததில், அதில் சிக்குண்டு அந்த இளைஞர் சம்பவ […]

இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 8 என்புத் தொகுதிகள் அடையாளம்!

  • June 3, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 14ஆம் நாள் அகழ்வாய்வு நேற்று முன்னெடுக்கப்பட்ட போது, ஒரே இடத்தில் ஒன்றன் மீது ஒன்றாகப் புதைக்கப்பட்ட இரு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உள்ளிட்ட மேலும் பல மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நேற்றைய அகழ்வின் போது குழந்தை ஒன்றினது எலும்புக்கூட்டுத் தொகுதியும், சிறுவர் ஒருவருடையது எனச் சந்தேகிக்கப்படும் எலும்புக்கூட்டுத் தொகுதி உட்படப் புதிதாக 8 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட பின்னர் […]

ஐரோப்பா

உக்ரைனில்  போரை தொடர முடியாத சூழ்நிலையில் ரஷ்யா!!

  • June 2, 2026
  • 0 Comments

உக்ரைனில்  போரை தொடர முடியாத சூழ்நிலையில் ரஷ்யா இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் பாதுகாப்புச் செலவினங்களைக் குறைக்குமாறு நிதி அதிகாரிகள் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ரஷ்யாவின் நிதி அமைச்சகம் கணிசமான நிதி பற்றாக்குறையை  எதிர்பார்க்கிறது. இந்த ஆண்டு குறைந்தபட்சம் 28 பில்லியன் டொலர் அளவுக்கு நிதி வரம்பு மீறப்படும் என்றும், வரும் ஆண்டுகளிலும் மேலும் செலவு அதிகரிக்கும் என்றும் நிதி அமைச்சர் அன்டன் சிலுவானோவ், (Anton Siluanov) கணித்துள்ளார். போர் […]

உலகம்

தென் சீனக் கடலில் உள்ள தீவுகளை பாதுகாக்க ரோபோக்களை களமிறக்கும் தைவான்!

  • June 2, 2026
  • 0 Comments

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் உள்ள தீவுகளை பாதுகாக்கும் நோக்கில் மூன்று ரோந்து ரோபோ நாய்களை தைவான் வடிவமைத்துள்ளது. தைவான் இராணுவத்தின் உயர்மட்ட ஆயுத மேம்பாட்டு நிறுவனம் இன்று இந்த நாய்களை காட்சிப்படுத்தியது. உளவு, கண்காணிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டுப் பதிப்புகளை கொண்டு இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. ரோபோவின் பின் புறம் துப்பாக்கியொன்றும் வைக்கப்பட்டுள்ளது. தைவான் தனது ஒருங்கிணைந்த பகுதிய என சீனா நீண்டகாலமாக கூறி வருகிறது. தேவைப்பட்டால் இராணுவ பலத்தை பயன்படுத்துவதையும் புறக்கணிக்கவில்லை. இந்நிலையில் தைவானுக்கு […]

உலகம்

கென்யாவில் மக்கள் போராட்டம் : இருவர் மீது துப்பாக்கிச்சூடு!

  • June 2, 2026
  • 0 Comments

கென்யாவில் எபோலா தனிமைப்படுதல் கூடாரங்களை அமைக்க அமெரிக்கா தயாராகி வருகின்ற நிலையில் இதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய கென்யாவின் நன்யூகி (Nanyuki) நகரில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இறந்தவர்களில் ஒருவர், “தனது வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது” சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த துப்பாக்கிச்சூடு தொடர்பில் அதிகாரிகள் எந்த தகவல்களையும் வெளியிடவில்லை. இதேவேளை நேற்றைய தினம் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் நகரின் […]

ஐரோப்பா

வாட்ஸ்அப் உரையாடல்கள் – புதிய சர்ச்சையில் சிக்கிய ஸ்டாமர்!!

  • June 2, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் வாட்ஸ்அப்பில் (WhatsApp) தானாகவே மறையும் செய்தி அம்சத்தைப் பயன்படுத்துவதாக டவுனிங் தெரு உறுதிப்படுத்தியுள்ளது. இதனால்  ‘மாண்டல்சனுடனான உரையாடல்களை பெற முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப், பயனர்கள் செய்திகளை 24 மணிநேரம், 7 நாட்கள் அல்லது 90 நாட்களுக்குப் பிறகு தானாகவே மறையுமாறு அமைக்க அனுமதிக்கிறது. இதன் பொருள், பிரதமருக்கும் மாண்டல்சனுக்கும் இடையேயான கடந்தகால உரையாடல்களை இனி மீட்டெடுக்க முடியாது என்பதாகும். மாண்டல்சனின் பதவி நியமனம் குறித்து வெளியிடப்பட்ட கோப்புகளில்,   iMessage […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

லண்டன் மீது ஏவுகணை தாக்குதல் : நோர்வே வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்!

  • June 2, 2026
  • 0 Comments

ஆர்க்டிக் பகுதியில் உள்ள ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை கைப்பற்ற ரஷ்யா போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பகுதி கைப்பற்றப்பட்டால், லண்டன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கான அனைத்து சாத்தியமான வாய்ப்புகளும் உள்ளதாக நோர்வேயின் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார். நோர்வேயின் பிரதான நிலப்பரப்பிற்கும் ஸ்வால்பார்ட் (Svalbard) தீவுக்கூட்டத்திற்கும் இடையே உள்ள சுமார் 400 மைல் அகலமுள்ள பகுதியை கைப்பற்ற ரஷ்யா தயாராகி வருவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் முகாமிட்டுள்ள ரஷ்யாவின் சக்திவாய்ந்த வடக்குக் […]