போர் பதற்றம்: எகிறியது எண்ணெய் விலை: சரிந்தது பங்கு சந்தை!
ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கிடையில் மீண்டும் போர் வெடித்துள்ளதால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் திடீர் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய பிரெண்ட் கச்சா எண்ணெய் மற்றும் US-traded crude எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் 4 சதவீதத்திற்கும் மேலாக கணிசமாக உயர்ந்துள்ளன.
அதேவேளை, போர் தீவிரமடையக்கூடும் என்ற அச்சத்தால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ள நிலையில், ஆசியப் பங்குச் சந்தைகள் திங்களன்று கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தன.
குறிப்பாக, தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு மிகப்பெரிய சரிவை எதிர்கொண்டது.
சர்வதேச சந்தை வல்லுநர்கள் இந்த ராணுவ நடவடிக்கைகளை உலகளாவிய எண்ணெய் விநியோகச் சங்கிலிக்கு விடப்பட்ட பெரும் சவாலாகக் கருதுகின்றனர்.
முந்தைய போர்நிறுத்த ஒப்பந்தங்கள் மீறப்பட்டுள்ளதால், வரும் நாட்களில் பொருளாதார ஸ்திரத்தன்மை மேலும் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.





