மேலும் நீட்டிக்கப்பட்டுள்ள 11 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்(NBRO) 11 மாவட்டங்களுக்கு விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுநுவர மற்றும் உடுதும்பர, கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டிய மற்றும் யட்டியாந்தோட்டை, மாத்தளை மாவட்டத்தின் பல்லேபொல மற்றும் அம்பன்கோறளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கை (நிலை 2) விடுக்கப்பட்டுள்ளது. பதுளை(Badulla) மாவட்டத்தின் ஹல்தும்முல்ல மற்றும் ஊவபரணகம, காலி(Galle) மாவட்டத்தின் நெலுவ, கம்பஹா(Gampaha) மாவட்டத்தின் அத்தனகல்ல, கண்டி(Kandy) மாவட்டத்தின் தெல்தோட்ட மற்றும் தொழுவ, கேகாலை(Kegalle) மாவட்டத்தின் […]













