இந்தியா செய்தி

கரூர் சம்பவத்தை தொடர்ந்து புதிய நிர்வாகக் குழுவை அமைத்தார் விஜய்!

  • October 28, 2025
  • 0 Comments

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகத்தின் அரசியல் பணி முடங்கியிருந்தது. இந்நிலையில் அக்கட்சியின் தலைவரான விஜய் அண்மையில் மாமல்லபுரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று  தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க புதிய  நிர்வாகக் குழுவை அமைத்துள்ளார். நிர்வாகக் குழுவில் இடம் பிடித்துள்ளவர்கள் விவரம் வருமாறு, 1. N. ஆனந்த் பொதுச்செயலாளர் 2. ஆதவ் அர்ஜுனா தேர்தல் பிரசார மேலாண்மைப் […]

உலகம் செய்தி

அவசரக் கூட்டத்தை கூட்டிய நெதன்யாகு – மத்தியக் கிழக்கில் மீண்டும் பதற்றம்?

  • October 28, 2025
  • 0 Comments

காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை ஹமாஸ் (Hamas)மீறுவதால் ஏற்படக்கூடிய எதிர்வினை குறித்து விவாதிக்க இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu ) அவசரக் கூட்டத்தைக் கூட்டுவார் என்று டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது. போர் நிறுத்த “மீறல்களுக்கு” பதில் அளிப்பது குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனத்துடன் அவர் கலந்தாலோசிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த பணயக்கைதிகளின் எச்சங்களை ஹமாஸ் ஒப்படைத்துள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸால் திருப்பி அனுப்பப்பட்ட பணயக்கைதியின் […]

உலகம்

வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரேசில்(Brazil) சமூக வலைதள பிரபலம்

  • October 28, 2025
  • 0 Comments

பிரேஸிலில் இளம் அரசியல்வாதியும், சமூக வலைதள பிரபலமுமான பெர்னாண்டா ஒலிவேரா டா சில்வா(Fernanda Oliveira da Silva) மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேஸிலின் சாவோ லூயிஸ்(São Luís) நகருக்கு அருகே உள்ள லாகோ வெர்டே பகுதியைச் சேர்ந்த சமூக வலைதள பிரபலமான பெர்னாண்டா ஒலிவேரா டா சில்வா உடற்பயிற்சி தொடர்பான ஆலோசனைகள் மற்றும் அன்றாட வாழ்க்கை முறைகளைப் பகிர்ந்து மக்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். அதேசமயம், கடந்த 2020ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்று […]

இலங்கை

தேசிய புலனாய்வு பிரிவுக்கு புதிய தலைவராக ஜெனரல் நளிந்த நியமனம்

  • October 28, 2025
  • 0 Comments

தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட(Nalinda Nyangoda) இன்று (28) தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். இவருக்குரிய நியமனக் கடிதம், பாதுகாப்புச் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவால் நேற்று வழங்கப்பட்டது. இந்நிலையிலேயே மேஜர் ஜெனரல் நியங்கொட இன்று ஸ்ரீஜெயவர்தனபுர கோட்டேயில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் தனது அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை இராணுவத்தின் கவசப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் நியங்கொட, இராணுவத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக […]

உலகம் செய்தி

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதல் – 14 பேர் பலி!

  • October 28, 2025
  • 0 Comments

அமெரிக்க இராணுவம் கடந்த திங்கட்கிழமையன்று பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் நடத்திய தாக்குதலில் 14 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நான்கு கப்பல்களை இலக்காகக் கொண்ட இந்த தாக்குதல்களில் ஒரே ஒரு நபர் மட்டுமே உயிர் பிழைத்ததாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) இன்று தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ட்ரம்பின் உத்தரவின் பேரில், கிழக்கு பசிபிக் பகுதியில் போதைப்பொருள்  கடத்தல்காரர்கள் பயணித்ததாக கூறப்படும் நான்கு கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. […]

இலங்கை

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 5,467 பேர் கைது!

  • October 28, 2025
  • 0 Comments

2025 ஜனவரி முதல் இன்று வரை 62 லட்சத்துக்கு மேற்பட்டோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் எவ்.யு. வூட்லர் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதில் காவல்துறை ஊடகப் பேச்சாளரும் பங்கேற்றிருந்தார். இதன்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார். “போதைப்பொருள் சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கை மற்றும் விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. 2025 ஜனவரி முதல் இதுவரையில் 62 லட்சத்துக்கு மேற்பட்டோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். […]

செய்தி

இலங்கையில் அரச துறைகளில் ஏறக்குறைய 8500 பேருக்கு வேலைவாய்ப்பு!

  • October 28, 2025
  • 0 Comments

இலங்கையில் அரச துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி  ஒவ்வொரு அமைச்சகத்தின் கீழுள்ள சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப 8,547 பேரை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரசாங்க சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் செயல்முறை தொடர்பில் கடந்த 30.12.2024 அன்று பிரதமரின் செயலாளரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. குறித்த குழு முன்வைத்த பரிந்துரைகளுக்கு அமைய  அமைச்சகங்களின் கீழ் உள்ள துறைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ள காலியிடங்களை […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோரை இராணுவ முகாம்களுக்கு மாற்ற நடவடிக்கை!

  • October 28, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோரை விடுதிகளில் இருந்து பயன்படுத்தப்படாத இராணுவ முகாம்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புகலிட விடுதிகளின் பயன்பாட்டை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தொழிற்கட்சியின் உந்துதலின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டதின் கீழ் அடுத்த மாதத்தில் இருந்து புலம்பெயர்ந்தோரை தங்க வைக்க இரண்டு தளங்கள் பயன்படுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்வெர்னஸில் (Inverness ) உள்ள கேமரூன் பாராக்ஸ் (Cameron Barracks)  மற்றும் கிழக்கு சசெக்ஸில் (Sussex ) உள்ள க்ரோபரோ (Crowborough) இராணுவ […]

உலகம்

கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள்,குடியேறிக்களுக்கு புதிய வெளியேறும், நுழைவு விதிகள் ; அமெரிக்கா அறிவிப்பு

  • October 28, 2025
  • 0 Comments

குடியேறியவர்கள் மற்றும் கிரீன் கார்ட் வைத்திருப்பவர்கள் அமெரிக்காவுக்குள் வந்து, செல்வதற்கு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. அதாவது குடியேறியவர்கள் மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்கள் அமெரிக்காவுக்கு வரும் போதும், செல்லும் போதும், தங்களது புகைப்படங்கள் மற்றும் கைரேகை விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அமெரிக்காவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் மட்டும் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எல்லைகளிலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த நடைமுறை […]

பொழுதுபோக்கு

பிக் பாஸ் வீட்டுக்குள் புயலாய் கிளம்பிய அடுத்த வைல்ட் கார்ட்…

  • October 28, 2025
  • 0 Comments

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், முதல் வைல்ட் கார்ட் போட்டியாளராக பாக்யலட்சுமி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்த நடிகை திவ்யா கணேஷ் செல்கின்றார். இந்த நிலையில் அடுத்த போட்டியாளர் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது. திவ்யா கணேஷைத் தொடர்ந்து, ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இன்னொரு ப்ரோமோவும் வெளியாகி இருக்கிறது. அந்தப் ப்ரோமோவில் நடிகர் பிரஜன், “நானும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராகப் போகிறேன் என்று கூறிக்கொண்டு வருகின்றார். […]