விபத்தை ஏற்படுத்திவிட்டு மாயமான சின்னத்திரை நடிகை
கன்னட சின்ன திரை நடிகையான திவ்யா சுரேஷ் ராவ் என்பவருக்கு பெங்களூரு மாநகரின் பயாதரயணாபுரத்தில் கடந்த அக்டோபர் 4ஆம் திகதி இடம்பெற்ற கார் விபத்தில் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது. சம்பவ நாளன்று கிரண் என்பவர் தமது உறவுக்கார பெண்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, வண்டியின் பின்னால் ஒரு கார் மோதியதாக புகார் அளித்துள்ளார். விபத்தை ஏற்படுத்திவிட்டு அந்த கார் மின்னல் வேகத்தில் மாயமானதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக எவருக்கும் காயம் […]












