பொழுதுபோக்கு

விபத்தை ஏற்படுத்திவிட்டு மாயமான சின்னத்திரை நடிகை

  • October 29, 2025
  • 0 Comments

கன்னட சின்ன திரை நடிகையான திவ்யா சுரேஷ் ராவ் என்பவருக்கு பெங்களூரு மாநகரின் பயாதரயணாபுரத்தில் கடந்த அக்டோபர் 4ஆம் திகதி இடம்பெற்ற கார் விபத்தில் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது. சம்பவ நாளன்று கிரண் என்பவர் தமது உறவுக்கார பெண்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, வண்டியின் பின்னால் ஒரு கார் மோதியதாக புகார் அளித்துள்ளார். விபத்தை ஏற்படுத்திவிட்டு அந்த கார் மின்னல் வேகத்தில் மாயமானதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக எவருக்கும் காயம் […]

இலங்கை

இலங்கை, ஜப்பான் கடற்படைக் கூட்டுப் பயிற்சி – கொழும்பு வந்தது போர்க்கப்பல்!

  • October 29, 2025
  • 0 Comments

ஜப்பானிய கடற்படையின் ‘அகிபோனோ’ என்ற போர்க்கப்பல், நேற்றுக் காலை நல்லெண்ணப் பயணமாகக் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 150.5 மீட்டர் நீளமுள்ள நாசகாரி போர்க்கப்பலான ‘அகிபோனோ’வில், 158 மாலுமிகள் உள்ளனர். கொழும்பில் தரித்து நிற்கும் போது, கப்பலின் பணியாளர்கள் இலங்கையின் சில சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடுவார்கள். அத்துடன், இரு கடற்படைப் படைகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்புகளை வலுப்படுத்த வடிவமைக்கப்பட்ட இலங்கை கடற்படையுடனான தொழில்முறைப் பயிற்சிகளும் இடம்பெறவுள்ளன. ஜப்பானிய போர்க்கப்பல், கொழும்பு கடலில் இலங்கை கடற்படைக் கப்பலுடன் […]

கருத்து & பகுப்பாய்வு

விண்வெளியில் நடந்த அதிசயம்! ஆச்சரியமிக்க கோள் அமைப்பு கண்டுபிடிப்பு – விஞ்ஞானிகள் வியப்பு

  • October 29, 2025
  • 0 Comments

விண்வெளிப் பரப்பில் புதிய வகையிலான கோள் அமைப்பினை நாசா கண்டுபிடித்துள்ளது. விஞ்ஞான உலகில் வியப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரே இரட்டை நட்சத்திர அமைப்பைச் சுற்றிவரும் மூன்று பூமி அளவுள்ள புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமியிலிருந்து சுமார் 120 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இந்தக் கோள் அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு, இதுவரை காலமும் விஞ்ஞானிகள் நம்பியிருந்த விண்வெளி விதிகளைத் தலைகீழாக மாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு நெருக்கமான நட்சத்திரங்களைக் கொண்ட தொகுதியில் கடுமையான ஈர்ப்பு விசை காரணமாகக் கோள்கள் […]

இலங்கை

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு அழுத்தம்!

  • October 29, 2025
  • 0 Comments

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழியை விரைவில் நிறைவேற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். “பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். அதுவரையில் தடுப்புக் காவல் உத்தரவைப் பெறுவதும் நிறுத்தப்பட வேண்டும். கடந்தகாலங்களில் அரசியல் பழிவாங்கலுக்கே அந்த ஏற்பாடு பயன்படுத்தப்பட்டுள்ளது. தடுப்புக் காவலால்தான் […]

இலங்கை

இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு முடிவு கட்டுமாறு கோரிக்கை

  • October 29, 2025
  • 0 Comments

மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வு அவசியம். அச் சபைகளை மக்கள் பிரதிநிதிகளே ஆள வேண்டும். எனவே, உடனடியாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா வலியுறுத்தினார். பதுளையில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு, “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்பது நாட்டு மக்களின் கோரிக்கையாகும். பல வருடங்களாக இக்கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. எனவே, அடுத்த ஜனாதிபதித் தேர்தல் பற்றி […]

ஐரோப்பா

லண்டனில் கண் பார்வை இழந்த பலருக்கு மீண்டும் கண் பார்வை! வைத்தியர்களின் சாதனை

  • October 29, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின் லண்டனில் கண் பார்வை இல்லாதவர்கள் மேற்கொண்ட சிகிச்சையின் மூலம் மீண்டும் கண் பார்வை கிடைத்துள்ளமை மருத்துவ உலகின் புரட்சியாக கருதப்படுகிறது. வயதானவர்களுக்கு ஏற்படும் விழித்திரைச் சிதைவு (Age-related Macular Degeneration – AMD) நோயால் பார்வையை இழந்தவர்களுக்கு, கண்களின் பின்புறத்தில் நுண்சில்லு (Microchip) பொருத்தப்பட்டு அவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைத்துள்ளது. இந்த புரட்சிகரமான வெற்றியால் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த முறையின் கீழ் சிகிச்சை வழங்கி கண்பார்வையை வழங்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த […]

உலகம் முக்கிய செய்திகள்

உலக சந்தையில் தங்க விலையில் ஏற்பட்ட மாற்றம் – நிபுணர்கள் வெளியிட்டுள்ள தகவல்

  • October 29, 2025
  • 0 Comments

உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சாதகமான நிலைப்பாடு காரணமாக தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா – சீனாவுக்கு இடையிலான வர்த்தக போரில் சாதகமான இணக்கப்பாடு எட்டப்பட்ட நிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் பாரிய அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. சீனாவுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் அதிகரித்த வரியை அறிமுகம் செய்யவுள்ளதாக வெளியான அறிவிப்பை அடுத்து இந்த மாற்றம் ஏற்பட்டிருந்தது. இவ்வாறான […]

செய்தி

இன்று விசாரணைக்கு வரும் ரணிலுக்கு எதிரான வழக்கு

  • October 29, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி, கடந்த ஓகஸ்ட் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார். கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர அவர்களின் உத்தரவின் பேரில், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அத்துடன், அது தொடர்பான வழக்கு ஓகஸ்ட் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதித் தரப்பினரால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் […]

உலகம் செய்தி

மூன்றாவது முறையாகவும் அமெரிக்க ஜனாதிபதியாகும் கனவில் ட்ரம்ப்

  • October 29, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் மீண்டும் ஜனாதிபதியாக தான் போட்டியிடுவதற்கு விரும்புவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையின் முன்னாள் மூலோபாய ஆலோசகர் ஸ்டீவ் பானனின், ‘அரசியலமைப்புக்கு முரணாக மூன்றாவது முறையாகப் போட்டியிட வேண்டும்’ என்ற சமீபத்திய பரிந்துரை குறித்து, “ஏர் ஃபோர்ஸ் வன்” விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஊடகங்கள் அவரிடம் கேள்வி எழுப்பின. கேள்விக்குப் பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “அதைச் […]

இலங்கை செய்தி

இலங்கை பாடசாலை மாணவர்களைப் பாதுகாக்க பிரதி காவல்துறை மா அதிபர் நடவடிக்கை

  • October 29, 2025
  • 0 Comments

இலங்கையில் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக களுத்துறை பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் ஜயந்த பத்மினி வீரசூரிய தெரிவித்துள்ளார். பாடசாலை முடிந்த பின்னர் மாணவர்கள், யாருடன் பழகுகிறார்கள்?, எங்கு குழுவாக நிற்கிறார்கள் என்று ஆராய்வதற்கு சிவில் உடையில் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதற்கமைய, நிலையங்கள், பாடசாலை விட்டுச் செல்லும்போது பேருந்து, வியாபாரத் தளங்கள் போன்ற இடங்களில் போதைப்பொருள் பாவனைப் போன்ற சம்பவங்களைக் […]