மியூனிக் நகரில் இடம்பெற்ற தாக்குதல் – ஆப்கான் நாட்டவருக்கு ஆயுள் தண்டனை
கடந்த ஆண்டு மியூனிக்கில் கார் ஒன்று கூட்டத்தினர் மீது மோதியதில் சிறுமி ஒருவரும், பெண் ஒருவரும் உயிரிழந்ததை தொடர்ந்த பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஆப்கான் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜெர்மன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அவர் மீது இரண்டு கொலைகள், 23 கொலை முயற்சிகள் மற்றும் 22 உடல்ரீதியான காயங்கள் ஏற்படுத்திய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்தக் குற்றங்கள் “குற்றத்தின் ஒரு குறிப்பிட்ட தீவிரத்தைக்” கொண்டிருப்பதாக நீதிமன்றம் கண்டறிந்தது. இதன்காரணமாக அவர் விடுதலை செய்யப்படுவதற்கான வாய்ப்பை நீதிமன்றம் கணிசமாக குறைத்துள்ளது.




