இலங்கை

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட மாற்றம் -நாளை முதல் தொடரும் மழை

இலங்கையின் பல பகுதிகளில் நாளை (21) முதல் பலத்த மழை  பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வடகிழக்கே வங்காள விரிகுடாவில், அந்தமான் பிராந்தியத்திற்கு அருகில் குறைந்த காற்றழுத்தப் பகுதி ஒன்று உருவாகியுள்ளது.

இந்த வளிமண்டலத் தொகுதியால் தீவுக்கு நேரடி பாதிப்பு ஏற்படாது என எதிர்பார்க்கப்பட்டாலும், இத்தொகுதியை நோக்கிய காற்றின் போக்கு காரணமாக,  பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

இப்பகுதிகளில் உள்ள சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்