ரஷ்யாவின் தலைநகரை குறிவைத்து உக்ரைன் தாக்குதல் – இருவர் பலி
ரஷ்யாவின் மொஸ்கோ பகுதியில் உக்ரைன் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், இந்தத் தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து, 249 ஆளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்துவதற்கான நடவடிக்கைகளை ரஷ்யா எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், இந்தத் தாக்குதலால் ரஷ்யத் தலைநகரான மொஸ்கோவில் உள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் சேதமடைந்துள்ளதுடன், இரண்டு விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.




