சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பை மீளாய்வு செய்யக்கோரி போராட்டம்
சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பு நடைமுறையை மீளாய்வு செய்யக்கோரி கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்திற்கு முன்பாக இன்று (13) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. “நியாயமான ஆட்சேர்ப்பு வேண்டும்”, “தகுதியுள்ளவர்களுக்கு வாய்ப்பு வேண்டும்”, “அநுர ஆட்சியில் அநீதியா?” போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு, கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி. திஸாநாயக்கவைத் (HEMWG Dissanayake) தொடர்பு கொண்டு கேட்டபோது: “குறித்த நியமன விவகாரமானது […]













