உலகம்

நேபாளத்தில் மீட்பு பணி தற்காலிகமாக நிறுத்தம்

  • August 29, 2026
  • 0 Comments

எல்லைப் பகுதியைத் தாக்கிய திடீர் வெள்ளத்தில் சிக்கியவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகளை நேபாள மற்றும் சீன அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். வெள்ளத்தின் போது உருவானதாகக் கூறப்படும் ‘தடுப்பு ஏரி’ நிரம்பி வழிந்ததால், இந்த நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏரி நிரம்பி வழியும் அபாயம் அதிகரித்துள்ளதால், மீட்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட சீன மீட்புக் குழுக்களும் வாகனங்களும் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையில், பாதுகாப்பு காரணங்களுக்காக நேபாள அதிகாரிகளும் […]

உலகளவில் இடம்பெயர்வோரின் எண்ணிக்கை அடுத்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகரித்து வரும் நிதி நெருக்கடிக்கு ஏற்ப ஐ.நா. அகதிகள் முகமை (UNHCR) தனது வரவுசெலவுத் திட்டத்தில் 16 சதவீதம் குறைத்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நிதி நெருக்கடி: ஐ.நா. அகதிகள் முகமையின் பட்ஜட் 16 சதவீதம் குறைப்பு

  • August 28, 2026
  • 0 Comments

உலகளவில் இடம்பெயர்வோரின் எண்ணிக்கை அடுத்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகரித்து வரும் நிதி நெருக்கடிக்கு ஏற்ப ஐ.நா. அகதிகள் முகமை (UNHCR) தனது வரவுசெலவுத் திட்டத்தில் 16 சதவீதம் குறைத்துள்ளது. அத்துடன், தனது அதிகாரப்பூர்வ பணியாளர்களின் எண்ணிக்கையில் சுமார் 3,500 பேரை நீக்கியுள்ளது. டிரம்ப் நிர்வாகம் மற்றும் பிற நாடுகளின் வெளிநாட்டு உதவி நிதி குறைத்ததன் தாக்கத்தால், 2025-ஆம் ஆண்டிலிருந்து ஒப்பிடுகையில் முகமையின் பணியாளர்கள் எண்ணிக்கை பாதியாகவும், வரவுசெலவுத் திட்டம் […]

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. இலங்கை செய்தி

அடுத்த வாரம் கொழும்பு வருகிறது IMF குழு

  • August 28, 2026
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, அனைத்துலக நாணய இக்குழு கொழும்பு வரவுள்ளது. இந்த வருகையின் போது, ​​அவர்கள் ஏழாவது ஆய்வை நடத்துவதோடு, எட்டாவது கடன் தவணையை விடுவிப்பது குறித்தும் பரிசீலிக்கவுள்ளனர். இந்த ஆய்வில் திருப்தியடைந்தால், இலங்கைக்கு சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை சர்வதேச நாணய நிதியம் விடுவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் மத்திய ராணுவ ஆணைக்குழு (Central Military Commission) பதவிகளிலிருந்து சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளான ஜாங் யோக்சியா (Zhang Youxia) மற்றும் லியூ ஜென்லி (Liu Zhenli) ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். உலகம் செய்தி

சீனாவின் முக்கிய இரு பிரமுகர்கள் பதவிகளில் இருந்து நீக்கம்

  • August 28, 2026
  • 0 Comments

சீனாவின் மத்திய ராணுவ ஆணைக்குழு (Central Military Commission) பதவிகளிலிருந்து சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளான ஜாங் யோக்சியா (Zhang Youxia) மற்றும் லியூ ஜென்லி (Liu Zhenli) ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். தேசிய மக்கள் காங்கிரஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்நாட்டின் அரச ஊடகமான சின்ஹுவா (Xinhua) வெள்ளிக்கிழமை இன்று வெள்ளிக்கிழமை மேற்படி செய்தியை வெளியிட்டுள்ளது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு அடுத்தபடியாக, மத்திய இராணுவ ஆணைக்குழுவின் துணைத் தலைவராகவும், சீனாவின் சக்திவாய்ந்த அரசியல் பீடத்தின் உறுப்பினராகவும் இருந்த ஜாங் […]

ஐரோப்பா

A66 சாலை விபத்து தொடர்பில் 17 பேர் கைது – வாகனங்களும் தீக்கிரை

  • August 28, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் கடந்த சனிக்கிழமை பொலிஸார்  பின்தொடர்ந்ததன் காரணமாக இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. A66 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட  இந்த விபத்தில் இரு காவல்துறை அதிகாரிகள் உள்பட 07 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே விபத்தில் உயிரிழந்த 23 வயதான மைக்கேல் கேஹிலுக்காக Michael Cahill இடம்பெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர். சம்வம் தொடர்பான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.    

உலகம்

சூடானில் கொள்ளையர்கள் அட்டகாசம் – 49 பேர் படுகொலை

  • August 28, 2026
  • 0 Comments

சூடானின் வடக்கில் உள்ள யூனிட்டி மாநிலத்தில் கொள்ளையர்களின் தாக்குதலினால் 49 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய கால்நடை கொள்ளையர்கள், நேற்று அதிகாலை கால்நடை மேய்ப்பர்கள் சமூகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 49 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 33 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தெற்கு சூடானில் பழங்குடியினர் மற்றும் சமூகங்களுக்கு இடையேயான வன்முறை பொதுவான நிகழ்வாக மாறியுள்ளது. அங்கு கால்நடை மேய்ப்பர்கள், தங்கள் கால்நடைகளுக்கான அரிதான மேய்ச்சல் நிலங்கள் […]

சிரியாவில் கலைக்கப்பட்ட குர்திஷ் தலைமையிலான படைப்பிரிவின் முன்னாள் தளபதியை, நாட்டின் புதிய ஜனாதிபதி அகமது அல்-ஷரா (Ahmed al-Sharaa) தனது ஆலோசகராக வெள்ளிக்கிழமை நியமித்துள்ளார். உலகம் செய்தி பொழுதுபோக்கு

நீண்டகாலப் பகைமைக்கு முடிவு: குர்திஷ் தளபதிக்கு சிரிய அரசில் முக்கிய பொறுப்பு

  • August 28, 2026
  • 0 Comments

சிரியாவில் கலைக்கப்பட்ட குர்திஷ் தலைமையிலான படைப்பிரிவின் முன்னாள் தளபதியை, நாட்டின் புதிய ஜனாதிபதி அகமது அல்-ஷரா (Ahmed al-Sharaa) தனது ஆலோசகராக வெள்ளிக்கிழமை நியமித்துள்ளார். பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போரில் எதிரிகளாக இருந்த இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்டுள்ள இணக்கத்தை இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது. தசாப்தத்திற்கும் மேலாக, மஸ்லூம் அப்தி (Mazloum Abdi) குர்திஷ் தலைமையிலான “சிரிய ஜனநாயகப் படைகளை” (SDF) வழிநடத்தினார். உள்நாட்டுப் போரின் போது, ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராட அமெரிக்காவுடன் இணைந்த இந்தப் […]

ஐரோப்பா

ரஷ்யாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தல் – பின்லாந்தில் நிலைநிறுத்தப்படும் ஸ்வீடன் துருப்புகள்

  • August 28, 2026
  • 0 Comments

ஸ்வீடனின் இராணுவம் இந்த ஆண்டின் இறுதிவரை பின்லாந்தின் பிரதேசத்தைக் கண்காணித்து பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் என்று பின்லாந்தின் பாதுகாப்புப் படைகள் இன்று தெரிவித்தன. இதற்காக கிரிப்பன் போர் விமானங்கள் மற்றும் கொர்வெட் போர்க்கப்பல்கள் பயன்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. “ஸ்வீடன் உபகரணங்கள் குறிப்பாக வான்வழி கண்காணிப்பை வலுப்படுத்துகின்றன என்றும் பின்லாந்தின் பாதுகாப்பு படை குறிப்பிட்டுள்ளது. நேட்டோவின் இரண்டு புதிய உறுப்பினர்களான இவ்விரு நாடுகளும் ஏற்கனவே ஒரு வலுவான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன. பின்லாந்து ரஷ்யாவுடன் 1,340 கிலோமீட்டர் […]

இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் மேத்யூ டக்வர்த் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை செய்தி

தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து ஆஸ்திரேலியா விசேட கவனம்

  • August 28, 2026
  • 0 Comments

இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் மேத்யூ டக்வர்த் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள், அரச மற்றும் தனியார் காணி அபகரிப்பு குற்றச்சாட்டுகள், இராணுவமயமாக்கல் மற்றும் வாழ்வாதாரச் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் நிலைமை, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. தமிழ் மக்களின் […]

உலகம்

உலகின் இளவயது மன்னர் Oyo Nyimba காலமானார்

  • August 28, 2026
  • 0 Comments

உகாண்டா மன்னர் ஓயோ நிம்பா Oyo Nyimba , தனது 34-வது வயதில் நேற்று காலமாகியுள்ளார். உகாண்டா தேர்ந்தெடுக்கப்பட்ட அரச தலைவரால் ஆளப்படுகிறது. இருப்பினும், காலனித்துவத்திற்கு முந்தைய காலத்தில் உருவாக்கப்பட்டதைப் போலவே, இன்றும் தங்கள் ராஜ்ஜியங்களை ஆண்டுவரும் பல பாரம்பரிய முடியாட்சிகளை அது கொண்டுள்ளது. அவர்களின் அரசியல் அதிகாரம் பெரும்பாலும் அடையாளப்பூர்வமாகவே உள்ளது, ஆனால் அவர்கள் மகத்தான கலாச்சார மற்றும் சமூக செல்வாக்கைக் கொண்டுள்ளனர். ஓயோ நிம்பா கபாம்பா இகுரு ருகிடி IV Oyo Nyimba Kabamba […]