சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார். அவருக்கு வயது 79. அவரது இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். செய்தி பொழுதுபோக்கு

“மறைந்த எழுத்தாளர் பூமணியின் இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை”

  • July 13, 2026
  • 0 Comments

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார். அவருக்கு வயது 79. அவரது இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ் இலக்கியத்துக்கு பேரிழப்பாக பார்க்கப்படும் அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள், வாசகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். கடந்த 1947-ல் ஆண்டிபட்டியில் அவர் பிறந்தார். இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்ட அவர், பல்வேறு சிறுகதைகள், நாவல்களை எழுதி உள்ளார். வெக்கை, பிறகு, வாய்க்கால், வரப்புகள், […]

உலகம்

காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – 06 பேர் பலி

  • July 13, 2026
  • 0 Comments

காசா பகுதியில் இஸ்ரேலிய ஆளில்லா விமானத் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.06 இந்தத் தாக்குதல்களில் 14க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சப்ரா பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதுடன், அவை உள்கட்டமைப்பு வசதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளது. இருப்பினும், பின்னர் இஸ்ரேல் ஹமாஸின் ஆயுத உற்பத்தி ஆலை மீது தாக்குதல் நடத்தியதாக […]

அனைத்து நீதிபதிகளுக்கும் ஓய்வுபெறும் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் திட்டத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. செய்தி

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்க புதிய திட்டம்

  • July 13, 2026
  • 0 Comments

அனைத்து நீதிபதிகளுக்கும் ஓய்வுபெறும் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் திட்டத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. முன்னதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் காலத்தை நீடிக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்த சூழலில், அனைத்து நீதிபதிகளினதும் ஓய்வுபெறும் காலத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நீதிபதிகள் பற்றாக்குறை மற்றும் வழக்குகளை முடிப்பதில் ஏற்படும் தாமதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, முன்னர் முன்மொழியப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகளுடன் கூடுதலாக, நீதிவான் நீதிமன்ற, […]

இஸ்ரேலில் மிக நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகிக்கும் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் பாரம்பரியத்தையும், அவரது தலைமையிலான ஆட்சிக் காலத்தையும் தீர்மானிக்கும் ஒரு முக்கிய வாக்கெடுப்பாக அமையவிருக்கும் பொதுத்தேர்தல், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஒக்டோபர் 27 நெதன்யாவுக்கு பலப்பரீட்சை

  • July 13, 2026
  • 0 Comments

இஸ்ரேலில் மிக நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகிக்கும் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் பாரம்பரியத்தையும், அவரது தலைமையிலான ஆட்சிக் காலத்தையும் தீர்மானிக்கும் ஒரு முக்கிய வாக்கெடுப்பாக அமையவிருக்கும் பொதுத்தேர்தல், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசெட்டின் (Knesset) நான்கு ஆண்டுகாலப் பதவிக்காலம் இந்த வாரம் முடிவடைய உள்ள நிலையில், சட்டப்பூர்வமாக தேர்தலை நடத்தக்கூடிய கடைசி வாய்ப்பாக இந்த ஒக்டோபர் 27ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய வரலாற்றில் கடந்த […]

ஐரோப்பா

பிரான்ஸில் யூதர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இராணுவ தரத்திலான ஆயுதங்கள் மீட்பு

  • July 13, 2026
  • 0 Comments

பிரான்ஸில் யூதர்கள் அதிகம் வசிக்கும்   பகுதியில் இருந்து இராணுவ தரத்திலான ஆயுதங்கள்  கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து  பிரெஞ்சு பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞர்கள் நேற்று  விசாரணையை ஆரம்பித்துள்ளனர். பாரிஸின் வடக்கே உள்ள சார்செல்ஸ் (Sarcelles)  பகுதியில் சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. தகவலுக்கு அமைய  சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கள ஆய்வுகளை மேற்கொண்டனர். இதன்போது அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றில் இருந்து  இராணுவத் தரத்திலான ஆயுதங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் […]

அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை: தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு அறிவிப்பு

  • July 13, 2026
  • 0 Comments

நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக கூட்டு எதிரணியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவளிக்காது என அக்கட்சியின் பொதுச்செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு எதிரணிகள் தீர்மானித்துள்ளன. நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார். “ நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எமது […]

ஆண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரை 64 அணிகள் பங்கேற்கும் தொடராக விரிவுபடுத்துவது குறித்த திட்டங்கள் தற்போதைய 2026 தொடருக்குப் பிறகு பரிசீலிக்கப்பட உள்ளதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ தெரிவித்துள்ளார். செய்தி விளையாட்டு

உலகக் கோப்பை வரலாற்றில் புதிய புரட்சிக்கு தயாராகும் FIFA

  • July 13, 2026
  • 0 Comments

ஆண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரை 64 அணிகள் பங்கேற்கும் தொடராக விரிவுபடுத்துவது குறித்த திட்டங்கள் தற்போதைய 2026 தொடருக்குப் பிறகு பரிசீலிக்கப்பட உள்ளதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை தொடரானது முழு உலகிற்குமானதாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கான இந்த முன்மொழிவு கடந்த ஆண்டு முன்வைக்கப்பட்டது. தற்போது 48 அணிகளுடன் நடத்தப்படும் உலகக் கோப்பை தொடரின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, […]

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய வழிமுறைகளின் ஓர் அங்கமாக பொது கட்டமைப்பின்கீழ் செயல்படுவதற்கு ஆறு பிரதான தமிழ் பேசும் கட்சிகள் தீர்மானித்துள்ளது. அரசியல் இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

06 தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைவு: இன்று கொழும்பில் நிகழ்வு

  • July 13, 2026
  • 0 Comments

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய வழிமுறைகளின் ஓர் அங்கமாக பொது கட்டமைப்பின்கீழ் செயல்படுவதற்கு ஆறு பிரதான தமிழ் பேசும் கட்சிகள் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இன்று (13) கொழும்பில் நடைபெறவுள்ளது. இச்சந்திப்பின் பின்னர் இதன் நோக்கம் பற்றி தெளிவுப்படுத்தப்படும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை ஆளும் மற்றும் எதிரணிகளிடம் கொண்டுசெல்வதற்கு பொதுமேடையொன்று அவசியம். அதற்கான முயற்சியாக இது அமையும் எனவும் மனோ […]

2027 Budget to be presented on November 12 இலங்கை செய்தி

2027 பட்ஜட் நவம்பர் 12 ஆம் திகதி முன்வைப்பு

  • July 13, 2026
  • 0 Comments

2027ஆம் நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு அமைச்சு ரீதியாக மதிப்பிடப்பட்ட செலவின விபரங்களைப் பெற்றுக்கொண்ட பின்னர், இந்த சட்டமூலம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டு, ஒக்டோபர் 18ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. நவம்பர் 12 ஆம் திகதி 2ஆம் இரண்டாம் வாசிப்பு (வரவு செலவுத் திட்ட உரை / நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்படும்.நிதி அமைச்சர் என்ற வகையில் பாதீட்டை முன்வைத்து ஜனாதிபதி உரையாற்றுவார். நவம்பர் 13 முதல் […]

உலகம்

வடகொரியாவின் உதவியை நாடிய தென்கொரியா – பின்னணி என்ன?

  • July 13, 2026
  • 0 Comments

வடகொரியா மற்றும் தென்கொரியாவிற்கு இடையே உள்ள கிழக்கு கடல்பகுதியில் தென்கொரிய மாலுமி ஒருவர் காணாமல்போயுள்ளார். கடலோர காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த அதிகாரி காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் வடக்கு எல்லைக் கோட்டைக் கடந்து வட கொரிய கடல் பகுதிக்குள் சென்றிருக்க வாய்ப்புள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் தென்கொரிய அதிகாரிகள் குறித்த மாலுமியை  தேட வடகொரியாவின் உதவியை நாடியுள்ளனர். தற்போது இரு நாடுகளுக்கும் இடையே நேரடித் தொடர்பு இல்லாததால், இந்த வேண்டுகோள் பியோங்யாங்கிற்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தென் […]