ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாகத்தில் அமெரிக்கா தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று ஈரானின் உயர்மட்ட ராணுவத் தலைமையகமான காத்தம் அல்-அன்பியா (Khatam al-Anbiya) தெரிவித்துள்ளது. செய்தி

ஹேர்முஸ் நீரிணை நிர்வாகத்தில் அமெரிக்கா தலையிடுவதை ஏற்கமாட்டோம்: ஈரான் திட்டவட்டம்

  • July 13, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாகத்தில் அமெரிக்கா தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று ஈரானின் உயர்மட்ட ராணுவத் தலைமையகமான காத்தம் அல்-அன்பியா (Khatam al-Anbiya) தெரிவித்துள்ளது. ஈரானின் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ராணுவத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்த நீரிணையில் அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டு வரும் “அபாயகரமான நடவடிக்கைகள்”, பிராந்தியத்தின் பாதுகாப்பிற்குப் பெருமளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த நீர்வழியை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதை நாங்கள் அனுமதிக்கவில்லை, இனிமேலும் அனுமதிக்க மாட்டோம் […]

2025 ஆம் ஆண்டு வரையிலான, கடந்த பத்தாண்டுகளில் இலங்கையில் கிட்டத்தட்ட 120,000 குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளதாக, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை செய்தி

இலங்கையில் பிறப்பு வீதம் வீழ்ச்சி

  • July 13, 2026
  • 0 Comments

2025 ஆம் ஆண்டு வரையிலான, கடந்த பத்தாண்டுகளில் இலங்கையில் கிட்டத்தட்ட 120,000 குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளதாக, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை நாட்டில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது, குறிப்பாக 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த சரிவு மேலும் அதிகரித்துள்ளது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இலங்கையில் 2019-ஆம் ஆண்டில் 319,010 குழந்தைகள் உயிருடன் பிறந்தன. இந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 301,706 […]

ஐரோப்பா

ஸ்பெயின் காட்டுத்தீ – தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வலியுறுத்தல்

  • July 13, 2026
  • 0 Comments

ஸ்பெயினில் காட்டுத்தீயால் ஏற்படும் அபாயங்களை தவிர்க்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez) வலியுறுத்தியுள்ளார். 12 பேரின் உயிரை பறித்த மோசமான காட்டுத்தீ பரவிய இடமான லாஸ் கல்லார்டோஸ் ( Los Gallardos ) பகுதிக்கு இன்று களவிஜயம் செய்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “காலநிலை மாற்றம் காரணமாக  பாதுகாப்பு அவசரநிலைகள் ‘அதிகரித்து வருவதால்’, ‘இந்தத் தீ விபத்துகள் ஏற்படும்போது நாம் எதிர்வினையாற்றுவது மட்டுமல்லாமல், […]

இடைக்கால ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , அந்த நாட்டிற்கு எதிராக மேலும் சக்திவாய்ந்த தாக்குதல்கள் நடத்தப்படும் என சபதம் செய்துள்ளார். உலகம் செய்தி

ஈரான்மீது சக்திவாய்ந்த தாக்குதல்: ட்ரம்ப் சபதம்

  • July 13, 2026
  • 0 Comments

இடைக்கால ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , அந்த நாட்டிற்கு எதிராக மேலும் சக்திவாய்ந்த தாக்குதல்கள் நடத்தப்படும் என சபதம் செய்துள்ளார். “அது ஒரு முடிவுற்ற ஒப்பந்தமாக (Done deal) இருந்தது, ஆனால் அவர்கள் அதனை முறித்துக் கொண்டனர். அவர்கள் எப்போதும் அதைத்தான் செய்கிறார்கள். இந்த மக்களுடன் நாங்கள் 10 ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம் – எனவே, நாங்கள் அவர்களை மிகக் கடுமையாகத் தாக்கப் போகிறோம்” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், […]

உலகம்

பாவி புயல் எதிரொலி – சீனாவில் கொட்டித் தீர்க்கும் மழை, பல பகுதிகளில் வெள்ளம்

  • July 13, 2026
  • 0 Comments

பாவி புயல் காரணமாக சீனாவின் பல மாகாணங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெபே மாகாணத்தின் ஒரு மாவட்டமான குவான்செங்கில் (Kuancheng), சாலைகளில் நீர்மட்டம் இரண்டு மீட்டருக்கும் மேல் உயர்ந்ததாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. குவான்செங்கில் சுமார் 240,000 மக்கள் வசிக்கின்றனர், மேலும் இது லுவான் […]

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்: வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை இலங்கை செய்தி

சிறைச்சாலை கலவரம்: உயிரிழந்த அதிகாரிகளுக்கு இழப்பீடு

  • July 13, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தலா 20 லட்சம் ரூபாவுக்கு மேல் இழப்பீடு வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்று சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மேற்படி மோதல் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மோதலில் காயமடைந்த அதிகாரிகளுள் எழுவர் இன்னும் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். அதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது தடிகள், கூரிய ஆயுதங்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன. கலவர தினத்தன்று சமயல் அறைக்குள் புகுந்து அங்கிருந்த […]

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகள் பேரினவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு செயற்படுவதற்காக ஒரே மேடையில் அணிதிரண்டுள்ளன. அரசியல் இலங்கை செய்தி

3 முக்கிய விடயங்களுக்காகவே தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைவு

  • July 13, 2026
  • 0 Comments

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகள் பேரினவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு செயற்படுவதற்காக ஒரே மேடையில் அணிதிரண்டுள்ளன. இது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பை ஆறு கட்சிகளினதும் தலைவர்கள் இன்று மதியம் கொழும்பு – பம்பலப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஒரே மேசையிலிருந்து வெளியிட்டனர். இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் எம்.பி., அமீர் அலி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., அதன் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் காட்டுத்தீ அபாயம் : 60 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்

  • July 13, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் சில பகுதிகளில் குறிப்பாக தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் காட்டுத்தீ பரவ ஆரம்பித்துள்ளது. வேல்ஸின் வடக்கு பகுதியில் நேற்று காட்டுத் தீ பரவியுள்ளது. இதன் காரணமாக, அப்பகுதியில் இருந்த சுமார் 60 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்துடன் பிரித்தானியாவில் தொடரும் வெப்பநிலை காட்டுத்தீ அபாயத்தை கணிசமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெரும்பாலான காட்டுத்தீக்கள், மனிதர்களின் ஒழுக்கமற்ற நடத்தையின் காரணமாக ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள்  மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே டெர்பிஷையரில் (Derbyshire), ஏற்பட்ட […]

இலங்கை

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்

  • July 13, 2026
  • 0 Comments

எல்நினோ தாக்கத்தின் காரணமாக கடும் வெப்பமான வானிலையால் நீர் பற்றாக்குறை ஏற்படலாம் எனவும், எனவே நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத் துறையின் கீழ் நிர்வகிக்கப்படும் 80 நீர்த்தேக்கங்கள், 48 சதவீதம் நிரம்பியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போதைய நீர் இருப்பு அளவைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தவும், கையிருப்பைச் சேமிக்குமாறும், நீர்ப்பாசன இயக்குநர் (நீர் மேலாண்மை) பொறியாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹெரத் தெரிவித்துள்ளார். இருப்பினும் குடிநீருக்காக நீர்த்தேக்கங்களைச் சார்ந்துள்ள சமூகங்களுக்கு  போதுமான நீர் விநியோகம் உள்ளதாகவும் அவர் […]

உலகம்

இந்தோனேசியாவில் கோர விபத்து – 10இற்கும் மேற்பட்டோர் பலி

  • July 13, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவில் பரபரப்பான நெடுஞ்சாலை ஒன்றில், திருமண விருந்தினர்களை ஏற்றிச் சென்ற பிக்கப் டிரக் ஒன்று இரண்டு லொரிகளுக்கு இடையில் சிக்கி விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 05 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து , ஜாவா மாகாணத்தின் இந்திரமாயு மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையொன்றில் இடம்பெற்றுள்ளது. திறந்தவெளி பிக்கப் டிரக் ஒன்று ‘யு’ திருப்பம் செய்ய முயன்றபோது, ​​ பின்னால் வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பலத்த மோதலின் தாக்கத்தால், பிக்கப் டிரக்கில் இருந்த […]