உலகம்

பாவி புயல் எதிரொலி – சீனாவில் கொட்டித் தீர்க்கும் மழை, பல பகுதிகளில் வெள்ளம்

பாவி புயல் காரணமாக சீனாவின் பல மாகாணங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெபே மாகாணத்தின் ஒரு மாவட்டமான குவான்செங்கில் (Kuancheng), சாலைகளில் நீர்மட்டம் இரண்டு மீட்டருக்கும் மேல் உயர்ந்ததாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வாகனங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

குவான்செங்கில் சுமார் 240,000 மக்கள் வசிக்கின்றனர், மேலும் இது லுவான் ஆற்றின் கரையில் அமைந்துள்ளதால் பலத்த பாதிப்பு ஏற்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஜிலின் (Jilin), லியோனிங் (Liaoning), ஹெபே (Hebei), ஷான்டாங் (Shandong), ஜியாங்சு (Jiangsu)  மற்றும் அன்ஹுய் (Anhui) மாகாணங்கள் முழுவதும் பாவி புயலினால் கடும் மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்