உலகம்

இந்தோனேசியாவில் கோர விபத்து – 10இற்கும் மேற்பட்டோர் பலி

இந்தோனேசியாவில் பரபரப்பான நெடுஞ்சாலை ஒன்றில், திருமண விருந்தினர்களை ஏற்றிச் சென்ற பிக்கப் டிரக் ஒன்று இரண்டு லொரிகளுக்கு இடையில் சிக்கி விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 05 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து , ஜாவா மாகாணத்தின் இந்திரமாயு மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.

திறந்தவெளி பிக்கப் டிரக் ஒன்று ‘யு’ திருப்பம் செய்ய முயன்றபோது, ​​ பின்னால் வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பலத்த மோதலின் தாக்கத்தால், பிக்கப் டிரக்கில் இருந்த பத்துக்கும் மேற்பட்டோர் நெடுஞ்சாலையில் தூக்கி வீசப்பட்டதில் பலர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த விரிவான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்