இலங்கை

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்

எல்நினோ தாக்கத்தின் காரணமாக கடும் வெப்பமான வானிலையால் நீர் பற்றாக்குறை ஏற்படலாம் எனவும், எனவே நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீர்ப்பாசனத் துறையின் கீழ் நிர்வகிக்கப்படும் 80 நீர்த்தேக்கங்கள், 48 சதவீதம் நிரம்பியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போதைய நீர் இருப்பு அளவைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தவும், கையிருப்பைச் சேமிக்குமாறும், நீர்ப்பாசன இயக்குநர் (நீர் மேலாண்மை) பொறியாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹெரத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் குடிநீருக்காக நீர்த்தேக்கங்களைச் சார்ந்துள்ள சமூகங்களுக்கு  போதுமான நீர் விநியோகம் உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழை எதிர்பார்க்கப்படுவதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்றும் நீர்ப்பாசன இயக்குநர் மேலும் வலியுறுத்தியள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்