ஐரோப்பா

பிரித்தானியாவில் காட்டுத்தீ அபாயம் : 60 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்

பிரித்தானியாவின் சில பகுதிகளில் குறிப்பாக தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் காட்டுத்தீ பரவ ஆரம்பித்துள்ளது.

வேல்ஸின் வடக்கு பகுதியில் நேற்று காட்டுத் தீ பரவியுள்ளது. இதன் காரணமாக, அப்பகுதியில் இருந்த சுமார் 60 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன் பிரித்தானியாவில் தொடரும் வெப்பநிலை காட்டுத்தீ அபாயத்தை கணிசமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பெரும்பாலான காட்டுத்தீக்கள், மனிதர்களின் ஒழுக்கமற்ற நடத்தையின் காரணமாக ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆகவே பொதுமக்கள்  மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே டெர்பிஷையரில் (Derbyshire), ஏற்பட்ட சிறிய அளவிலான தீ காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்