எல் நினோ காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தியின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உப குழுவும் அதிகாரிகள் குழுவும் மூன்றாவது தடவையாக ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (17) பிற்பகல் கூடியது. இலங்கை செய்தி

எல் நினோ காலநிலையை எதிர்கொள்ள தயாராகிறது இலங்கை

  • August 18, 2026
  • 0 Comments

எல் நினோ காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தியின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உப குழுவும் அதிகாரிகள் குழுவும் மூன்றாவது தடவையாக ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (17) பிற்பகல் கூடியது. சமூக ரீதியாக நேரடியாகப் பாதிக்கப்படக்கூடிய பெருந்தோட்டத்துறை, விவசாயம், வன ஜீவராசிகள் மற்றும் நீர் முகாமைத்துவம் ஆகிய துறைகளால் சமர்ப்பிக்கப்பட்ட செயற்பாட்டுத் திட்டங்கள் தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள […]

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவைக் குறிவைத்து இரவு நேரத்தில் 620-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் (Drones) மூலம் உக்ரைன் நடத்திய தாக்குதலானது, கடந்த பல ஆண்டுகளில் மாஸ்கோ மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ரஷ்ய தலைநகரை குறிவைத்து 620 இற்கு மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்கள்

  • August 18, 2026
  • 0 Comments

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவைக் குறிவைத்து இரவு நேரத்தில் 620-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் (Drones) மூலம் உக்ரைன் நடத்திய தாக்குதலானது, கடந்த பல ஆண்டுகளில் மாஸ்கோ மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி வரை மாஸ்கோ பிராந்தியத்திற்கு மேலே 180 ட்ரோன்களை , ரஷ்ய வான் பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் (Sergei Sobyanin) தெரிவித்தார். பின்னர், தலைநகரை நோக்கி வந்த […]

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம், நீதித்துறைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் என்பன நாடாளுமன்றத்தில் இன்று (18) சமர்ப்பிக்கப்பட்டன. இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலம் சபையில் சமர்ப்பிப்பு

  • August 18, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம், நீதித்துறைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் என்பன நாடாளுமன்றத்தில் இன்று (18) சமர்ப்பிக்கப்பட்டன. நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியது. ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் நீதி அமைச்சரால், முதலாம் வாசிப்புக்கென மேற்படி இரு சட்டமூலங்களும் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன. இச்சட்டமூலங்கள் தொடர்பில் எவருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் அதற்கு எதிராக உயர்நீதிம்னறத்தில் மனுக்களை தாக்கல் செய்வதற்கு 14 நாட்கள் அவகாசம் உள்ளது. அதேவேளை, இவ்விரு சட்டமூலங்களுக்கும் […]

இந்தியா மற்​றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் ராணுவத்​தினர் இணைந்து மேற்​கொள்​ளும் 15-ஆவது ‘மைத்​ரீ’ கூட்டு ராணுவப் பயிற்சி தாய்லாந்தில் இன்று ( 18) ஆரம்பமாகி எதிர்வரும் 31 ஆம் திகதிவரை வரை நடை​பெறுகிறது. இந்தியா உலகம் செய்தி

இந்தியா, தாய்லாந்து கூட்டு ராணுவப் பயிற்சி இன்று ஆரம்பம்

  • August 18, 2026
  • 0 Comments

இந்தியா மற்​றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் ராணுவத்​தினர் இணைந்து மேற்​கொள்​ளும் 15-ஆவது ‘மைத்​ரீ’ கூட்டு ராணுவப் பயிற்சி தாய்லாந்தில் இன்று ( 18) ஆரம்பமாகி எதிர்வரும் 31 ஆம் திகதிவரை வரை நடை​பெறுகிறது. இந்​தப் பயிற்​சி​யில் பங்​கேற்​ப​தற்​காக 85 வீரர்​களைக் கொண்ட இந்​திய ராணுவத்​தின் படைப்​பிரிவு நேற்று தாய்​லாந்து புறப்பட்டுச் சென்​றது. இந்​திய ராணுவத்​தின் சார்​பில் 9-வது கூர்க்கா ரைபிள்ஸ் படைப்​பிரி​வின் வீரர்​களும், தாய்​லாந்து ராணுவத்​தின் சார்​பில் 3-ஆவது பட்​டா​லியன் வீரர்​களும் இதில் பங்கேற்​கின்​றனர். இரு நாடு​களின் […]

தமிழ் தேசிய களத்​தில் தவெக​வும் விசிக​வும் இணைந்தே இனி பயணிக்​கும் என விசிக தலை​வர் திருமாவளவன் அறி​வித்​துள்​ளார். இந்தியா செய்தி தமிழ்நாடு

“தமிழ் தேசிய களத்​தில் தவெக​வும் விசிக​வும் இணைந்தே இனி பயணிக்​கும்”

  • August 18, 2026
  • 0 Comments

தமிழ் தேசிய களத்​தில் தவெக​வும் விசிக​வும் இணைந்தே இனி பயணிக்​கும் என விசிக தலை​வர் திருமாவளவன் அறி​வித்​துள்​ளார். விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சி​யின் தலை​வர் திரு​மாவளவனின் பிறந்​த​நாளான நேற்​று, அக்​கட்​சி​யின் சார்​பில் கள்​ளக்​குறிச்சி மாவட்​டம் உளுந்​தூர்​பேட்​டை​யில் ‘தமிழ் தேசிய எழுச்சி மாநாடு’ நடை​பெற்​றது. மாநாட்​டுக்கு தலைமை வகித்த திரு​மாவளவன் தனது பேச்​சின் தொடக்​கத்​தில், தனக்கு பிறந்​த​நாள் வாழ்த்து தெரி​வித்த முதல்​வர் விஜய், திமுக தலை​வர் மு.க.ஸ்டா​லின், நடிகர் ரஜினி​காந்த், தமிழீழ விடு​தலைப் புலிகள் அமைப்​பைச் சேர்ந்த ஈழவேந்​தன், நடிகர்​கள் […]

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தலைவராகப் பணியாற்றி வந்த புத்திக ஹேவாவசம் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய தலைவராக சுரஞ்சித் வேவித்த நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

  • August 18, 2026
  • 0 Comments

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தலைவராகப் பணியாற்றி வந்த புத்திக ஹேவாவசம் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய தலைவராக சுரஞ்சித் வேவித்த நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2024 அக்டோபர் முதல் அதிகார சபையின் தலைவராகப் பணியாற்றி வந்த புத்திக ஹேவாவசம், தனிப்பட்ட மற்றும் தொழிற்துறை சார்ந்த காரணங்களால் தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தில், சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராகப் பணியாற்றியது தனக்குக் கிடைத்த பாக்கியம் என்றும், தனது […]

"சமித்புர சது" என அழைக்கப்படும் சதுரங்க பெரேரா எனும் பாதாள உலகக் குழு உறுப்பினரை, ஓமானிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவந்து மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப் பிரிவிடம் (CCD) காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (18) அதிகாலை ஒப்படைத்துள்ளனர். இலங்கை செய்தி

ஓமானில் கைது செய்யப்பட்ட பாதாள குழு உறுப்பினர் சமித்புர சதுவிடம் விசாரணை வேட்டை

  • August 18, 2026
  • 0 Comments

“சமித்புர சது” என அழைக்கப்படும் சதுரங்க பெரேரா எனும் பாதாள உலகக் குழு உறுப்பினரை, ஓமானிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவந்து மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப் பிரிவிடம் (CCD) காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (18) அதிகாலை ஒப்படைத்துள்ளனர். இண்டர்போல் (Interpol) சிவப்பு எச்சரிக்கையின் அடிப்படையில் ஓமான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இவர், அங்கிருந்து இலங்கைக்குப் நாடு கடத்தப்பட்டுள்ளார். மோதரை, (சமித்புர) பகுதியைச் சேர்ந்த இந்தச் சந்தேக நபர், போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 2025 மார்ச் 22 அன்று ஓமானிற்குத் தப்பிச் […]

பாதாள உலகக் குழுத் தலைவரான கஞ்சபானி இம்ரானின் உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை செய்தி

பாதாளகுழு தலைவர் கஞ்சிபானி இம்ரானின் உறவினர் சுட்டுக்கொலை: பெண் உட்பட ஐவர் கைது

  • August 18, 2026
  • 0 Comments

பாதாள உலகக் குழுத் தலைவரான கஞ்சபானி இம்ரானின் உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இக்குற்றச் செயலுக்கு உதவி புரிந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில், கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஆண் ஒருவரையும் 23 வயதுடைய பெண் ஒருவரையும் கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆகஸ்ட் 17 அன்று கைது செய்தனர். கைது […]

Trump says North Korea's Kim has responded to his overtures உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வடகொரியாவுடன் நேரடி ராஜதந்திர தொடர்பை பேண ட்ரம்ப் வியூகம்

  • August 18, 2026
  • 0 Comments

தென் கொரியாவுடனான இராணுவப் பயிற்சிகளைக் குறைக்குமாறு அமெரிக்கப் படைகளுக்கு உத்தரவிட்டு, வடகொரியாவை அச்சுறுத்தலற்ற மற்றும் மரியாதையான நாடு என்று வர்ணித்த மறுநாளே, வடகொரியஜனாதிபதி கிம் ஜோங் உன் தனது தொடர்புகளுக்குப் பதிலளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் தனது முதல் ஆட்சிக் காலத்தில் கிம்முடன் சந்திப்புகளை நடத்தி, கடிதங்களைப் பரிமாறிக்கொண்டதுடன் ஒப்பிடுகையில், அவரது தற்போதைய ஆட்சிக் காலத்தில் இந்த உறவுக்குக் குறைந்த முக்கியத்துவமே அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், வடகொரிய ஜனாதிபதியுடன் நேரடி இராஜதந்திர உறவை […]

உலகம்

பிலிப்பைன்ஸில் பாடசாலையொன்றில் துப்பாக்கிச்சூடு – இரு மாணவர்கள் உயிரிழப்பு

  • August 18, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸின் ஜாம்போங்காவில் Zamboanga உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு இன்று இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் இருவரும் மாணவர்கள் என நகர மேயர் கைமர் அடான் ஒலாசோ Khymer Adan Olaso கூறியுள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாடசாலை  வளாகத்தில் அவசரகால நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும்,  அப்பகுதியை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூட்டின் சூழ்நிலைகள் குறித்த மேலதிக விவரங்கள் வெளியிடப்படவில்லை. சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.