உலகம்

முத்தமிட்டதால் நேர்ந்த அவலம் : பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி

  • July 3, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவில் திருமணமாகாத ஜோடிகள் முத்தமிட்டுக்கொண்டிருந்த காணொளி டிக்டொக்கில் வைரலானதை தொடர்ந்து அவர்களுக்கு பொது மக்கள் முன்னிலையில் பிரம்படி வழங்கப்பட்டுள்ளது. காரில் 22 வயதுடைய ஆணும், 25 வயதுடைய பெண்ணும் முத்தமிட்டுக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இஸ்லாமியர்களின் ஷரியா சட்டத்தின் படி அவர்களுக்கு பிரம்படி வழங்கப்பட்டுள்ளது. ஆச்சேவில் உள்ள புஸ்தானுசலாடின் (Bustanussalatin) நகரப் பூங்காவில் அமைக்கப்பட்ட ஒரு மேடையில் அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தோனேசியாவில், இஸ்லாமியச் சட்டத்தின் ஒரு வடிவத்தை அமல்படுத்தும் ஒரே மாகாணமாக ஆச்சே […]

அடுத்த வாரம் துருக்கியில் நடைபெறவுள்ள நேட்டோ (NATO) உச்சிமாநாட்டில் இதற்குரிய நகர்வு முன்னெடுக்கப்படும். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

உலகளாவிய பாதுகாப்பு வங்கியை அமைக்கிறது கனடா

  • July 3, 2026
  • 0 Comments

உலகளாவிய பாதுகாப்பு வங்கி ஒன்றை அமைப்பதற்காக பத்துக்கும் மேற்பட்ட நாடுகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் கனடா இறங்கியுள்ளது. அடுத்த வாரம் துருக்கியில் நடைபெறவுள்ள நேட்டோ (NATO) உச்சிமாநாட்டில் இதற்குரிய நகர்வு முன்னெடுக்கப்படும். அமெரிக்கா தலைமையிலான பாரம்பரிய உலக ஒழுங்குமுறை உடைந்து வருவதாகக் கருதும் கனடா பிரதமர் மார்க் கார்னி, அதற்கு மாற்றாக ‘நடுத்தர சக்தி நாடுகளின்’ கூட்டணி ஒன்றை உருவாக்க இந்த ஆண்டு அழைப்பு விடுத்திருந்தார். அதன் ஒரு பகுதியாக, இந்த ‘ பாதுகாப்பு மற்றும் நெகிழ்ச்சி வங்கி’ […]

அரசியல் இலங்கை செய்தி

நாமலின் அரசியல் பயணத்தை முடக்க சதியா?

  • July 3, 2026
  • 0 Comments

“நாமல் ராஜபக்ச என்பவர் மஹிந்தவின் மகன், எனவே, சிறைச்சாலைகளைக் காண்பித்து அவரின் அரசியல் பயணத்தை ஒடுக்கிவிடமுடியாது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சூளுரைத்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிவி சானக கூறியவை வருமாறு , “ அடக்குமுறைக்காகவே தமது கட்சி உறுப்பினர்களான இருவரை சிஐடி மற்றும் பொலிசுக்கு ஜனாதிபதி நியமித்தார். ஏனெனில் நாமல் ராஜபக்சதான் தமக்குரிய சவால் என்பது அவர்களுக்கு தெரியும். எனவே, நாமலுக்கான ஆதரவை தடுக்க முற்படுகின்றனர்.அடக்குமுறையைக் […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

8 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு: வெனிசுலாவில் மரணத்தை வென்ற மனிதன்

  • July 3, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் 8 நாட்களாகச் சிக்கியிருந்த நபர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 140 டன் எடை கொண்ட இடிபாடுகளுக்கு அடியில் ஹெர்னான் கில் (Hernán Gil) இருக்கும் இடத்தை அவசரக்கால மீட்புப் படையினர் கண்டறிந்தனர். அதன் பிறகு, 100 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி அவரைப் பத்திரமாக வெளியே மீட்டுள்ளனர். இந்த மீட்பு நடவடிக்கை குறித்து கருத்து வெளியிட்ட சிலி நாட்டைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் ஒருவர், “சந்தேகத்திற்கு […]

உலகம்

ICC நீதிமன்றத்தின் எந்த விசாரணைக்கும் ஒத்துழைக்க மாட்டோம் – அமெரிக்கா

  • July 2, 2026
  • 0 Comments

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) எந்தவொரு விசாரணையுடனும் அமெரிக்கா ஒத்துழைக்காது என அந்நாட்டின் நீதித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பில் ICC நீதிமன்றத்திற்கு இன்று கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், அமெரிக்கர்கள் மீது நீதிமன்றத்திற்கு எந்த அதிகார வரம்பும் இல்லை என்ற கருத்தை நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.  

இலங்கை

பதவியை தக்கவைப்பாரா அர்ச்சுனா? – வழக்கு ஒத்திவைப்பு

  • July 2, 2026
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆகஸ்ட் 31 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓசல ஹெரத் தாக்கல் செய்த இந்த மனு, இன்று (02) மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மகேன் கொப்பல்லவவின் முன் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. இதன்போது மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டதரணி னுவின் விசாரணைக்கு மிக விரைவில் ஒரு தேதியை வழங்குமாறு நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்தார். அதேசமயம், […]

ஐரோப்பா

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் : வாழ்க்கை தரத்தின் அடிப்படையில்

  • July 2, 2026
  • 0 Comments

உலகளாவிய கடவுச்சீட்டு குறியீட்டின்படி ஐரோப்பிய நாடுகள் உலகின் சந்திவாய்ந்த கடவுச்சீட்டை கொண்டுள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. குளோபல் சிட்டிசன் சொல்யூஷன்ஸின் ( Global Citizen Solutions)  உலகளாவிய கடவுச்சீட்டு குறியீட்டின்படி, உலகளவில் உள்ள 10 வலிமையான கடவுச்சீட்டுகளில் 09 இடங்களை ஐரோப்பிய நாடுகள் பிடித்துள்ளன. உலகளாவிய கடவுச்சீட்டு குறியீடானது, விசா இல்லாமல் பயணம் செய்வதற்கான அணுகல், முதலீட்டு ஈர்ப்பு மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுகிறது. இந்த குறியீடானது ஹென்லி கடவுச்சீட்டை போல் அல்லாமல், முதலீடு, மக்களின் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் 15 வயது சிறுவர்களின் மோசமான நடத்தை – இரு பெண்கள் பாதிப்பு

  • July 2, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்ட இரு பதின்மவயதினருக்கு சிறார் சீர்த்திருத்த பள்ளியில் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த இரு சிறவுர்களும் ஹாம்ப்ஷயரில் உள்ள ஃபோர்டிங்பிரிட்ஜ் (Fordingbridge) என்ற இடத்தில் இரு பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அதனை  படம்பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில்  குறித்த சிறுவர்களுக்கு சிறை அல்லாத மென்மையான தண்டனை வழங்கப்பட்டது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு  பொதுமக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்தே மேற்படி […]

ஈரானியத் தலைவர்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து விடுத்து வரும் அச்சுறுத்தல்களே மொஜ்தபா கமேனி பங்கேற்க முடியாததற்குக் காரணம் என்று அயதுல்லா ஹக்கீம் எலாஹி 'இந்தியா டுடே' ஊடகத்திடம் கூறியுள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரானின் உச்ச தலைவர் குறிவைப்பு – தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்கமாட்டார்

  • July 2, 2026
  • 0 Comments

ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, பாதுகாப்பு காரணங்களினால் தனது தந்தையும் முன்னாள் உச்ச தலைவருமான அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிற்கான தற்போதைய ஈரானியத் தலைவரின் பிரதிநிதி மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். ஈரானியத் தலைவர்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து விடுத்து வரும் அச்சுறுத்தல்களே மொஜ்தபா கமேனி பங்கேற்க முடியாததற்குக் காரணம் என்று அயதுல்லா ஹக்கீம் எலாஹி ‘இந்தியா டுடே’ ஊடகத்திடம் கூறியுள்ளார். கமேனி “கொல்லப்பட வேண்டியவர்களின் பட்டியலில் உள்ளார்” […]

An exterior view of the Palace of Justice, close to where the explosion occurred [ உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சிரியாவில் குண்டு வெடிப்பு: அறுவர் பலி – விசாரணை தீவிரம்

  • July 2, 2026
  • 0 Comments

மத்திய டமாஸ்கஸில் central Damascus உள்ள தேனீர் விடுதியில் (கபே) ஏற்பட்ட குண்டு வெடிப்பில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர் என சிரியாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சிரியாவின் அரச ஊடகத்தின்படி, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:24 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திலிருந்து வெளியான காணொளிகளில், கபே கடுமையாக சேதமடைந்திருப்பதும், தரையில் இரத்தம் சிதறிக் கிடப்பதும் பதிவாகியுள்ளது. அப்பகுதியில் உள்ள பல அரச மற்றும் தனியார் கண்காணிப்பு […]