நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மனோ கைச்சாத்திடாதது ஏன்?
நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ் முற்போக்கு கூட்டணி இன்னும் கையொப்பமிடவில்லை. நாம் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கம் வகித்தாலும் சுயாதீனமான முடிவெடுக்கும் சுதந்திரம் உள்ளது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியவை வருமாறு ,
“நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நாம் இன்னும் கையொப்பம் இடவில்லை. குறித்த பிரேரணை தொடர்பில் நாம் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை.
ஐக்கிய மக்கள் கூட்டணியில் நாம் அங்கம் வகித்தாலும் சுயாதீனமான முடிவெடுக்கும் உரிமை உள்ளது. அதற்குரிய புரிந்துணர்வு உடன்படிக்கையும் இருக்கின்றது.
எது எப்படி இருந்தாலும் சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்: பொறுப்பு கூறவேண்டும்.” – என்றார் மனோ கணேசன்.




