An exterior view of the Palace of Justice, close to where the explosion occurred [ உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சிரியாவில் குண்டு வெடிப்பு: அறுவர் பலி – விசாரணை தீவிரம்

  • July 2, 2026
  • 0 Comments

மத்திய டமாஸ்கஸில் central Damascus உள்ள தேனீர் விடுதியில் (கபே) ஏற்பட்ட குண்டு வெடிப்பில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர் என சிரியாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சிரியாவின் அரச ஊடகத்தின்படி, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:24 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திலிருந்து வெளியான காணொளிகளில், கபே கடுமையாக சேதமடைந்திருப்பதும், தரையில் இரத்தம் சிதறிக் கிடப்பதும் பதிவாகியுள்ளது. அப்பகுதியில் உள்ள பல அரச மற்றும் தனியார் கண்காணிப்பு […]

"டித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மிகக் குறுகிய காலத்தில் நிவாரணங்களை வழங்கி வருகின்றது. வரலாற்று ரீதியாக எந்தவொரு அரசும் இவ்வளவு விரைவாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கியதில்லை. அரசியல் இலங்கை செய்தி

ஊழல் வாதிகளே அரசுக்கு எதிராக கூக்குரல்: பிரதி அமைச்சர் சாட்டையடி

  • July 2, 2026
  • 0 Comments

கடந்த காலங்களில் நாட்டைச் சூறையாடி, ஊழல் செய்து, மக்களின் கோடிக்கணக்கான பணத்தைக் கொள்ளையடித்த திருடர் கூட்டத்தின் கூச்சல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ தேசிய மக்கள் சக்தி அரசு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். இரத்தினபுரி பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “டித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மிகக் குறுகிய காலத்தில் நிவாரணங்களை வழங்கி வருகின்றது. […]

ஐரோப்பா

அடிமைத்தனத்திற்கான இழப்பீடு : மன்னர் சார்லஸிடம் மனுக்கொடுக்க தயாராகும் ஜமைக்கா

  • July 2, 2026
  • 0 Comments

அடிமைத்தனத்திற்கான இழப்பீட்டுக் கோரிக்கை தொடர்பாக சட்ட வழிகாட்டுதலைப் பெற ஜமைக்கா அதிகாரிகள் மன்னர் சார்லஸிடம் மனுவொன்றை கையளிக்கவுள்ளனர். இதற்காக வரும்  செப்டம்பர் மாதம் அவர்கள் இங்கிலாந்திற்கு வருகை தரவுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் கரீபியன் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட கலாச்சார அமைச்சர் ஒலிவியா கிரேஞ்ச் (Olivia Grange), இந்தப் பயணம் செப்டம்பர் 06 ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இழப்பீடு பெறுவதற்கான முயற்சியை  அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதே இதன் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கான கோரிக்கை கடந்த […]

ஜப்பானுடன் வெற்றிகரமான பொருளாதார உறவு- பிரதமர் மோடி புகழாரம் இந்தியா செய்தி

ஜப்பானுடன் வெற்றிகரமான பொருளாதார உறவு- பிரதமர் மோடி புகழாரம்

  • July 2, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவானது, வெற்றிகரமான பொருளாதார இணைப்பைக் கொண்டுள்ளது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மாத்திரம் 95,245 கோடி ரூபா (இந்திய நாணய மதிப்பு) ஜப்பானிய முதலீடு இந்தியாவுக்கு வந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதையடுத்து, இரு […]

ஐரோப்பா

கிரீஸில் காட்டுத்தீ – இருவர் உயிரிழப்பு

  • July 2, 2026
  • 0 Comments

கிரீஸில் ஃபிதியோடிடாவில் (Fthiotida) காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க 135 வீரர்கள் மற்றும் 25 விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அப்பகுதியில் உள்ள மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதற்கு முந்தைய நாள் வடக்கு கிரீஸில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி தந்தையொருவரும் அவரது 12 வயது மகனும் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே   பிரான்ஸின் தெற்கு பகுதி முழுவதும் காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மார்சேய் (Marseille) அருகே 02 தீவிபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன.  1,210 ஹெக்டேர் பரப்பளவு சேதமடைந்துள்ளதாக […]

ஈரானுக்கான தூதுவர் பதவியைப் பொறுப்பேற்பதற்கு முன்னர், அவர் பல வருடங்களாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். இலங்கை செய்தி

ஈரானுக்கான தூதுவராக பேராசிரியரை களமிறக்கியது இலங்கை

  • July 2, 2026
  • 0 Comments

ஈரானுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பஸீஹா அஸ்மி ஜூன் 30ஆம் திகதி தெஹ்ரானிலுள்ள உள்ள இலங்கைத் தூதரகத்தில் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், இவருடைய நியமனத்திற்கு நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி கிடைத்திருந்தது.எனினும், போர் சூழ்நிலையால் பதவியேற்பில் தாமதம் ஏற்பட்டது. ஈரானுக்கான தூதுவர் பதவியைப் பொறுப்பேற்பதற்கு முன்னர், அவர் பல வருடங்களாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். மாவனெல்லை ஜாஹிரா கல்லூரியின் பழைய மாணவியான […]

உலகம்

ஜப்பானில் மாயமாகியிருந்த விசேட தேவையுடைய சிறுவன் சடலமாக மீட்பு

  • July 2, 2026
  • 0 Comments

ஜப்பானின் கொமாட்சு நகரில் உள்ள விசேட தேவையுடைய பாடசாலையொன்றில் இருந்து 10 வயதுடைய சிறுவன் மாயமாகியிருந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுவன் சுமார் 1.5 கி.மீ தொலைவில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சிறுவன் கடந்த செவ்வாய்க்கிழமை கழிவறையை பயன்படுத்துவதற்கு அனுமதிகோரி வகுப்பறையை விட்டு வெளியேறிய நிலையில் மாயமாகியுள்ளார். பாடசாலையின் அவசரகால வெளியேற்றத்தின் வழியாக அவர் வெளியேறியிருக்கலாம்  என ஆசிரியர்கள் நம்புகின்றனர். பின்னர், அவரது காலணிகள் அருகிலுள்ள ஒரு நெல் வயலின் ஓரத்தில் இருந்து  […]

உலகம்

விசா கட்டணங்களை திடீரென உயர்த்திய ஆஸ்திரேலிய அரசாங்கம்

  • July 2, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா அரசாங்கம் மாணவர் விசா விண்ணப்பக் கட்டணங்களை திடீரென அதிகரித்துள்ளது. இதற்கமைய குறித்த கட்டணங்கள் 2000 டொலர்களில் இருந்து 2500 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் துணைப்பிரிவு  விசாவின் கீழ் தகுதி பெறும் ELICOS மாணவர்களுக்கென   தனி விலை நிர்ணய அமைப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்து வரும் மாணவர் சேர்க்கை மற்றும் பல ELICOS படிப்புகளின் குறுகிய காலத் தன்மை ஆகியவற்றைக் காரணம் காட்டி, கட்டணத்தை 2000 டொலர்களுக்கு கீழே குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தபோதிலும் புதிய கட்டணங்கள் […]

"பிரதமர் தனது ஈரான் பயணத்தின் போது, கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பார். உலகம் செய்தி மத்திய கிழக்கு

அலி கமேனியின் இறுதி சடங்கில் பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பு

  • July 2, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஜூலை 3 முதல் ஜூலை 5 வரை ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கின்றார். பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தாஹிர் ஆண்ட்ராபி இன்று (02) வியாழக்கிழமை மேற்படி தகவலை உறுதிப்படுத்தினார். “பிரதமர் தனது ஈரான் பயணத்தின் போது, கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பார். பிரதமருடன் துணைப் […]

இஸ்ரேலின் யேஷர் கட்சியின் தலைவரும், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் (IDF) முன்னாள் தலைவருமான காடி ஐசன்கோட், ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். உலகம் செய்தி

நெதன்யாகுவின் பொய்களை அம்பலப்படுத்திய முன்னாள் இராணுவத் தளபதி

  • July 2, 2026
  • 0 Comments

தனது கொள்கைகளை நியாயப்படுத்துவதற்காக, ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக பிரதமர் நெதன்யாகு பொய்யாகக் கூறினார் என இஸ்ரேலிய எதிர்க்கட்சி தெரிவிக்கிறது. இஸ்ரேலின் யேஷர் கட்சியின் தலைவரும், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் (IDF) முன்னாள் தலைவருமான காடி ஐசன்கோட், ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். மேலும், ஈரானிடம் எந்த அணு குண்டுகளும் இல்லை என்று நெதன்யாகு ஆணவத்துடன் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இஸ்ரேலிய மக்களைப் பயமுறுத்துவதற்காக மட்டுமே நெதன்யாகு இதுபோன்ற ஒரு யதார்த்தத்தை உருவாக்குகிறார் […]