உலகம்

ஜப்பானின் மக்கள் தொகை வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி!

  • May 30, 2026
  • 0 Comments

ஜப்பானின் மக்கள்தொகை கடந்த 05 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. சுமார்  2.5 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கம் தொடர்ச்சியான நடவடிக்கைகளைச் செயல்படுத்திய போதிலும்,  மக்கள் தொகை வீழச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜப்பானின் மக்கள் தொகை கணக்கெடுப்பு 05 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படுகிறது. இதன்படி, 2020 இல் இருந்த மக்கள் தொகையை விட 2025-ல் 123 மில்லியனாகக் குறைந்துள்ளது. இது தொடர்பில் […]

ஐரோப்பா

ட்ரோன் அச்சுறுத்தல் : ஜெர்மனியின் விமான நிலையம் மூடப்பட்டது!

  • May 30, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் மியூனிக் விமான நிலையம் இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான முறையில் ட்ரோன் ஒன்று இனங்காணப்பட்டதை தொடர்ந்து விமான நிலையத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள காவல்துறை செய்தித் தொடர்பாளர், இரு விமானிகள் ட்ரோனை இனங்கண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறை சம்பவ இடத்திற்கு வருகை தந்தது. அங்கு கள ஆய்வுகளை மேற்கொண்டதை தொடர்ந்து  ஜெர்மன் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் ஒருங்கிணைந்து ஓடுபாதையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கை செய்தி

இலங்கை – கியூபா இடையே சுகாதாரத் துறையை மேம்படுத்த புதிய இணக்கம்

  • May 30, 2026
  • 0 Comments

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான கியூபாக் குடியரசின் தூதுவர் பட்ரிசியா லாசரா பெகோ குவேரா (Patricia Lázara Pego Guerra) ஆகியோருக்கு இடையில், சுகாதாரத் துறை உள்ளிட்ட இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்த கலந்துரையாடல்  அண்மையில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றது. இதன்போது, இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையில் நிலவும் நீண்டகால உறவுகள் குறித்தும், அந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இலங்கை மற்றும் […]

உலகம்

கனடாவில் இந்திய வம்சாவளியினரை குறிவைக்கும் குற்றக் கும்பல்!! பணம் மட்டுமே இலக்கு!

  • May 30, 2026
  • 0 Comments

கனடாவில் சுமார் 1000 பேரை கொண்ட இந்தியக் கும்பல் ஒன்று நாடு முழுவதும் தாக்குதல் நடத்துவது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. லாரன்ஸ் பிஷ்னோய் ( Lawrence Bishnoi) என்று அழைக்கப்படும் இந்த கும்பல் தாக்குதல் எச்சரிக்கை அடங்கிய கடிதத்தை ரிட்டிஷ் கொலம்பியாவின் அபோட்ஸ்ஃபோர்டில் உள்ள  காவல் நிலையமொன்றுக்கு அனுப்பிவைத்துள்ளது. அந்த கடிதத்தில் கனேடிய வணிக நிறுவனங்கள் பணம் செலுத்த மறுத்தல் வன்முறையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். குறிப்பாக […]

உலகம்

ஆயுத கையிருப்பை 04 மடங்காக அதிகரிக்க அமெரிக்கா திட்டம்!

  • May 30, 2026
  • 0 Comments

ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஒன்று எட்டப்படாவிட்டால் மீண்டும் தாக்குதல்களை தொடங்க அமெரிக்கா தயங்காது என பாதுகாப்பு செயலளர் பீட் ஹெக்ஸெத் இன்று தெரிவித்துள்ளார். மத்தியக்கிழக்கில் நிலவும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.  இருப்பினும் பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்டவில்லை. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் நாங்கள் முழுத் தகுதியுடன் இருக்கிறோம். “அதற்குத் தேவையான ஆயுதக் கையிருப்புகள், அங்கும் உலகெங்கிலும், போதுமான அளவு உள்ளன. எனவே, […]

ஐரோப்பா செய்தி

ஆண்ட்ரூ தொடர்பான 30,000 மின்னஞ்சல்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே அரண்மனைக்கு வழங்கப்பட்டதாக தகவல்

  • May 30, 2026
  • 0 Comments

பிரிட்டன் அரச குடும்பத்தின் முன்னாள் உறுப்பினரான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் தொடர்பான சர்ச்சைக்குரிய தகவல்கள் அடங்கிய ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வழங்கப்பட்டிருந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன. வர்த்தகத் தூதராகப் பணியாற்றிய காலத்தில், ரகசிய அரசாங்கத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டதாகக் கூறப்படும் தகவல்களும், சர்ச்சைக்குரிய நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான விபரங்களும் அடங்கிய சுமார் 30,000 மின்னஞ்சல்கள் 2020 ஆம் ஆண்டில் அரச குடும்பத்தின் மூத்த அதிகாரியான லார்ட் சேம்பர்லினிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சல்கள், ஆண்ட்ரூவின் […]

இலங்கை

கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் மின்வெட்டு!

  • May 30, 2026
  • 0 Comments

மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட எதிர்பாராத சமநிலையின்மையின் காரணமாக, கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சார விநியோகம் தற்காலிகமாகத் தடைபட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கூடிய விரைவில் மின்சாரத்தை மீட்டெடுக்க அதிகாரிகள் பணியாற்றி வருவதாகவும் அவர் மேலும் கூறினார். கட்டமைப்பை சமநிலைப்படுத்தி நிலைப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக விநியோகம் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது என்றும், தற்போது மின்சாரத்தை மீட்டெடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் மேலும் நான்கு கிராமங்களுக்கு இஸ்ரேலின் கட்டாய இடப்பெயர்வு உத்தரவு

  • May 30, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் மேலும் நான்கு கிராம மக்களுக்கு இஸ்ரேலிய இராணுவம் கட்டாய இடப்பெயர்வு உத்தரவை பிறப்பித்துள்ளது. சிடோன் மற்றும் டயர் நகரங்களுக்கு இடையிலும், பெக்கா பள்ளத்தாக்குப் பகுதிக்கும் அருகிலும் அமைந்துள்ள ஜ்தெய்தெத் அன்சார், ஜ்ராரியே, மஸ்ராத் கௌதரியத் எல்-ரெஸ் மற்றும் மஷ்கரா ஆகிய பகுதிகளின் குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேலியப் படைகள் தாங்கள் “பாதுகாப்பு இடைமண்டலம்” எனக் குறிப்பிடும் பகுதிக்கு அப்பாலும் தாக்குதல்களை விரிவுபடுத்தி வருவதாகக் கூறி, பொதுமக்கள் சிடோனுக்குத் தெற்கே உள்ள […]

உலகம் செய்தி

ஆசியாவை அமெரிக்கா புறக்கணிக்காது : பாதுகாப்புச் செலவை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தல்

  • May 30, 2026
  • 0 Comments

ஈரான் போர் உள்ளிட்ட உலகளாவிய பாதுகாப்பு பொறுப்புகளை அமெரிக்கா மேற்கொண்டிருந்தாலும், ஆசியப் பிராந்தியத்தை புறக்கணிக்கவில்லை என அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற உயர்மட்ட பாதுகாப்பு மாநாட்டில்  உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார் . தைவான் தொடர்பான ஆயுத ஒப்பந்தங்களில் ஏற்பட்ட தாமதங்களைத் தொடர்ந்து, ஆசிய-பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு அமெரிக்காவின் பாதுகாப்பு அர்ப்பணிப்பு தொடரும் என்றும், ஆயுத ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார். இதேவேளை, பிராந்திய நாடுகள் தங்களது […]

இலங்கை செய்தி

சிவனொளிபாத யாத்திரைக் காலம் நிறைவு

  • May 30, 2026
  • 0 Comments

சிவனொளிபாத யாத்திரைக் காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளதாக ஸ்ரீபாத விகாராதிபதி பெங்கமுவே தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார். வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஸ்ரீ பாத உடமலுவவில் பல்வேறு சமய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெசாக் பௌர்ணமிக்கு அடுத்த நாளான 31 ஆம் திகதி, ஸ்ரீபாத உட மலுவவில் நடைபெறும் சமயக்கிரியைகளைத் தொடர்ந்து, மேல் பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ள புனிதப் பேழை, சமன் தெய்வ சிலை மற்றும் தெய்வ ஆபரணங்கள் ஆகியவை கல்பொத்தாவல பெல்மதுளையில் உள்ள ஸ்ரீபாத ராஜமகா […]