கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் மின்வெட்டு!
மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட எதிர்பாராத சமநிலையின்மையின் காரணமாக, கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சார விநியோகம் தற்காலிகமாகத் தடைபட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கூடிய விரைவில் மின்சாரத்தை மீட்டெடுக்க அதிகாரிகள் பணியாற்றி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
கட்டமைப்பை சமநிலைப்படுத்தி நிலைப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக விநியோகம் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது என்றும், தற்போது மின்சாரத்தை மீட்டெடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.




