ஐரோப்பா செய்தி

ஆண்ட்ரூ தொடர்பான 30,000 மின்னஞ்சல்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே அரண்மனைக்கு வழங்கப்பட்டதாக தகவல்

பிரிட்டன் அரச குடும்பத்தின் முன்னாள் உறுப்பினரான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் தொடர்பான சர்ச்சைக்குரிய தகவல்கள் அடங்கிய ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வழங்கப்பட்டிருந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

வர்த்தகத் தூதராகப் பணியாற்றிய காலத்தில், ரகசிய அரசாங்கத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டதாகக் கூறப்படும் தகவல்களும், சர்ச்சைக்குரிய நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான விபரங்களும் அடங்கிய சுமார் 30,000 மின்னஞ்சல்கள் 2020 ஆம் ஆண்டில் அரச குடும்பத்தின் மூத்த அதிகாரியான லார்ட் சேம்பர்லினிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மின்னஞ்சல்கள், ஆண்ட்ரூவின் முன்னாள் வணிகத் தொடர்பாளர் ஒருவரிடமிருந்து பெறப்பட்டவை எனக் கூறப்படுகிறது. பின்னர் அவை தொடர்பாக சட்டரீதியான வழக்குகளும் இடம்பெற்றுள்ளன.

ஏப்ரல் 2021 மற்றும் ஜூன் 2022 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட உயர் நீதிமன்ற ஆவணங்களிலும், அந்த மின்னஞ்சல் காப்பகத்தின் நகல் 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் லார்ட் சேம்பர்லினிடம் வழங்கப்பட்டிருந்தது என்பதும், பின்னர் அவை பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அனுப்பப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்குமாறு கேட்டபோது, பக்கிங்ஹாம் அரண்மனை, “ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் தொடர்பாக காவல்துறை விசாரணை நடைபெற்று வருவதால், இது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளது.

அரசுப் பதவியில் முறைகேடாக நடந்துகொண்டதாக சந்தேகத்தின் பேரில் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த வாரம் தேம்ஸ் வேலி காவல்துறை பொதுமக்களிடம் புதிய தகவல்களை வழங்குமாறு மீண்டும் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்த மின்னஞ்சல்கள் அனைத்தும், 2019 ஆம் ஆண்டு பிபிசி நியூஸ்நைட் நேர்காணலைத் தொடர்ந்து ஆண்ட்ரூ அரச குடும்பப் பொறுப்புகளில் இருந்து விலகிய பிறகு அரண்மனை அதிகாரிகளின் கவனத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!