ஐரோப்பா

இளம் பெண் பாலியல் துஷ்பிரயோகம் – நாட்டிங்ஹாம் நகர மையம் சுற்றிவளைப்பு!

  • June 13, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம் (Nottingham) நகர மையத்தில் இளம் பெண்ணொருவர் இன்று அதிகாலை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பொலிஸார் அப்பகுதியை சுற்றிவளைத்துள்ளதுடன், லேஸ் மார்க்கெட் சதுக்கத்தை மூடியுள்ளனர். அத்துடன் ஆடம்ஸ் வாக் ( Adams Walk ) சாலையிலும் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவரை ஒரு இளம் பெண் என்று மட்டுமே விவரிக்கும் காவல்துறை, அவருக்கு அதிகாரிகள் உதவி செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் […]

ஐரோப்பா

பெல்ஃபாஸ்டில் நீடித்த வன்முறையை தொடர்ந்து ஒன்றுக்கூடிய மக்கள்!

  • June 13, 2026
  • 0 Comments

அண்மையில் பெல்ஃபாஸ்டில் (Belfast) இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை தொடர்ந்து இன்று  இனவெறி எதிர்ப்புப் பேரணி இடம்பெற்றுள்ளது. இதில்  ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர். ‘இனவெறிக்கு எதிராக ஒன்றிணைவோம்’ (Unite Against Racism) என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணி  பெல்ஃபாஸ்ட் நகர மன்றத்திற்கு வெளியே நடைபெற்றது. பேரணியில் கலந்துகொண்ட பலரும், “இனவெறியர்கள் வீட்டுக்குச் செல்லுங்கள்”, மற்றும் “பிரச்சனை தீமையும் வன்முறையுமே தவிர, இனம் அல்ல” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.  

ஐரோப்பா

பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தை வெளியிடத் தயாராகும் பிரித்தானியா!

  • June 13, 2026
  • 0 Comments

நேட்டோ உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, அரசாங்கத்தின் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தை வெளியிடுவதாக பிரித்தானிய பிரதமர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார். நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவிடம் அவர் இன்று இந்த தகவலை தெரிவித்ததாக டவுனிங் தெரு செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் ஸ்டாமர் மற்றும் நேட்டோ பொதுச் செயலாளருக்கு இடையில் இடம்பெற்ற உரையாடலில்,  நேட்டோ உறுப்பு நாடுகள் கூட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், பொதுவான மற்றும் மாறிவரும் அச்சுறுத்தல்களுக்கு விரைவாகப் பதிலளிக்க வேண்டும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்பு முதலீடு […]

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான அமைதி பேச்சு நாளை சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ளது. இரு நாடுகளினதும் தேசியக் கொடிகள்.... உலகம் செய்தி

அடுத்த 24 மணி நேரத்துக்குள் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து!

  • June 13, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான அமைதி ஒப்பந்தம் அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் கையெழுத்தாகும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. எனினும், லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதால் ஈரான் அதிருப்தியில் உள்ளதென தெரியவருகின்றது. Nabatieh நகரம் உட்பட 20 இடங்களிலுள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் எச்சரிக்கை விடுத்த சில நிமிடங்களிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இஸ்ரேலின் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட வலயத்திற்குள் உள்ள Rihan மற்றும் Sujud உள்ளிட்ட பல கிராமங்களைக் குறிவைத்து […]

உலகம் செய்தி

உச்சத் தலைவரின் இறுதிச் சடங்கு குறித்து இன்று வெளியான அறிவிப்பு!

  • June 13, 2026
  • 0 Comments

ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் ஜுலை 04 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. தெஹ்ரான் மற்றும் மஷ்ஹாத் ஆகிய நகரங்களில் இறுதி ஊர்வலங்கள் நடைபெறும் என்று ஈரான் அரச ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த அவரது ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில், தற்போது அவரது மகன் முஜ்தபா புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். ஈரான்மீது கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் 70 இலக்குகள்மீது இஸ்ரேல் தாக்குதல்!

  • June 13, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தளங்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் தீவிரமான தாக்குதல்களை நடத்தியுள்ளது. கடந்த 24 மணிநேரத்துக்குள் இந்த வான்வழித் தாக்குதல்களில் சுமார் 70-க்கும் மேற்பட்ட இலக்குகள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, எதிர்த்தரப்பின் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் முக்கிய கட்டடங்களை குறிவைத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மோதலில் பல ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டதுடன், குறைந்தது ஐந்து பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லெபனான் இராணுவ வீரர் ஒருவரும் இந்தத் […]

இலங்கை செய்தி

பிரபாகரனின் இளைய மகன் குறித்து டக்ளஸ் பரபரப்பு தகவல்

  • June 13, 2026
  • 0 Comments

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால், அவரைத் தான் நிச்சயமாக உயிருடன் பாதுகாத்திருப்பேன் என்று ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இறுதிப் போர் மௌனித்ததைத் தொடர்ந்து, இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த பாலச்சந்திரன் துப்பாக்கியால் சுடப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்று கூறப்படும் சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விரிவான பதிலளிக்கும் போதே டக்ளஸ் தேவானந்தா […]

இலங்கை செய்தி

கிணற்றில் விழுந்து 6 வயது சிறுவன் பலி: யாழில் சோகம்!

  • June 13, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, புலோலி வல்லிபுரக்குறிச்சி பகுதியில் கிணற்றில் விழுந்து 6 வயது மதிக்கத்தக்க சிறுவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வல்லிபுரக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மேற்படி சிறுவன், நேற்று வெள்ளிக்கிழமை இரவு முதல் திடீரெனக் காணாமல்போயுள்ளார். இது குறித்துக் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், பருத்தித்துறை பொலிஸார் அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர். இந்நிலையில் இன்று சனிக்கிழமை அதிகாலை முன்னெடுக்கப்பட்ட தொடர் தேடுதல்களின் போது, சிறுவனின் வீட்டுக்கு […]

இந்தியா

இராணுவ விமானம் விபத்து – ஐவர் பலி!

  • June 13, 2026
  • 0 Comments

இந்தியாவில் இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில்  05 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து “அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்ஹட் (Jorhat)  நகரில் இன்று இடம்பெற்றுள்ளது. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட அன்டோனோவ் ஆன்-32 என்ற விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்ற தகவல்  வெளியாகவில்லை. அதேநேரம் உயிரிழந்த குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, இந்தத் துயர நேரத்தில் அவர்களுடன் உறுதுணையாக நிற்பதாகவும்” விமானப்படை கூறியுள்ளது. மேலும் “விபத்துக்கான […]

உலகம் செய்தி

அமைதி ஒப்பந்தம் சுவிஸில் கைச்சாத்து: பாகிஸ்தான் ஏற்பாடு!

  • June 13, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி ஒப்பந்தம், விரைவில் சுவிட்சர்லாந்தில் கைச்சாத்திடப்படவுள்ளதென தெரியவருகின்றது. ஜெனிவாவில் இதற்குரிய நிகழ்வு இடம்பெறலாம் என ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இரு தரப்பு அமைதி பேச்சில் முக்கிய மத்தியஸ்தராகச் செயல்படும் பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர், தொடர்பில் சுவிட்சர்லாந்திலுள்ள தமது நாட்டுப் பிரதிநிதியுடன் முக்கியக் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார். இந்த அமைதி ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைக்கு சுவிட்சர்லாந்து அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்ட எடுக்கப்படும் இந்த முயற்சிகளை சுவிட்சர்லாந்து வரவேற்றுள்ளது. அமெரிக்கா […]