உலகம் செய்தி

அமைதி ஒப்பந்தம் சுவிஸில் கைச்சாத்து: பாகிஸ்தான் ஏற்பாடு!

  • June 13, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி ஒப்பந்தம், விரைவில் சுவிட்சர்லாந்தில் கைச்சாத்திடப்படவுள்ளதென தெரியவருகின்றது. ஜெனிவாவில் இதற்குரிய நிகழ்வு இடம்பெறலாம் என ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இரு தரப்பு அமைதி பேச்சில் முக்கிய மத்தியஸ்தராகச் செயல்படும் பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர், தொடர்பில் சுவிட்சர்லாந்திலுள்ள தமது நாட்டுப் பிரதிநிதியுடன் முக்கியக் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார். இந்த அமைதி ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைக்கு சுவிட்சர்லாந்து அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்ட எடுக்கப்படும் இந்த முயற்சிகளை சுவிட்சர்லாந்து வரவேற்றுள்ளது. அமெரிக்கா […]

ஐரோப்பா

ஜெர்மன் நாடாளுமன்றத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்?

  • June 13, 2026
  • 0 Comments

ஜெர்மன் நாடாளுமன்றம் (புண்டெஸ்டாக்) மற்றும் பிற அரசியலமைப்பு நிறுவனங்களைக் குறிவைத்து ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாக ஜெர்மன் உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரின்ட் (lexander Dobrindt) எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் நடாளுமன்ற தலைவர் ஜூலியா க்ளோக்னருக்கு (Julia Klöckner) அவசர கடிதம் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் முக்கிய அரசு நிறுவனங்களைப் பாதுகாக்க ஒரு நிரந்தர ஆளில்லா விமான எதிர்ப்புத் திறனை ஏற்படுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். “தற்போதைய அச்சுறுத்தலான சூழலைக் […]

செய்தி பொழுதுபோக்கு

செப்டம்பர் 04 திரைக்கு வருகிறது ‘மண்டாடி’!

  • June 13, 2026
  • 0 Comments

சூரி நாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ படம் எதிர்வரும் செப்டம்பர் 04 ஆம் திகதி திரையிடப்படவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. சூரி நாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். சுஹாஸ், மஹிமா நம்பியார் , சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பாலசரவணன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடலோர மக்களின் வாழ்க்கை, பாரம்பரியம், உணர்வுகள், அவர்களின் மன உறுதியை […]

உலகம்

பச்சை நண்டுகளை உட்கொண்டும், சிறுநீரை குடித்தும் வாழ்ந்த தொழிலதிபர்! பின்னணி என்ன?

  • June 13, 2026
  • 0 Comments

சீனாவின் 40 வயது மதிக்கத்தக்க தொழில் அதிபர் ஒருவர் விடுமுறையை கழிப்பதற்காக பிரபல விடுதிற்கு சென்றிருந்த நிலையில் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். ஹைனானில் உள்ள செங்மாய் கடற்கரையிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில், அவர் நிர்வாணமாகவும் சுயநினைவின்றியும் மிதந்த நிலையில் மீனவர்களால் காப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியைச் சேர்ந்த அந்த தொழிலதிபர், மே 27 அன்று ஹைக்கோ கடற்கரையில் இரவு நேர நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். அப்போது அவரிடம் தொலைபேசியும் […]

இலங்கை செய்தி

இலங்கையில் முதலீடு செய்ய அணிதிரளும் சீன நிறுவனங்கள்!

  • June 13, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் (China Harbour Engineering Company – CHEC) தலைவர் BAI YINZHAN உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் “நேரடியான மற்றும் தொலைநோக்குடைய தலைமைத்துவம்” காரணமாக இலங்கையில் முதலீடு செய்வதற்கு தமக்கு வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக சைனா ஹார்பர் நிறுவனத்தின் தலைவர் BAI YINZHAN தெரிவித்தார். குறிப்பாக, கொழும்பு துறைமுக […]

இந்தியா செய்தி

தீவிரமடைகிறது ‘எல் நினோ’!

  • June 13, 2026
  • 0 Comments

பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு நிலநடுக்கோட்டுப் பகுதியில் ‘எல் நினோ’ காலநிலை சூழல் தற்போது தீவிரமடைந்து வருகின்றது. இது நடப்பு தென்மேற்கு பருவமழை காலத்தில் மேலும் வலுவடையக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பெருங்கடல் மற்றும் வளிமண்டலம் ஆகிய இரண்டிலும் எல் நினோவிற்கான தெளிவான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளது. இது உலகளாவிய வானிலையிலும், இந்தியாவின் பருவமழைப் பொழிவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு […]

இலங்கை

பல்லேகம தேரரின் இரத்த மாதிரியை பெற உத்தரவு!

  • June 13, 2026
  • 0 Comments

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பல்லேகம ஹேமரத்ன தேரரின் இரத்த மாதிரியை பெற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணை  நேற்று  இடம்பெற்ற நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஹேமரத்ன தேரர், ஜூன் 16 ஆம் திகதி அன்று அரச இரசாயனப்பகுப்பாய்வு திணைக்களத்துக்குச் சென்று மரபணு பரிசோதனைக்கான இரத்த மாதிரியை வழங்க வேண்டும். தேரரிடமிருந்து மரபணு பரிசோதனைக்காக இரத்த மாதிரியை பெற்றுக்கொண்டதன் பின்னர், […]

கருத்து & பகுப்பாய்வு செய்தி

புகலிடம் கோருவோருக்கு நெருக்கடி : ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய விதிகள் நடைமுறைக்கு!

  • June 13, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தின் புகலிடக் கோரிக்கை மீதான கட்டுப்பாடுகள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. புதிய கட்டுப்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்றத் தலைவர் மேக்னஸ் புரூனர், “முதல் முறையாக, எங்களிடம் ஒரு விரிவான ஐரோப்பிய அமைப்பு உள்ளது,” எனக் கூறினார். மேலும், இந்த சீர்திருத்தம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அவற்றின் எல்லைகள் மீது அதிக கட்டுப்பாட்டை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். புதிய சீர்திருத்தங்களுக்கு அமைய, எல்லை சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.  ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் சட்டவிரோதமாக […]

இலங்கை செய்தி

இலங்கையில் களமிறங்குகிறது ஐ.நா.குழு!

  • June 13, 2026
  • 0 Comments

சித்திரவதைகளைத் தடுப்பது தொடர்பான ஐ.நா. உபகுழு UN Subcommittee on Prevention of Torture (SPT) ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை இந்தக் குழு இலங்கையில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக, கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகம்தெரிவித்துள்ளது. தடுப்புக்காவலில் உள்ள அல்லது சுதந்திரம் பறிக்கப்படக் கூடிய பிற இடங்களில் உள்ள மக்களுக்கான சீர்திருத்தங்களையும் பாதுகாப்புகளையும் அதிகாரிகள் முறையாகச் செயற்படுத்தியுள்ளார்களா என்பதை மதிப்பிடுவதே […]

அரசியல் இலங்கை செய்தி

சுரேஷ் சலேவுக்கு மரண தணடனை?

  • June 13, 2026
  • 0 Comments

“ உரிய சட்ட அணுகுமுறையின் பிரகாரம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு, சுரேஷ்ச லே குற்றவாளியென நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரணதண்டனைக்கூட வழங்கலாம். அதனை நாம் எதிர்க்கமாட்டோம். சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கையையே எதிர்க்கின்றோம்.” இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “சுரேஷ்சலே தடுப்புகாவலில் வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றார். அவர் குற்றவாளியெனில் மரண தண்டனை விதித்தால்கூட பரவாயில்லை. ஆனால் அவர் தற்போது சந்தேகநபர். குற்றவாளியென […]