உலகம் செய்தி

அமைதி ஒப்பந்தம் சுவிஸில் கைச்சாத்து: பாகிஸ்தான் ஏற்பாடு!

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி ஒப்பந்தம், விரைவில் சுவிட்சர்லாந்தில் கைச்சாத்திடப்படவுள்ளதென தெரியவருகின்றது.

ஜெனிவாவில் இதற்குரிய நிகழ்வு இடம்பெறலாம் என ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இரு தரப்பு அமைதி பேச்சில் முக்கிய மத்தியஸ்தராகச் செயல்படும் பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர், தொடர்பில் சுவிட்சர்லாந்திலுள்ள தமது நாட்டுப் பிரதிநிதியுடன் முக்கியக் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

இந்த அமைதி ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைக்கு சுவிட்சர்லாந்து அரசு விருப்பம் தெரிவித்துள்ளது.

பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்ட எடுக்கப்படும் இந்த முயற்சிகளை சுவிட்சர்லாந்து வரவேற்றுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி முயற்சி தொடர்பான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதென தெரியவருகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி