செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின், 29ஆம் நாள் அகழ்வு பணி நேற்று இடம்பெற்றது. இலங்கை செய்தி

செம்மணியில் 370 எலும்புக் கூடுகள் அகழ்ந்தெடுப்பு

  • June 20, 2026
  • 0 Comments

செம்மணி, சித்துப்பாத்தி, மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று மேலும் 03 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின், 29ஆம் நாள் அகழ்வு பணி நேற்று இடம்பெற்றது. இந்த அகழ்வின் போது, 3 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், புதிதாக 07 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. இதையடுத்து, அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 394 ஆக அதிகரித்துள்ளது. அவற்றில் 370 எலும்புக் கூடுகள் இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

உலகம்

ஈராக்கில் இரகசியப் படை – கழுகு பார்வையில் இருந்து தப்பிக்க முயலும் ஈரான்

  • June 20, 2026
  • 0 Comments

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவற்படை ஈராக் நாட்டில் சில ரகசியப் படைகளை அமைத்து அமெரிக்காவின் பார்வையில் இருந்து தப்பிக்க முயல்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த படைகள் மூலம் அமெரிக்காவின் நட்பு நாடுகள்மீது தாக்குதல் நடத்தியதாவும் கூறப்படுகிறது. இந்தத் தகவலை ஈராக்கில் உள்ள எட்டுப் பேர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். ஈராக்கில மூன்று அல்லது நான்கு ரகசியப் படைகள் உள்ளதாகவும், ஒவ்வொன்றிலும் கிட்டத்தட்ட 10 போராளிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் குறைந்தது ஏழுமுறை பாலைவனத்திலிருந்து ஏவுகணைத் […]

உலகம்

சிங்கப்பூரில் 235,000 டொலருக்கும் அதிக மதிப்புள்ள வைரங்கள் திருட்டு

  • June 20, 2026
  • 0 Comments

சிங்கப்பூரில் $235,000க்கும் மேல் மதிப்புள்ள வைரத்தை திருடிய குற்றச்சாட்டில் நேற்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 30 மற்றும் 42 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சைனாடவுன் வட்டாரத்தில் உள்ள கிரேத்தா ஆயர் வீதியில் அமைந்துள்ள நகைக் கடையொன்றில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர்கள் திருடப்பட்ட வைரங்களுடன் விமான நிலையம் ஊடாக தப்பிச் செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட வைரங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் […]

போட்டிக்குப் பிறகு மொராக்கோவின் இஸ்மாயில் சைபாரி கொண்டாடுகிறார். செய்தி விளையாட்டு

ஸ்காட்லாந்து அணிக்கு ஏமாற்றத்தை தந்த போட்டி

  • June 20, 2026
  • 0 Comments

2026 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மொராக்கோ அணி , ஸ்காட்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு (Knockout Round) முன்னேறும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் பாஸ்டன் மைதானத்தில் 64,000-க்கும் அதிகமான ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இப்போட்டியில், ஆட்டம் தொடங்கிய ஒரு நிமிடத்திற்குள்ளேயே மொராக்கோ அணி முன்னிலை பெற்றது. ரியல் மாட்ரிட் நட்சத்திரம் பிராஹிம் டயஸ் (Brahim Diaz) தூக்கிக் கொடுத்த பந்தை, 25 வயதான இஸ்மாயில் சைபாரி மிக நேர்த்தியாகக் கட்டுப்படுத்தி […]

உலகம் செய்தி

அமெரிக்காவுடனான உறவில் விரிசல் : தற்சார்ப்பு நிலையை வலியுறுத்தும் இஸ்ரேல்

  • June 20, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான இஸ்ரேலின் உறவு, பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு தற்சார்பை வலுவாக வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில்  400 கி.மீ. தூரம் வரை செல்லக்கூடியதும், 10 மீட்டருக்கும் குறைவான ஆழத்தில் பாயக்கூடியதுமான லோரா பாலிஸ்டிக் ஏவுகணையை இஸ்ரேல் சோதனை செய்துள்ளது. இநத் ஆயுதத்தை இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தயாித்துள்ளது. லெபனான் மற்றும் ஈரான் விவகாரங்களில் அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சில நாட்களின் பின் இந்த […]

2026 உலகக் கோப்பை குரூப் C கால்பந்துப் போட்டியின் போது பிரேசிலின் முன்கள வீரர் மேதியஸ் குன்ஹா தனது அணியின் இரண்டாவது கோலை அடித்ததைக் கொண்டாடுகிறார் செய்தி விளையாட்டு

பிரேசில் அபார வெற்றி – வெளியேறியது ஹைட்டி

  • June 20, 2026
  • 0 Comments

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹைட்டியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் நட்சத்திரமான மேதியூ குன்ஹா இரண்டு கோல்களை அடித்து தனது திறமையை நிரூபித்ததோடு, வினிசியஸ் ஜூனியர் ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இந்தத் தோல்வியின் மூலம் ஹைட்டி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது. பிலடெல்பியா மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாகமாகத் தங்கள் அணிகளை ஆதரித்த நிலையில், […]

ஆப்பிரிக்கர்கள் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கடந்த ஆண்டு வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப் தென்னாப்பிரிக்காவின் சிரில் ரமபோசாவை நேருக்கு நேர் சந்தித்தார். aappirikkargal thunpuruththappaduvathaagak koorappatta உலகம் செய்தி

தென்னாபிரிக்காவுக்கான நிதி உதவியை நிறுத்தியது அமெரிக்கா

  • June 20, 2026
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவில் HIV பரவலைத் தடுப்பதற்காக வழங்கி வந்த நிதி உதவிகளை நிறுத்தப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உலகிலேயே மிக அதிகமாக, சுமார் 80 லட்சத்திற்கும் (8 Million) அதிகமான எச்.ஐ.வி HIV பாதிப்புள்ள மக்கள் வாழும் நாடு தென்னாப்பிரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்காவில் வாழும் சிறுபான்மை வெள்ளை இனத்தவரான ‘ஆப்பிரிக்கானர்’ (Afrikaner) சமூகத்தினரைப் பாதுகாக்க அந்நாட்டு அரசு தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டின் பின்னணியிலேயே, நிதி நிறுத்த முடிவை எடுத்துள்ளதாக அமெரிக்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த […]

ஆயமநசகநைடன இடைத்தேர்தலில் Andy Burnham அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரித்தானிய பிரதமரின் தலைமைப் பதவிக்கு கட்சிக்குள் பலத்த சவால் எழுந்துள்ளது. ஐரோப்பா கல்வி மத்திய கிழக்கு

பிரித்தானிய பிரதமரின் ‘தலை’ குறிவைப்பு

  • June 20, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் Sir Keir Starmer பதவி விலகுவதற்கான காலக்கெடுவை அறிவிக்க வேண்டும் என கட்சிக்குள்ளேயே கோரிக்கைகள் வலுக்க தொடங்கியுள்ளன. Makerfield இடைத்தேர்தலில் Andy Burnham அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த வெற்றி, லேபர் கட்சிக்குள் (Labour Party) புதிய தலைமைக்கான போட்டியை உக்கிரமடைய வைத்துள்ளது. குழப்பம், பிளவு ஏற்படுவதை தடுக்கும் நோக்கில், ஆண்டி பர்ன்ஹாமிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான திட்டங்களை பிரதமர் அறிவிக்க வேண்டும் என லேபர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் […]

மோதல் நடந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள், குறைந்தபட்சம் ஒரு பெட்டியாவது தண்டவாளத்திலிருந்து விலகிச் சென்றிருப்பதைக் காட்டுவதாகத் தெரிகிறது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

Bedford பகுதியில் கோர விபத்து: ரயில் சாரதி பலி – 88 பேர் காயம்

  • June 20, 2026
  • 0 Comments

Bedford பகுதியில் இரு ரயில்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில், ரயில் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 89 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தை காவல்துறை ‘பேரிடர் சம்பவமாக’ (Major Incident) அறிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் 11 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்றும், 22 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என்றும் East of England ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை மதியம், லண்டன் செயின்ட் பான்க்ராஸ் (London St Pancras) நோக்கி சென்று கொண்டிருந்த இரண்டு ‘ஈஸ்ட் […]

இலங்கை

திறைசேரியில் இருந்து பணம் மாயமான விவகாரம் – விசாரணைகளின் தற்போதைய நிலவரம்

  • June 19, 2026
  • 0 Comments

2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மூன்றாம் தரப்பினருக்கு  கைமாற்றப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகள், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் முறையாகவும் தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ச.ரி. அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம், குற்றப் புலனாய்வுத் துறை, சட்டமா அதிபர் துறை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றத்தில் உண்மைகளைத் தெரிவிப்பதில் தொடங்கி, இந்த விசாரணை மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விவகாரம் […]