செம்மணியில் 370 எலும்புக் கூடுகள் அகழ்ந்தெடுப்பு
செம்மணி, சித்துப்பாத்தி, மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று மேலும் 03 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின், 29ஆம் நாள் அகழ்வு பணி நேற்று இடம்பெற்றது.
இந்த அகழ்வின் போது, 3 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், புதிதாக 07 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.
இதையடுத்து, அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 394 ஆக அதிகரித்துள்ளது.
அவற்றில் 370 எலும்புக் கூடுகள் இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.




