நீர்கொழும்பிலிருந்து யாழ்.சிறைச்சாலைக்கு 60 கைதிகள் மாற்றம் இலங்கை செய்தி

நீர்கொழும்பிலிருந்து யாழ்.சிறைச்சாலைக்கு 60 கைதிகள் மாற்றம்

  • July 8, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர் பலத்த பாதுகாப்புடன் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு தினங்களாகக் கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற பயங்கர மோதல்களில், சிறைக் காவலர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளமையுடன், 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தத் துரதிர்ஷ்டவசமான கோரச் சம்பவத்தையடுத்து, நீர்கொழும்பு சிறைச்சாலை அமைந்துள்ள பகுதி முழுவதும் இன்னும் தணியாத பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில், […]

ஈரானின் தெற்குப் பகுதிகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அந்நாட்டு ராணுவம் கடுமையாகக் கண்டித்துள்ளது. உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க தலையீட்டை ஏற்க முடியாது: ஈரான் திட்டவட்டம்

  • July 8, 2026
  • 0 Comments

ஈரானின் தெற்குப் பகுதிகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அந்நாட்டு ராணுவம் கடுமையாகக் கண்டித்துள்ளது. இந்த நடவடிக்கையை ஒரு நேரடி ஆக்கிரமிப்பு என்று சுட்டிக்காட்டியுள்ள ஈரான், இதற்குப் பதிலடியாகப் பயங்கரமான தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளது. குறிப்பாக, உலக வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்காவின் தலையீட்டைத் தாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று ஈரான் ராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது. அந்த கடல் வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டேங்கர்கள் ஈரானால் தீர்மானிக்கப்படும் […]

இலங்கை

பூசா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி திடீரென உயிரிழப்பு

  • July 8, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து பூசா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட சிறைக் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிறைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கிடையே நீர்கொழும்பு சிறையில்  தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு மாற்றும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கமைய நேற்று மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு 63 கைதிகள் மாற்றப்பட்டதாக அறியமுடிகிறது. அதேபோல் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு 60 கைதிகள் மாற்றப்பட்டிருந்தமையும் […]

உலகம்

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் – கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

  • July 8, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 03 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரத்தின்படி    ஒரு பேரல் WTI கச்சா எண்ணெயின் விலை 2.27 சதவீதம் அதிகரித்து, US$72.04 ஆக உயர்ந்துள்ளது. ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 2.18 சதவீதம் அதிகரித்து, US$75.78 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு பேரல் முர்பான் கச்சா எண்ணெயின் விலை 3.43 சதவீதம் அதிகரித்து, […]

ஈரான் சபாநாயகரும், பேச்சுவார்த்தைக்குழு தலைவருமான Mohammed Bagher Ghalibaf உலகம் செய்தி

உறுதிமொழியை மீறிவிட்டது அமெரிக்கா: அடிபணியமாட்டோம்

  • July 8, 2026
  • 0 Comments

அமெரிக்கா தனது வாக்குறுதிகளை மீறியுள்ளதாக ஈரானிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் பகிரங்கமாகக் Mohammad Baqer Qalibaf குற்றம் சாட்டியுள்ளார். கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நான்கு மாதங்களாக நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன. தற்போது வரை இந்த விவாதங்களில் எந்தவொரு உறுதியான முடிவும் எட்டப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானியத் தலைமை அமெரிக்காவிற்குப் பணியப் போவதில்லை என்பதை கலிபாஃப் தனது சமூக ஊடகப் பதிவின் மூலம் […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஹார்முஸ் நீரிணையில் பதற்றம்: ஈரான்மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

  • July 8, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) மூன்று எண்ணெய் கப்பல்கள் (Oil tankers) மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அமெரிக்க மத்திய கட்டளைகம் (Centcom) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஹார்முஸ் நீரிணையில் இருந்த ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) 60-க்கும் மேற்பட்ட சிறிய படகுகள் உட்பட 80-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் கடந்த மாதம் கையெழுத்தான அமெரிக்க-ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறும் […]

FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரில் எகிப்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜெண்டினா அணி த்ரில் வெற்றி பெற்றது . செய்தி விளையாட்டு

அர்ஜென்டினா த்ரில் வெற்றி – கண்கலங்கினார் மெஸ்ஸி

  • July 8, 2026
  • 0 Comments

FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரில் எகிப்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜெண்டினா அணி த்ரில் வெற்றி பெற்றது . அட்லாண்டா நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2-0 என்ற கணக்கில் பின்னடைவில் இருந்தது நடப்பு உலக சாம்பியனான அர்ஜெண்டினா அணி. ஆட்டத்தின் முதல் 78 நிமிடங்கள் வரை எகிப்து அணி முன்னிலையில் இருந்தது. அடுத்த சில நிமிடங்கள் தாக்கு பிடித்தால் காலிறுதிக்கு அந்த அணி முன்னேறி இருக்கும். ஆனால், அந்த சவாலை […]

உலகம்

போயிங் விமானம் மாயம் – கடலில் விழுந்ததாக அச்சம்!

  • July 8, 2026
  • 0 Comments

கராச்சிக்குச் சென்று கொண்டிருந்த பாகிஸ்தானில் பதிவுசெய்யப்பட்ட போயிங் 737 சரக்கு விமானம் ஒன்று, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்ததாக பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து கே2 ஏர்வேஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் 27 ஆண்டுகள் பழமையான, இந்த விமானம் செங்குத்தான இறுதி இறக்கத்திற்கு முன்பு ஏற்பட்ட தொடர்ச்சியான திடீர் உயர மாற்றங்களுக்குப் பிறகு, கராச்சிக்கு தென்மேற்கே கடலில் விழுந்து […]

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது T20 போட்டியில் இந்தியா அணி படுதோல்வி அடைந்துள்ளது. செய்தி விளையாட்டு

இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து சாதனை வெற்றி

  • July 8, 2026
  • 0 Comments

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது T20 போட்டியில் இந்தியா அணி படுதோல்வி அடைந்துள்ளது. பில் சால்ட்டின் அதிரடியான 70 ரன்கள் உதவியோடு, இங்கிலாந்து நிர்ணயித்த 202 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்தியா, ஒட்டுமொத்தமாகவே வெறும் 76 ரன்களுக்கு சுருண்டது. இது T2 போட்டிகளில் இந்தியாவின் இரண்டாவது மிகக் குறைந்த ஸ்கோராகும். இங்கிலாந்தின் 90mph வேகப்பந்து வீச்சாளர்களான ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜோஷ் டங் ஆகிய இருவரும் இணைந்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவை நிலைகுலையச் செய்தனர். […]

இந்தியா

கேரளாவின் வயநாட்டில் பாரிய நிலச்சரிவு – மூவர் உயிரிழப்பு

  • July 7, 2026
  • 0 Comments

கேரளா வயநாட்டில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் கேரளா மாநிலம், வயநாடு (Wayanad) மாவட்டத்தின் மேப்பாடி (Meppady) அருகேயுள்ள கல்லாடி பகுதியில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட இரட்டைச் சுரங்கப்பாதை கட்டுமானப் பணியிடத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற நிலையில், கட்டுமானப் பணியின்போது வெட்டப்பட்ட மண்மேடு சரிந்து விழுந்து இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன்,  6 பேர் உள்ளூர் மக்களால் காயங்களுடன் […]