உலகம் செய்தி

உறுதிமொழியை மீறிவிட்டது அமெரிக்கா: அடிபணியமாட்டோம்

ஈரான் சபாநாயகரும், பேச்சுவார்த்தைக்குழு தலைவருமான Mohammed Bagher Ghalibaf

அமெரிக்கா தனது வாக்குறுதிகளை மீறியுள்ளதாக ஈரானிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் பகிரங்கமாகக் Mohammad Baqer Qalibaf குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நான்கு மாதங்களாக நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன.

தற்போது வரை இந்த விவாதங்களில் எந்தவொரு உறுதியான முடிவும் எட்டப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானியத் தலைமை அமெரிக்காவிற்குப் பணியப் போவதில்லை என்பதை கலிபாஃப் தனது சமூக ஊடகப் பதிவின் மூலம் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தூதரக முயற்சிகள் தற்போது பெரிய சவால்களை எதிர்கொண்டுள்ளன.

ஈரானின் இலக்குகள்மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள நிலையிலேயே, சபாநாயகர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி