போயிங் விமானம் மாயம் – கடலில் விழுந்ததாக அச்சம்!
கராச்சிக்குச் சென்று கொண்டிருந்த பாகிஸ்தானில் பதிவுசெய்யப்பட்ட போயிங் 737 சரக்கு விமானம் ஒன்று, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்ததாக பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து கே2 ஏர்வேஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் 27 ஆண்டுகள் பழமையான, இந்த விமானம் செங்குத்தான இறுதி இறக்கத்திற்கு முன்பு ஏற்பட்ட தொடர்ச்சியான திடீர் உயர மாற்றங்களுக்குப் பிறகு, கராச்சிக்கு தென்மேற்கே கடலில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
காணாமல் போன விமானத்தைக் கண்டுபிடிப்பதற்காக, பல்வேறு முகமைகள் மூலம் கடலில் ஒருங்கிணைந்த தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை அதிகாரிகள் தொடங்கியுள்ளதாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
கே2 ஏர்வேஸ், பாகிஸ்தான் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் மற்றும் பிற அரசு முகமைகளுடன் ஒத்துழைத்து வருவதாகக் கூறியுள்ளது.




