இலங்கை

பூசா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி திடீரென உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து பூசா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட சிறைக் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிறைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே நீர்கொழும்பு சிறையில்  தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு மாற்றும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கமைய நேற்று மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு 63 கைதிகள் மாற்றப்பட்டதாக அறியமுடிகிறது. அதேபோல் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு 60 கைதிகள் மாற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்