பூசா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி திடீரென உயிரிழப்பு
நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து பூசா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட சிறைக் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிறைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நீர்கொழும்பு சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு மாற்றும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கமைய நேற்று மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு 63 கைதிகள் மாற்றப்பட்டதாக அறியமுடிகிறது. அதேபோல் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு 60 கைதிகள் மாற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




