நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா, நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோகினி எல்ல நீர் வீழ்ச்சி பகுதியில் இன்று (22) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். இலங்கை செய்தி

மலையகத்தில் ஆட்டோ விபத்து: இருவர் பலி – மூவர் படுகாயம்

  • July 22, 2026
  • 0 Comments

நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா, நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோகினி எல்ல நீர் வீழ்ச்சி பகுதியில் இன்று (22) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். இரு வயோதிபர்களே இவ்வாறு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இரு பாடசாலை மாணவர்களும், ஆட்டோ சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த இரு சிறுவர்களும், ஆட்டோ ஓட்டுநரும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். வீதியை விட்டு விலகி ஆட்டோ பள்ளத்தில் வீழ்ந்ததிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர்ச் செலவு இதுவரை 37.5 பில்லியன் டொலர்களாக உயர்த்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரானுக்கு எதிரான போர்ச் செலவு 37.5 பில்லியன் டொலர்களாக உயர்வு

  • July 22, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர்ச் செலவு இதுவரை 37.5 பில்லியன் டொலர்களாக உயர்த்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். தீவிர குண்டுவீச்சுகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், போருக்கான அவசர நிதியைக் கோரி, இது தொடர்பாகக் கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அமெரிக்க இடைக்காலத் தேர்தல் நடைபெற இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், தலைவர் டொனால்ட் ட்ரம்பின் குடியரசுத் கட்சியினர் பிரதிநிதிகள் சபை மற்றும் […]

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கை (Andrew Patrick) , இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் நேற்று (21) சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கை செய்தி

பிரிட்டன் தூதுவரை சந்தித்தார் ஜீவன் எம்.பி.

  • July 22, 2026
  • 0 Comments

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கை (Andrew Patrick) , இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் நேற்று (21) சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பில் பிரித்தானிய துணை உயர்ஸ்தானிகர் தெரேசா ஓ’மஹோனி (Theresa O’Mahony) அவர்களும் கலந்துகொண்டார். இதன்போது, மலையக மக்கக்கான காணி உரிமை, அவர்களுக்கான பிரித்தானியாவின் உதவிகள், ‘டிட்வா’ புயல் ஏற்படுத்திய தாக்கங்கள் மற்றும் நீண்டகாலமாக நிலவிவரும் ஏனைய முக்கிய பிரச்சினைகள் குறித்தும் விரிவாகக் கருத்துகள் பரிமாறப்பட்டன. பிரித்தானியத் தூதுவர் குழுவின் […]

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) பிரதிநிதிகள் குழுவினர், நாளை மறுதினம் புதன்கிழமை (22) காலை 09 மணிக்குச் செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை நேரில் சென்று பார்வையிடவுள்ளனர். இலங்கை செய்தி

செம்மணி மனிதப் புதைகுழியை இன்று நேரில் பார்வையிடுகின்றனர் ஐரோப்பிய தூதுவர்கள்

  • July 22, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள் அடங்கிய 8 பேர் கொண்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர், செம்மணி மனிதப் புதைகுழியை இன்று புதன்கிழமை நேரில் பார்வையிடவுள்ளனர். செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியை ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர் நேரில் பார்வையிட அனுமதி கோரி, கடந்த வெள்ளிக்கிழமை காணாமல்போனோர் அலுவலகச் சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதுடன், அன்றைய […]

இந்தியா

நச்சு வாயு கசிவால் சுரங்க பாதையில் ஏற்பட்ட விபத்து – 10 பேர் உயிரிழப்பு

  • July 21, 2026
  • 0 Comments

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் உள்ள ஒரு நீர்மின் திட்டத்தில் கட்டுமானத்தில் இருந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில், குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 17 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இமயமலைப் பகுதியில், பூட்டான் மற்றும் திபெத் எல்லையருகே உள்ள சமர்துங் கிராமத்தில், நேற்று இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. அரசுக்குச் சொந்தமான தேசிய நீர்மின் சக்தி கழகத்தின் (NHPC) 500 மெகாவாட் திட்டத்திற்காக, டீஸ்டா ஆற்றின் மீது கட்டுமானப் பணிகள் இடம்பெற்ற போதே இந்த […]

உலகம்

மத்தியக்கிழக்கில் மோதல்கள் நிறைவுக்கு வர வாய்ப்பில்லை – அமெரிக்க உளவுத்துறை தகவல்

  • July 21, 2026
  • 0 Comments

ஈரானின் பேச்சுவார்த்தை நிலையை மாற்றுவதற்கோ அல்லது நடந்து வரும் மோதலைத் தணிப்பதற்கோ வாய்ப்பில்லை என்று அமெரிக்க உளவுத்துறை மதிப்பிட்டுள்ளது. ஈரான் தனது தொடர் தாக்குதல்களின் ஒரு பகுதியாக, ஹோர்முஸ் ஜலசந்தியில் மற்றொரு எண்ணெய்க் கப்பலைத் தாக்கியுள்ளது. அதே நேரத்தில் அதன் புரட்சிகரப் பாதுகாப்புப் படை கடைசி நாள் வரை போராடுவோம் என்று சபதம் செய்துள்ளது. இந்நிலையிலேயே உளவுத்துறையின் தகவல் வந்துள்ளது. இதற்கிடையே ஹோர்முஸ் ஜலசந்தி தொடர்பான கருத்து வேறுபாடுகளைக் களைவதற்காக, கத்தார், எகிப்து, ஓமன் மற்றும் பாகிஸ்தான் […]

ஐரோப்பா

இங்கிலாந்தின் பணவீக்கம் சரிய வாய்ப்பு – பர்ன்ஹாமிற்கு காத்திருக்கும் சவால்

  • July 21, 2026
  • 0 Comments

கடந்த ஜுன் மாதத்தில் இங்கிலாந்தின் பணவீக்கம் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமிற்கு (Andy Burnham) தற்காலிக ஊக்கத்தை அளிக்கிறது. மே மாதத்தில் 2.8% ஆக இருந்த பணவீக்கம், ஜூன் மாதத்தில் 2.7% ஆகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சியே இந்த சரிவுக்கு முக்கியக் காரணமாகும். ஜூன் மாதத்தில் ஒரு லிட்டர் டீசலின் விலை 16 பென்ஸுக்கு  மேல் சரிந்துள்ளது. இது 2000-ஆம் ஆண்டிற்குப் […]

திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் புத்த விகாரை எதுவும் கட்டப்படமாட்டாது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார். இலங்கை செய்தி

கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் விகாரை அமைக்க ஏற்பாடா?

  • July 21, 2026
  • 0 Comments

திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் புத்த விகாரை எதுவும் கட்டப்படமாட்டாது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார். கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளப்படும் இடத்தில், நாளை (22) புத்த விகாரை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வந்தன. இது தொடர்பாகத் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனைத் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “இவ்விடயம் […]

யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39ஆவது நாளான இன்று 13 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 13 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • July 21, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39ஆவது நாளான இன்று 13 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 4 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் மூன்று சிறுவர்களுடைய எலும்புக்கூடுகளாகும். இந்த நிலையில், செம்மணி மனிதப் புதைகுழியில் மொத்தம் 93 நாட்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள அகழ்வுப் பணிகளின் மூலம் இதுவரையில் 467 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அதில் 444 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.  

ஐரோப்பா

போலந்து முதல் இத்தாலி வரை – 06 நாடுகளை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான நடை பாதை

  • July 21, 2026
  • 0 Comments

போலந்தின் பால்டிக் கடற்கரையிலிருந்து இத்தாலியின் ஏட்ரியாடிக் கடல் வரை ஆறு நாடுகளை இணைக்கும் நடைபாதையொன்றை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வோல்ஃப் டிரெயில்’ (Wolf Trail) என்றழைக்கப்படும் இந்த பாதையானது சுமார் 2,000 மைல் நீளம் கொண்டது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நிறுவனமான ஜாக் வோல்ஃப்ஸ்கின் (Jack Wolfskin) வடிவமைத்த இந்த பாதையானது, போலந்து, ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, இத்தாலி மற்றும் சுலோவீனியா ஆகிய நாடுகளை உள்ளடக்கி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த முழுப் பாதையிலும் பயணிக்கும் மலையேறுபவர்கள் 78,416 மீட்டர் […]