உலகம்

இரசாயன ஆயுத பயன்பாடு : சிரியாவில் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தல்!

  • June 5, 2026
  • 0 Comments

சிரியாவில் இரசாயன ஆயுதங்கள் பிரச்சினை குறித்து அனைத்துத் தரப்பினரும் விரைவில் ஒரு இறுதித் தீர்ப்பை எட்ட வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. சீனத் தூதர் சன் லெய், நேற்று  ஐ.நா. பாதுகாப்பு சபையில் உரையாற்றும்போது இந்த கருத்தினை முன்வைத்தார். இரசாயன ஆயுதத் தடை அமைப்பு தனது தொழில்முறை அதிகாரத்திற்கு ஏற்ப செயல்பட்டு, அதன் தொழில்நுட்பப் பிரச்சினைகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் கூறினார். எந்தவொரு நாடு, அமைப்பு அல்லது தனிநபர் எந்தச் சூழ்நிலையிலும் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதை […]

இலங்கை செய்தி

86 வன ஒதுக்கீடுகளை பிரகடனப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை!

  • June 5, 2026
  • 0 Comments

2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு, “காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக அணிதிரள்வோம்” என்ற கருப்பொருளின் கீழ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (05) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. அனைத்து உயிரினங்களினதும் இருப்பை உறுதி செய்யும் நிலையான சுற்றுச்சூழலை நோக்கமாகக் கொண்ட தற்போதைய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் கொள்கைக்குள், சமூக-பொருளாதார வளர்ச்சிக்கும் சூழலுக்கும் இடையில் சமநிலையைப் பாதுகாக்கும் வகையில், ஆரோக்கியமான சமூகம் மற்றும் சமநிலையான சூழலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நிலையான வளர்ச்சிப் கட்டமைப்பிற்குள் […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

செயற்கை நுண்ணறிவால் (AI) வடிவமைக்கப்பட்ட முதல் தடுப்பூசி!!! பிரித்தானியா சாதனை!

  • June 5, 2026
  • 0 Comments

வைரஸ் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக செயற்கை நுண்றிவால் வடிவமைக்கப்பட்ட தடுப்பூசியொன்று  உருவாக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள கேம்பிரிட்ஜ் மற்றும் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் தலைமையில் இயங்கும் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. முற்றிலும் செயற்கை நுண்ணறிவால் (AI) வடிவமைக்கப்பட்ட முதல் தடுப்பூசி இதுவாகும். “இன்ஃப்ளூயன்ஸா, கொரோனா வைரஸ்கள் மற்றும் எபோலா  போன்ற வைரஸ்கள் தொடர்ந்து உருமாறி வருகின்றன. ஆகவே புதிய உருமாறும் திரிபுகளுக்கு ஏற்ப இந்த தடுப்பூசி வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் […]

உலகம்

தெஹ்ரானில் யுரேனியம் வைக்கப்பட்டுள்ள இடத்தை கூட இனங்காணமுடியவில்லை!! UN அறிவிப்பு!

  • June 5, 2026
  • 0 Comments

ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் ஒரு பகுதியை மூன்றாம் நாட்டிற்கு மாற்றுவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அல் அரபியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் முக்கியப் பகுதிகள் மீதான பார்வையை இழந்துவிட்டதாக ஐக்கிய நாடுகளின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், தெஹ்ரானிடம் உள்ள அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பின் அளவு, கலவை அல்லது அதன் இருப்பிடத்தைக்கூட தற்போது சரிபார்க்க முடியவில்லை என்றும் அவ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச அணுசக்தி முகமையால் (IAEA) உறுப்பு நாடுகளுக்கு […]

இந்தியா

எபோலா தொற்று அறிகுறி – ராஜஸ்தானில் பெண் ஒருவர் தனிமைப்படுத்தலில்!

  • June 5, 2026
  • 0 Comments

ராஜஸ்தானில் எபோலா வைரஸ் தொற்றால் நபர் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கும் வேளையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு மருத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஏர் அரேபியா விமானத்தில் ஷார்ஜாவிலிருந்து ஜெய்ப்பூருக்கு வந்த  உகாண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு எபோலா தொற்றுடன் ஒத்துப்போகும் அறிகுறிகள் தென்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளாார். பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே உண்மை நிலவரம் தெரியவரும் என மருத்துவர்கள் […]

இலங்கை செய்தி

தியாகி பொன். சிவகுமாரன் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

  • June 5, 2026
  • 0 Comments

தமிழின விடுதலைப் போராட்டத்தில் வித்திட்ட முதல் தியாகியான பொன். சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை யாழ். உரும்பிராயில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில், உரும்பிராய் சந்தை வளாகத்தில் அமைந்துள்ள தியாகி பொன். சிவகுமாரனின் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இன்று காலை 8 மணியளவில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின. நிகழ்வின் ஆரம்பத்தில், பொது ஈகைச் சுடரினை தியாகி […]

ஐரோப்பா

முடிந்துபோன வாழ்க்கைக்கு 24 ஆண்டுகளாக போராட்டம்!! 6.6 மில்லியன் பவுண்டுகளை வென்ற பெண்!

  • June 5, 2026
  • 0 Comments

இருபது ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கப்பட்டுவிட்டதாகத் தோன்றிய  விவாகரத்து வழக்கொன்றில் இந்திய பெண் ஒருவர் 6.6 மில்லியன் பவுண்டுகளை ஜீவனாம்சமாக பெற்றுள்ளார். இந்த விசித்திரமான வழக்கு பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவை தாயகமாகக் கொண்ட வர்ஷா கோஹில் என்ற பெண் தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி அவரிடம் இருந்து விவகாரத்து கோரியுள்ளார். 2002-ல் வர்ஷா கோஹில், தனது கணவர் பத்ரேஷ் கோஹிலை பிரிவதற்கு  விவாகரத்து வழக்கை தாக்கல் செய்தார். இதற்கமைய கணவரான பத்ரேஷ்  அவருக்கு […]

உலகம் செய்தி

உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படும் இஸ்ரேல்: பிரிட்டனிலும் கடும் அதிருப்தி!

  • June 5, 2026
  • 0 Comments

சர்வதேச அளவில் இஸ்ரேலின் நற்பெயர் பெரும் சரிவைச் சந்தித்துள்ளதாக பியூ ஆராய்ச்சி மையம் (Pew Research Center) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேற்படி ஆய்வில் பங்கேற்ற 36 நாடுகளில் பெரும்பாலானவற்றில், பெரும்பான்மையான மக்கள் இஸ்ரேல் குறித்து எதிர்மறையான கருத்துக்களைக் கொண்டுள்ளனர். கடந்த பெப்ரவரி 8 முதல் மே 13 வரையான காலப்பகுதியில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நாடுகளில் உள்ள முதியவர்களில் 67 சதவீதமானோர்பேர் இஸ்ரேல்மீது அதிருப்தி வெளியிட்டுள்ளனர். வெறும் 25 சதவீதமானோரே இஸ்ரேலுக்கு ஆதரவாக […]

உலகம் செய்தி

ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதியை கொன்றது இஸ்ரேல்!

  • June 5, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் பொறியியல் பிரிவு தளபதி அப்துல் ஹர்ப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெற்கு லெபனானில் இஸ்ரேலிய படைகளுக்கு எதிராக வெடிபொருட்களைத் தயாரித்ததில் இவர் முக்கிய பங்கு வகித்தார் என இஸ்ரேல் உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது. 2006-ஆம் ஆண்டு போரிலிருந்து இவர் இஸ்ரேல் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டு வந்ததாக ராணுவத் தரப்பு தெரிவிக்கிறது. எனினும், தமது தளபதியின் உயிரிழப்பு குறித்த தகவலை ஹிஸ்புல்லா அமைப்பு இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அதேவேளை, […]

ஐரோப்பா செய்தி

அரச குடும்ப சொத்துக்களை வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டிய Andrew?

  • June 5, 2026
  • 0 Comments

Prince Andrew அரசிற்குச் சொந்தமான தங்குமிடங்களை வாடகைக்கு வழங்கி வருமானம் ஈட்டியுள்ளார் என தெரியவந்துள்ளது. பிரிட்டிஷ் மன்னர் குடும்பத்தின் சொத்துக்களை நிர்வகிக்கும் Crown Estate அமைப்பிடமிருந்து குத்தகைக்கு எடுத்த ராயல் லாட்ஜ் எஸ்டேட்டில் உள்ள மூன்று வீடுகளே வாடகைக்கு விடப்பட்டு வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் (NAO) அறிக்கையில்மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. எனினும்,வாடகைத் தொகை எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. மேலும், மன்னர் குடும்பத்தின் அதிகாரப்பூர்வப் பணிகளில் ஈடுபடாத  ஆண்ட்ரூவின் மகள்களான Princess Eugenie […]