தெஹ்ரானில் யுரேனியம் வைக்கப்பட்டுள்ள இடத்தை கூட இனங்காணமுடியவில்லை!! UN அறிவிப்பு!
ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் ஒரு பகுதியை மூன்றாம் நாட்டிற்கு மாற்றுவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அல் அரபியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் முக்கியப் பகுதிகள் மீதான பார்வையை இழந்துவிட்டதாக ஐக்கிய நாடுகளின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது.
மேலும், தெஹ்ரானிடம் உள்ள அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பின் அளவு, கலவை அல்லது அதன் இருப்பிடத்தைக்கூட தற்போது சரிபார்க்க முடியவில்லை என்றும் அவ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச அணுசக்தி முகமையால் (IAEA) உறுப்பு நாடுகளுக்கு அனுப்பப்பட்ட ஒரு இரகசிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஈரானில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பின் தற்போதைய அளவு, கலவை அல்லது இருப்பிடம் குறித்தோ அல்லது செறிவூட்டல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ஈரான் நிறுத்திவிட்டதா என்பது குறித்தோ எந்தத் தகவலையும் முகமையால் வழங்க முடியாது” என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




