ஐரோப்பா

பெல்ஃபாஸ்ட் கத்திக்குத்து தாக்குதல் : சந்தேகநபருக்கு பிணை வழங்க மறுப்பு!

  • June 10, 2026
  • 0 Comments

பெல்ஃபாஸ்டில் (Belfast) வன்முறை வெடிப்பதற்கு காரணமான சூடான் நாட்டு புகலிடக் கோரிக்கையாளரான ஹாடி அலோடிட்   இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது ஹாடி அலோடிட் மீது கொலை முயற்சி, NHS கதிரியக்க நிபுணரைக் கொல்ல அச்சுறுத்தல், மற்றும் கத்தி வைத்திருந்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன் அலோடிட்டிற்கு பிணை வழங்கப்பட்டால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் எனவும் பொலிஸார் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர். இதனைத் தொடர்ந்து அவருக்கு பிணை வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் கலவரம் மற்றும் வன்முறை […]

அரசியல் இலங்கை செய்தி

தகவல்களை மறைக்கும் சுரேஷ் சலே: கோட்டாவுக்கு எதிரான தடையால் குழப்பத்தில்!

  • June 10, 2026
  • 0 Comments

” சத்தியாக்கிரகப் போராட்டங்களுக்கு அடிபணியப்போவதில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை தொடரும்.” – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அரசாங்க புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தடுப்பு காவலில் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார் என வெளியாகும் தகவல்களையும் அவர் அடியோடு நிராகரித்தார். நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் விளக்கமளித்த அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியவை வருமாறு , “தடுப்பு காவலில் இருக்கும் சந்தேக நபரொருவருக்கு வழங்கப்படும் அத்தனை உரிமைகளும் […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் இஸ்ரேல் அட்டூழியம்: 13 பேர் பலி!

  • June 10, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானின் Tyre மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 13 பேர் பேர் பலியாகியுள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். Tirdaba , Deir Qanoun மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த குடியிருப்புப் பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் நிகழ்ந்ததாகத் தகவல்கள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒன்பது வான்வழித் தாக்குதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட Tyre நகரத்தில் மீட்புக் குழுவினர் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் திர்தாபா நகரைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் […]

இலங்கை

பிரபாகரனின் மகன் கொலை செய்யப்பட்டிருந்தால் விசாரணை செய்ய வேண்டும்- ரவூப் ஹக்கீம்!

  • June 10, 2026
  • 0 Comments

ரோஹோன விஜேவீரவின் மகன், சஹ்ரானின் மகன் கொலை செய்யப்படாமல் பாதுகாக்கப்பட்டது போல் பிரபாகரனின் மகனும் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறிள்ளார். இதன்போது மேலும் தெரிவத்த அவர்,   பிரபாகரனின் மகன் கொலை செய்யப்பட்டிருந்தால் அதனை யுத்தக்குற்றமாக கருதி விசாரிக்கப்பட வேண்டும்  வலியுறுத்தியுள்ளார்.  

உலகம்

பிலிப்பைன்ஸில் 2,100இற்கும் மேற்பட்ட பின் அதிர்வுகள் பதிவு – 17 பேர் மாயம்!

  • June 10, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது. 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியதை தொடர்ந்து 2,100-க்கும் மேற்பட்ட பின் அதிர்வுகள் பதிவாகி பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்காரணமாக 600இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் 17 பேர் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 32,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். அதேபோல் 3,100-க்கும் மேற்பட்ட வீடுகள், சாலைகள், பாலங்கள் மற்றும் 100 அரசு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் […]

இலங்கை செய்தி

SriLankan Airlines நிறுவனத்துக்கு புதிய தலைவர் நியமனம்!

  • June 10, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக திமால் அரந்தர Dimal Arandara அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு அந்த நிறுவனத்தின் தற்காலிகத் தலைவராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது நிரந்தரப் பொறுப்பை ஏற்றுள்ளார். இந்தப் புதிய பதவிக்கு முன்னதாக, அவர் திறைசேரியின் பிரதிநிதியாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பணிப்பாளர் சபையில் உறுப்பினராக இருந்துள்ளார்.

இலங்கை செய்தி

வரலாற்று சாதனை படைத்த மோடிக்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து!

  • June 10, 2026
  • 0 Comments

இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவி வகிக்கும் பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில், இந்த மைல்கல் சாதனை என்பது இந்திய மக்கள் அவரது தலைமையின் மீது மீண்டும் மீண்டும் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் பதவிக் காலத்தில் இந்தியா […]

அரசியல் இலங்கை செய்தி

‘இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள்’ – அமெரிக்க தூதுக்குழுவுடன் சஜித் ஆராய்வு!

  • June 10, 2026
  • 0 Comments

  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அமெரிக்க House Democracy Partnership (HDP) தூதுக்குழுவினருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று நடைபெற்றது. நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, இரு தரப்பினரிடையேயான நாடாளுமன்ற ஒத்துழைப்பு, ஜனநாயக ஆட்சி, சட்டவாக்க செயல்முறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டன. அத்துடன், இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. அரச கொள்கை அபிவிருத்தியாக்கம் மற்றும் இலங்கை எதிர்கொள்ளும் சமகால […]

ஐரோப்பா செய்தி

லண்டனில் வாழும் பெண் சமூக ஆர்வலரை குறிவைத்துள்ள சீன உளவாளிகள்?

  • June 10, 2026
  • 0 Comments

லண்டனில் வசிக்கும் முன்னணி சீன சமூக ஆர்வலர் ஒருவரை, பாலியல் நடத்தை கெட்டவராகவும் போதைக்கு அடிமையானவராகவும் சித்தரிக்கும் போலி பதிவுகள் எக்ஸ் தளத்தில் பரப்பட்டன. எனினும், இந்த அவதூறுகள் எலோன் மஸ்க்கின் ‘X’ தளத்தின் விதிகளை மீறவில்லை என்று கூறி அந்த நிறுவனம் நடவடிக்கை எடுக்க மறுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனைத் தளமாகக் கொண்ட China Dissent Network என்ற அமைப்பின் 27 வயது நிறுவனரான Apple Peiqing Ni என்பவர் , சீன அரசு […]

உலகம்

தென்னாப்பிரிக்காவில் 12 பேர் படுகொலை – சந்தேகநபர்கள் தலைமறைவு!

  • June 10, 2026
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் பாரிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. இதில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 09 பேர் காயமடைந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி நேற்று இரவு துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக தெரியவருகிறது. வெள்ளை நிற டொயோட்டா குவாண்டம் வாகனத்தில் சம்பவ இடத்திற்கு வந்த  10இற்கும் மேற்பட்ட நபர்கள் தாக்குதலை நிகழ்த்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத சுரங்கத் தொழிலுடன் தொடர்புடைய பிரச்சினைகளே மேற்படி தாக்குதலுக்கு […]