ஐரோப்பா

ஜெர்மனியில் இடம்பெற்ற தாக்குதல் – தாக்குதல்தாரிக்கு ISIS அமைப்புடன் தொடர்பு

ஜெர்மனியின் பெர்லின் நகரில்  LGBTQ+ நிகழ்விற்காகக் கூடியிருந்த மக்கள் மீது வேன் ஒன்று புகுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த நிகழ்வு ஆரம்பமான சிலமணி நேரங்களிலேயே இடைநிறுத்தப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே தாக்குதல்தாரி தொடர்பான மேலதிக விவரங்களையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். குறித்த நபர் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புடன் தொடர்புப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று பெர்லின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பொலிஸ் செய்தி தொடர்பாளர், நாங்கள் இப்போது ஒரு சந்தேகப்படும் குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளோம். இன்னும் கைது செய்யப்படாத இந்த சந்தேகப்படும் குற்றவாளிக்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

இருப்பினும், இந்த சந்தேகப்படும் குற்றவாளி, பெர்லினில் உள்ள இஸ்லாமியக் குழுவின் உறுப்பினர் என்று காவல்துறைக்கு நன்கு தெரியும்,” எனக் கூறியுள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்